சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக வெளியாகும். அதை அடிப்படையாக கொண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்வார்கள்.
Author: admin
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, அந்த நாட்டின் உயர்நிலைக் குழுவாக கருதப்படுகிறது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி கடந்த 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் நேற்று நிறைவுப் பெற்றது. இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஹீ வெய்டோங்கின் பதவி நீக்கத்துக்கு மத்திய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராணுவத்தின் ஊழல் தடுப்பு துறை தலைவராக ஜாங் ஷெங்மின் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பார்.
துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், பாக்யஸ்ரீ போர்சே. மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், ராணா, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானை, உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி என்று பாக்யஸ்ரீ போர்சே பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து, என்னைப் போன்ற ஒரு புதுமுகத்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜுக்கு நன்றி. அவர்தான் எனது முதல் ஆசிரியர், இயக்குநர். நடிகர் ராணா இந்தப் படத்தின் முதல் நாளிலிருந்தே எனக்கு ஆதரவளித்து வருகிறார். ஒரு நடிகராக இந்தப் பயணத்தில் அவரை எனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பது அதிர்ஷ்டம். அவர் ஆதரவும் நிலையான வழிகாட்டுதலும் இல்லாமல், என்னால் சிறப்பாக நடித்திருக்க முடியாது.
சென்னை: சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்பட்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியதால், 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக சேவைக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்துக்கு 3.12 ஏக்கர் நிலம் அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என வாஷிங்டன் போஸ்ட் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை.
ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமணம் ஏமாற்று வதந்திகள் மற்றும் ஸ்மிருதியின் அணியினரின் சமூக ஊடக செயல்பாடுகள் என சர்ச்சையில் மூழ்கியுள்ளது. குழு உறுப்பினர்கள் திருமண இடுகைகளை அகற்றிவிட்டு, பலாஷைப் பின்தொடரவில்லை, அதே சமயம் ரகசிய மேற்கோள்கள் மற்றும் பிற பெண்களுடன் மீண்டும் வெளிவந்ததாகக் கூறப்படும் உரையாடல்கள் நாடகத்தை தீவிரப்படுத்தியுள்ளன, இதனால் ரசிகர்கள் ஒவ்வொரு ஆன்லைன் நகர்வையும் பிரித்தெடுக்கிறார்கள். ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமண நாடகம் இணையத்தில் இடம் பெற்றுள்ளது, நேர்மையாக, ஒவ்வொரு மணி நேரமும் ஒரு புதிய திருப்பம் இருப்பதைப் போல உணர்கிறது. இந்த ஜோடிக்கு ஒரு அழகான, கொண்டாட்டமான தருணமாக இருக்க வேண்டிய விஷயம் முழுக்க முழுக்க ஆன்லைன் காட்சியாக மாறியுள்ளது. பலாஷ் பல பெண்களுடன் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டும் வதந்திகள் வரை, திருமணத்தை நல்லபடியாக நிறுத்துவது பற்றிய கிசுகிசுக்கள் வரை, ரசிகர்களால் பேசுவதை நிறுத்த முடியாது. Reddit பற்றிய கலந்துரையாடல் நூல்கள்…
பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்களின் புத்தொழில் – அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ‘சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான புத்தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 38 தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர் பட்டோயே, நியூஸிலாந்தின் ஷவுனா லியுடன் மோதினார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்டோயே 17-21 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.
லண்டன்: சிறுவர்களுக்கான கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு, அடுத்தாண்டு முதல் தொடங்கப்படுவதாக புக்கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்படும் சிறந்த புனைக் கதை புத்தகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் புக்கர் பரிசு என்ற இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்கப்படுகிறது.
