ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’. மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில், நடிகர் ரஜினி கிஷன் பேசியதாவது: “இது எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.
Author: admin
சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்றம், இறக்கம் காணும். அந்தவகையில் சென்னையில் இன்று (அக்.27), 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.91,600-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
புதுடெல்லி: பிஹாரில் முஸ்லிம்கள் சுமார் 20 சதவிகிதம் பேர் உள்ளனர். அதன்படி 45 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த முறை 11 முஸ்லிம்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். இங்கு அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளது. மேலும், இதர பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கான முஸ்லிம் வாக்குகளையும் ஒவைசி கட்சி பிரித்துள்ளது. ஏஐஎம்ஐஎம் கட்சியில் 2020 தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏ.க்களில் 4 பேர் ஆர்ஜேடியில் இணைந்தனர். அவர்கள் இந்த தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட்டனர். எனினும், வேறு புதிய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஏஐஎம்ஐஎம் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்துள்ளது.
சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சுமித் நாகல் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இருந்தேன். ஆனால், எனது விசா விண்ணப்பம் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் எனக்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.சுமித் நாகலின் கோரிக்கைக்கு உடனடியாக சீன தூதரகத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையரில் சுமித் நாகல் 275-வது இடத்தில் உள்ளார். முதல் 100 இடங்களுக்குள் இல்லாததால் சுமித் நாகல், கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் நேரடியாக பங்கேற்க முடியாது. வைல்ட் கார்டு அல்லது தகுதிச் சுற்றுகளின் வாயிலாகவே போட்டிக்குள் நுழைய முடியும்.
சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா விரும்புகிறது. பொதுவாக சர்வாதிகாரிகள் மக்களின் கருத்துகள், ஊடகங்களின் செய்திகள் குறித்து துளியும் கவலைப்படுவது கிடையாது. அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணியாற்றியது.பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்கினோம். அவர் ஆட்சியில் இருந்தபோது ஒரு வாரத்தில் பலமுறை சிஐஏ அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது வழக்கம். அமெரிக்கா என்ன சொன்னாலும் அதை முஷாரப் அப்படியே செயல்படுத்துவார்.
திருக்குறளின் மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன், இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விரிவான உள்ளடக்கத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, சென்னையின் ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழமையான ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், தேர்ந்தெடுத்த திருக்குறள்களை விளக்கும் கிராஃபிக்ஸ் விவரணைக் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் இந்த ஆவணப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். தயாரிப்பில் உறுதுணையாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார். வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்துகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் வழங்கிய வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. பலதரப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த படிவத்தினை திரும்ப பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இப்படிவத்தை பூர்த்தி செய்ய வேலைக்குச் செல்லாமல் ஒரு நாள் செலவிட வேண்டியுள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுகிறது. மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த விவரம் கேட்டக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை கிராம மக்கள் பலர் எடுக்க முடியவில்லை. பல நேரம் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.எனவே, ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கும் உரிமையை பறிக்காமல், எளிதாக வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக் கூடாது. இதில், தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள குழப்பங்களுக்களை நீக்கி எளிய வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு பவுன் ரூ.90.400-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.
