Author: admin

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் கட்சி கிடையாது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சி தான் முதன்மை கட்சி. தமிழகத்தில் 1991-96ல் ஆட்சியில் இருந்த முதன்மை கட்சியின் நிலை, 1996 தேர்தலில் என்ன ஆனது, அவர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றார்கள். கட்சி தலைமை பொறுப்பு வகித்த ஜெயலலிதாவே, தோற்றார்.

Read More

சென்னை: உதவிப் பே​ராசிரியர் பணிக்​கான 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் காலஅவ​காசம் அக்​.27-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகம் மற்​றும் கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்சி படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வு தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதில் சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.

Read More

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.அது சரி, இதையெல்லாம் கேப்டன் சூரியகுமார் யாதவ் தானே பேச வேண்டும். பயிற்சியாளர் கம்பீர் டீம் பேட்டிங் டவுன் ஆர்டர் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்?. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி ஷுப்மன் கில்லுடையது, டி20 சூரியகுமார் யாதவுடையது என்று அன்று வாய் கிழிய செய்தியாளர்களிடம் கூறிய கம்பீர் இப்போது டவுன் ஆர்டர் பற்றி கூறுவதைப் பார்த்தால் உள்ளுக்குள்ளிருந்து கேப்டன்சியையும் கம்பீர்தான் செய்கிறார் என்பது நிரூபணமாகிறது.

Read More

ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ரக கொசுக்கள் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தென்படுபவை. ஆனால், இவை எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த…

Read More

பாலிவுட்​ திரைப்​பட இயக்​குநர்​ ஆனந்​த்​.எல்​.ராய்​ இயக்​கத்​தில்​ தனுஷ் நடித்​துள்​ள படம்​, ‘தேரே இஷ்க்​ மே’. இதில்​ தனுஷ், சங்​கர்​ என்​ற கதாபாத்திரத்திலும்​ கீர்​த்​தி சனோன்​, முக்​தி என்​ற கேரக்​டரிலும்​ நடித்​துள்​ளனர்​. ஏ.ஆர்​.ரஹ்​மான்​ இசை அமைத்​துள்​ளார்​. இந்​தி, தமிழில்​ உருவாகியுள்​ள இந்​தப்​ படம்​ நவ.28-ல்​ வெளி​யாக இருக்​கிறது. வாராணசி பின்​னணியில்​ உருவாகியுள்​ள ​காதல்​ கதையை கொண்​ட இப்​படத்​தில்​ பிரபுதேவா முக்​கிய க​தா​பாத்​திரத்​தில்​ நடித்​துள்​ளார்​. இத்​தகவல்​ இப்​போது வெளியாகியுள்ளது.

Read More

அதனால், குறிப்​பிட்ட கலங்​கல் பகு​தி​யில் உயர்​மட்ட பாலம் அமைக்க வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் பல ஆண்​டு​களாக கோரிக்கை விடுத்து வந்​தநிலை​யில், பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் நகர உள்​கட்​டமைப்பு மேம்​படுத்​தும் திட்​டத்​தில் ரூ.75 லட்​சம் நிதி ஒதுக்​கப்​பட்​டது. இதன்​மூலம், தற்​போது 350 மீட்​டர் நீளத்​துக்கு சிறிய அளவி​லான உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. கட்​டு​மான பணி​கள் வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என கூறப்​பட்​டுள்​ளது.இதுகுறித்​து, மாதுளங்​குப்​பத்தை சேர்ந்த பானு கூறிய​தாவது: கலங்​கலில் உபரிநீர் வெளி​யேறும்​போது பள்ளி செல்​லும் மாணவ, மாணவி​கள் அப்​பகு​தியை கடந்த செல்​வதற்கு அச்​சப்​பட்டு வீட்​டிலேயே முடங்​கும் நிலை இருந்​தது. தற்​போது, பேரூ​ராட்சி நிர்​வாகம் அப்​பகு​தி​யில் மேம்​பாலம் அமைப்​ப​தற்​கான கட்​டு​மான பணி​களை தொடங்​கி​யிருப்​பது மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது என்​றார்​.

Read More

வர்த்தக ஒப்​பந்​தங்​கள் வெறும் சந்தை அணுகல் மற்​றும் வரி​கள் பற்​றியது மட்​டுமல்ல. மாறாக நம்​பிக்​கை, நீண்ட கால உறவு​களை உரு​வாக்​குதல் மற்​றும் உலகளா​விய வணிக ஒத்​துழைப்​புக்​கான நிலை​யான கட்​டமைப்​பு​களை உரு​வாக்​குதல் பற்​றியது என்​பதை நினை​வூட்ட விரும்​பு​கிறேன்.சந்தை அணுகல், சுற்​றுச்​சூழல் தரநிலை மற்​றும் மூல விதி​கள் ஆகிய​வற்​றில் வேறு​பாடு​கள் இருந்​த​போ​தி​லும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துடன் நீண்ட கால​மாக நிலு​வை​யில் இருக்​கும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தியா தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

Read More

பொட்டாசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், இது உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, மேலும் சரியான நரம்பு சமிக்ஞையை ஆதரிக்கிறது, இதயத் துடிப்பு உட்பட ஆரோக்கியமான இதய தசை சுருக்கங்களை ஊக்குவிக்கிறது. NIH படி, 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களில், சராசரியாக வயது வந்தோர் உட்கொள்ள வேண்டும், உணவில் இருந்து சராசரியாக தினசரி பொட்டாசியம் உட்கொள்ளல் ஆண்களுக்கு 3,016 mg மற்றும் பெண்களுக்கு 2,320 mg ஆகும். தவறினால் – நமது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாழைப்பழங்கள் பெரும்பாலும் பொட்டாசியத்திற்கான வசதியான மற்றும் செல்லக்கூடிய ஆதாரமாகக் கருதப்பட்டாலும், இந்திய உணவுப் பொருட்கள் பலவிதமான பொட்டாசியம் நிறைந்த விருப்பங்களை வழங்குகின்றன, அவை ஒரு சேவைக்கு பொட்டாசியம் உள்ளடக்கத்தில் அதிகமாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய தாது ஆகும், இது திரவ சமநிலையை சீராக்க உதவுகிறது, சாதாரண தசை மற்றும்…

Read More

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது. இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிறுமி நேற்று உயிரிழந்தார். குழந்தைகள் தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர், பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

Read More

காட்​டாங்​கொளத்​தூர்: ​வாழ்க்​கை​யில் பண்​புள்​ளவர்​களாக நடந்​து​கொள்ள வேண்​டும் என்று நீதிபதி மு.கற்​பக​வி​நாயகம் மாணவர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். எஸ்​ஆர்​எம் பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் தமிழ்ப்​பே​ரா​யம் விருதுகள் வழங்கப்படு ​கின்​றன. சிறுகதைகள், அறி​வியல், நாடகம், மொழிபெயர்ப்பு என பல்​வேறு துறை​களில் சிறந்த நூல்​களைத் தேர்வு செய்​து, 11 படைப்​பாளி​களுக்கு தமிழ்ப்​பே​ரா​யம் விருதும், பணமுடிப்​பும் வழங்​கப்​படும். இதன்படி, 15-வது ஆண்டு விருது வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. தமிழ்ப்​பே​ரா​யம் புர​வலரும், எஸ்​ஆர்​எம் பல்​கலை. வேந்தரு​மான பாரி வேந்​தர் தலைமை வகித்​தார். தமிழ்ப்​பே​ரா​யம் தலை​வர் கரு.​நாக​ராசன் வரவேற்​றார். மொத்​தம் 11 தலைப்புகளில், ரூ.11.90 லட்​சம் மதிப்​பிலான தமிழ்ப்​பே​ராய விருதுகளை ஜார்க்​கண்ட் மாநில உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி மு.கற்​பக​ வி​நாயகம் வழங்​கி​னார்.

Read More