கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 125 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். டி 20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகளும் இன்று (16-ம் தேதி) கடைசி மற்றும் 3-வது ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் வெங்கடேஷ் பிரசாத்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில்…
Author: admin
சிவகங்கை: மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது கடந்த 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ளோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2023 செப்டம்பரில் இருந்து மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்றவர்களுக்கு ரூ.1,200-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு, முதலில் உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மட்டும்வழங்கப்படுகிறது. பின்னர் ஓராண்டு கழித்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை அனுமதிக்கப்படுகிறது. முதியோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படவில்லை. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த காலங்களில் உதவித்தொகை தாமதமாக வழங்கத் தொடங்கினாலும், ஆணை பெற்ற மாதத்தில் இருந்து நிலுவைத்தொகையும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது நிலுவைத்தொகையும் வழங்குவதில்லை. இதனால் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாற்றுத்…
சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாள் மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன. அதன்படி, நேற்று அதிகாலை 3 மணி வரை வழக்க மாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,160 சிறப்புப் பேருந்துகளும் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில், 1.78 லட்சம் பேர் பயணம் செய்தனர். முன்பதிவு எண்ணிக்கை சென்னை, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்றும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகள் வாயிலாக சுமார் 3 லட்சம் பேர் பயணமாகினர். இதேபோல், நாளைய தினம் ஊர் திரும்ப சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 715 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு எண்ணிக்கை…
போதிய தூக்கத்துடன் நீடித்த மன அழுத்தம், உடல் அளவிலான அழற்சிக்கு வழிவகுக்கிறது. உங்கள் உடல் மன அழுத்தத்தை அனுபவிக்கும் போது வீக்கத்தை செயல்படுத்தும் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் ரசாயனங்களை உருவாக்குகிறது. உங்கள் நரம்பு மண்டலம் அடிப்படை மன அழுத்த-மேலாண்மை நுட்பங்கள் மூலம் அமைதியைக் காணலாம், இதில் தியானம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றுடன் ஆழ்ந்த சுவாசம், அத்துடன் வெளியில் நேரத்தை செலவிடுவது ஆகியவை அடங்கும். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணிநேரம் போதுமான தூக்க நேரம், வீக்கத்தை மிகவும் திறம்பட போராடும்போது உங்கள் உடலை மீட்க உதவுகிறது. ஒரு நிதானமான படுக்கை நேர அட்டவணையை உருவாக்க, படுக்கைக்கு முன் மின்னணு திரைகளிலிருந்து விலகி, உங்கள் தூக்கப் பகுதி அமைதியாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்க.ஆதாரங்கள் மற்றும் குறிப்புகள்:மெடான்டா, “உங்கள் உணவில் சேர்க்க 10 சிறந்த அழற்சி எதிர்ப்பு உணவுகள்”: https://www.medanta.org/patient-ducation-blog/10-best-anti-அழற்சி-உணவு-க்கு-குறைப்பு-தீங்குஆர்த்ரிடிஸ் அறக்கட்டளை, “அழற்சி எதிர்ப்பு உணவு செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாதவை”:…
புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ-16 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அனைத்து ஹெலிகாப்டர்களிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடி பறந்தது. இதை தொடர்ந்து, பிரதமர் நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு, பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, காலையில் மகாத்மாகாந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார். தலைமை தளபதி, முப்படை தளபதிகள்,…
இந்த மூளை கிண்டல் ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் காட்சி உணர்வை சோதிக்கவும்! “எல்.எல்.எல்” வடிவங்களின் கடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு “லில்” உள்ளது. 7 வினாடிகளுக்குள் வஞ்சகனைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த சவால் உங்கள் கண்காணிப்பு திறன்களையும் கவனத்தையும் விவரங்களுக்கு வழங்குகிறது, இது ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள மூளை வொர்க்அவுட்டாக அமைகிறது. ஆப்டிகல் மாயைகள் வேடிக்கையானவை மட்டுமல்ல, அவை உங்கள் மூளை மற்றும் கண்களுக்கான அருமையான பயிற்சி. இன்றைய சவால் ஒரு ஏமாற்றும் எளிமையான ஒன்றாகும், ஆனால் அது உங்களை முட்டாளாக்க விடாதீர்கள். முதல் பார்வையில், படம் சுத்தமாக வரிசைகளில் மீண்டும் மீண்டும் “III” இன் ஒத்த வடிவங்களால் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்த தடுமாற்றத்தில் எங்காவது மறைக்கப்பட்டிருப்பது ஒரு ஒற்றை வஞ்சகர், மழுப்பலான “III.”பட கடன்: இந்துஸ்தான் டைம்ஸ்உங்கள் பணி? மறைக்கப்பட்ட “III” ஐ வெறும் 7 வினாடிகளுக்குள் கண்டறியவும்.இது எளிதானது என்று தோன்றலாம், ஆனால் இங்கே…
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார். சென்னையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார். ரூ.10 லட்சம் விருதுத் தொகை, சான்றிதழும் வழங்கப்பட்டது. இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் விருதும், துளசிமதி முருகேசனுக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டன. விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கமும் வழங்கப்பட்டது. நல்ஆளுமை விருது: பின்னர், பல்வேறு பிரிவுகளில் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டுவரும்…
சென்னை: கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டம், மலைப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பது உட்பட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றும் அரசே திமுக அரசு. சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி-ஒளி காட்சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராஜர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 11.19 சதவீதமாக அதிகரித்து, பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு…
சென்னை: மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால் நானும் ஓய்வெடுக்க போவதில்லை.; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன அட்டூழியங்களை பிஹாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில்…
சென்னை: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது, துணைவேந்தர் நியமன விவகாரம் ஆகியவற்றில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து, செயல்பட்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடைபெறும் அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு குடியரசுத்…