கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பிரபல மலையாள நடிகர் பிஜு குட்டன் காயமடைந்தார். பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பிஜு குட்டன். இவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காகக் கோயமுத்தூரிலிருந்து ஒரு காரில் கொச்சிக்கு பிஜு குட்டன் சென்று கொண்டிருந்தார். பாலக்காடு அருகிலுள்ள வடக்கமுறியில் நேற்று காலை 6 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். பிஜு குட்டன் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்காட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு கார் ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Author: admin
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கட்சியின் செங்கொடியை மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…
பிடிவாதமான காதல் கைப்பிடிகள் வெறுப்பாக இருக்கும், ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவக்கூடும். பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரையை குறைப்பது மிக முக்கியம். வெண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை இணைப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. எளிய நடவடிக்கைகள் மூலம் தினசரி இயக்கத்தை அதிகரிப்பது மற்றும் நினைவாற்றல் நுட்பங்களுடன் மன அழுத்தத்தை நிர்வகிப்பது நன்மை பயக்கும். பல வாரங்கள் தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகும், இடுப்பின் பக்கங்களில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு, பெரும்பாலும் காதல் கைப்பிடிகள் என்று அழைக்கப்படுகிறது, இது வருவதை மறுக்கிறது. இது உண்மையில் ஒரு சுகாதார கண்ணோட்டத்தில் ஒரு சிக்கலான கொழுப்பு வைப்பு அல்ல என்றாலும், பலருக்கு, இந்த மஃபின் டாப் கொழுப்பு கவலைக்கு ஒரு காரணம். இந்த கொழுப்பு பெரும்பாலும் விடுபட கடினமாக உள்ளது. ஆனால் வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களுடன், காதல் கையாளுதல்களை இழப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் அதை அடைய முடியும்.…
புதுடெல்லி: இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை அனுப்பி உள்ளார். அதில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தகுதிவாய்ந்த மரியாதைக்குரிய நாடாக விளங்குகிறது. இந்திய – ரஷ்ய உறவு மிகவும் சிறப்பானது, முன்னுரிமையை அடிப்படையாக கொண்டது, பாதுகாப்புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று புதின் கூறியிருக்கிறார். சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பெற்றுள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகுந்த…
பிரபல ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் (70), எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 என பல படங்களில் நடித்துள்ளார். 9 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட டென்ஸல் வாஷிங்டன், ‘குளோரி’, ‘ட்ரெய்னிங் டே’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் இப்போது அளித்துள்ள பேட்டியில், ஆஸ்கர் விருதுகள் மீது ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். அவர் கூறும்போது, “ நான் விருதுகளைப் பெறுவதற்காகப் படங்களைத் தேர்வு செய்வதில்லை. அதுபோன்ற விஷயங்களில் எனக்கு ஆர்வமும் கவலையுமில்லை. என் கடைசிக் காலத்தில் ஆஸ்கர் விருதுகள் எனக்கு எந்த நல்ல விஷயத்தையும் செய்யப் போவதில்லை என்றே நினைக்கிறேன். மனிதன் விருதைத் தருகிறான், கடவுள் வெகுமதியைத் தருகிறான்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை: பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் சுதந்திர தின விழா உரையில், தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பிஹார் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றாலும்கூட, அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதால் வரவேற்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக விசிக தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுத் துறை தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். தனியார் மயமாக்கக்கூடாது என்று தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இப்பிரச்சினையை…
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) காவிரி அசட் நிர்வாக அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், ஓஎன்ஜிசி செயல் இயக்குநரும், காவிரி அசட் மேலாளருமான உதய்பாஸ்வான் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவலர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 700 டன் என்ற நிலையில் இருந்து 600 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தால் பராமரிப்புப் பணிகளைக்கூடமேற்கொள்ள முடியவில்லை. டெல்டா அல்லாத மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக துரப்பண பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் துரப்பண பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். நிலக்கரிக்கு மாற்றாக…
சரி, தொப்பை கொழுப்பைச் சுற்றியுள்ள முட்டாள்தனத்தின் வழியாக நேராக வெட்டுவோம், சில பயிற்சிகள் உங்கள் தொப்பை கொழுப்பை மாயமாக “உருக்கும்” என்ற எப்போதும் பிரபலமான யோசனை. யாராவது சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், “இன்னும் நெருக்கடிகள் அல்லது பலகைகளைச் செய்யுங்கள், நீங்கள் உங்கள் குடலை இழப்பீர்கள்,” நீங்கள் தனியாக இல்லை. ஆனால் உண்மையான கதை என்ன?
பல தசாப்தங்களாக, நியூரோ-பொறியாளர்கள் மொழி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார்கள். அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்க்லரோசிஸ் அல்லது ஏ.எல்.எஸ் போன்ற ஒரு நோய் காற்றுப்பாதையில் உள்ள தசைகளை பலவீனப்படுத்துகிறது. ஒரு பக்கவாதம் பொதுவாக பேசுவதற்கான கட்டளைகளை ரிலே செய்யும் நியூரான்களைக் கொல்லலாம். ஒருவேளை, மின்முனைகளை பொருத்துவதன் மூலம், விஞ்ஞானிகள் மூளையின் மின்சார செயல்பாட்டைப் பதிவுசெய்து அதை பேசும் சொற்களாக மொழிபெயர்க்கலாம்.இப்போது ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த இலக்கை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மக்கள் பேச முயற்சித்தபோது தயாரிக்கப்பட்ட சமிக்ஞைகளை டிகோடிங் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர். புதிய ஆய்வில், வியாழக்கிழமை ஜர்னல் கலத்தில் வெளியிடப்பட்டது, பாடங்கள் சொற்களைச் சொல்வதை கற்பனை செய்தபோது அவர்களின் கணினி பெரும்பாலும் சரியான யூகங்களை உருவாக்கியது.ஆராய்ச்சியில் ஈடுபடாத நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹெர்ஃப், இதன் விளைவாக வெறும் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் மொழியின் மர்மத்தை…
புதுடெல்லி: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியது. ஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் ன்றாக நினைவுகூரப்படும். நாங்கள் யாருடைய இடத்தையும் ஆக்கிரமிக்க மாட்டோம். ஆனால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம். நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு சரியான பதிலடி இது. நமது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொருளாதார மேலாண்மை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.