ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், இதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக. 14-ல் ரிலீஸாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக ஆமிர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை நடிகர் ஆமிர்கான் மறுத்துள்ளார். “கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. நான் ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை” என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
Author: admin
ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லைப் பகுதியான தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனையில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர். இந்திய கடலோரக் காவல்படை முகாம் சார்பில் தனுஷ்கோடி கடல் பகுதியில் சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது. அப்போது ஃஹோவர் கிராப்ட் ரோந்துப் படகில், தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்தனர். தொடர்ந்து, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கொடியேற்று விழா நடைபெற்றது. மேலும், தனுஷ்கோடி கடற்பகுதியில் மூவண்ணக் கொடியை பிடித்துக் கொண்டு கடலோரக் காவல் படை வீரர்கள் நீச்சல் அடித்தனர். அதேபோல, பாம்பன் சாலைப் பாலத்தில் தேசியக் கொடியுடன் இந்திய கடலோரக் காவல் படையினர் அணிவகுத்து நின்றனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்த கடலோர காவல் படை…
கல்லீரல் நோய்கள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன, தலைகீழ் மாற்றுவது கடினமாக இருக்கும்போது பெரும்பாலும் தாமதமாக கண்டறியப்படுகிறது. இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சேத்தி கல்லீரலின் மீளுருவாக்கம் திறனை எடுத்துக்காட்டுகிறார், நாள்பட்ட சேதம் மீளமுடியாத வடுவுக்கு வழிவகுக்கிறது என்று எச்சரிக்கிறார். கல்லீரல் ஆரோக்கியத்திற்கான காபியின் நன்மைகளை அவர் வலியுறுத்துகிறார், தினமும் 3+ கப் சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான 40% குறைவான அபாயத்துடன் இணைக்கிறார். டாக்டர். கல்லீரல் நோய்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன, பெரும்பாலும், மக்கள் பிற்கால கட்டங்களில் கண்டறியப்படுகிறார்கள், அங்கு தலைகீழ் தந்திரமானதாக மாறும். வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், நச்சுத்தன்மை மற்றும் வைட்டமின் சேமிப்பு உள்ளிட்ட உடலில் உள்ள முக்கியமான செயல்பாடுகளுக்கு கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பு ஆகும். கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட போர்டு சான்றளிக்கப்பட்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி இப்போது கல்லீரல் ஆரோக்கியம் குறித்த சில முக்கியமான உண்மைகளைப்…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை. இருவரும் பங்கேற்காதது குறித்து அவர்களிடம் இருந்தோ அல்லது காங்கிரஸ் கட்சியிடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. என்றாலும் கடந்த ஆண்டு இருக்கை ஏற்பாட்டில் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததால் அவர் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க வில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தலைவர்களும் சமூக ஊடகம் மூலம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு புகழாரம் செலுத்தி, குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அதேவேளையில் இந்திரா பவனில் நடைபெற்ற விழாவில் ராகுல் பங்கேற்றார்.
சென்னை: அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து தாயுமானவர் திட்டமாக திமுக செயல்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்சியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு பிப். 19-ம் தேதி சமர்ப்பித்த தமிழக பட்ஜெட்டில் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 18 மாதம் தாமதமாக, திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில், அறிவித்தபடி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குதல்…
ஸ்கைஸ்கேனரின் பயண போக்குகள் அறிக்கை 2025 இன் படி, ஷில்லாங் இந்தியாவின் அதிகம் தேடப்பட்ட பயண இடமாக பட்டியலில் முதலிடம் பிடித்ததில் ஆச்சரியப்பட்டார். வடகிழக்கு அழகு மற்றும் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் கோவா மற்றும் மணாலி போன்ற ஹெவிவெயிட்களை வீழ்த்தி கிரீடத்தை எடுத்துக் கொண்டார்.
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வந்தது. போட்டியின் 9-வது நாளான நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 8-வது சுற்றின் முடிவிலேயே 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதிய ஆட்டம் 49-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதேபோன்று அமெரிக்காவின் அவாண்டர்…
மதுரை: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்க உரிய அதிகாரிகளை அணுகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிக்கும் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான கருத்துகள் பெற உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு 2019 ஜூலை 31-ல் அறிவித்தது. ஆனால் இதுவரை உயர்மட்டக் குழு அமைக்கவில்லை. எனவே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பது தொடர்பான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில்,…
சென்னை: அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக மாதிரிப் பள்ளி திட்டம் 2021-22-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிசிடிவி கேமரா, முழுமையான உப கரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், நுண்கலைத்திறன் பயிற்சி, உண்டு உறைவிட வசதிகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இதற்கிடையே, இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஐஐடி போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1,878…
கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 125 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். டி 20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகளும் இன்று (16-ம் தேதி) கடைசி மற்றும் 3-வது ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் வெங்கடேஷ் பிரசாத்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில்…