அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் கட்சி கிடையாது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சி தான் முதன்மை கட்சி. தமிழகத்தில் 1991-96ல் ஆட்சியில் இருந்த முதன்மை கட்சியின் நிலை, 1996 தேர்தலில் என்ன ஆனது, அவர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றார்கள். கட்சி தலைமை பொறுப்பு வகித்த ஜெயலலிதாவே, தோற்றார்.
Author: admin
சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் அக்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலையை அடைந்து வருகிறது. காரணம் பவர் ஹவுஸ் பேட்டிங் வரிசையே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன நினைத்து பேட்டரை இறக்குகிறார் என்பதை கவுதம் கம்பீர் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.அது சரி, இதையெல்லாம் கேப்டன் சூரியகுமார் யாதவ் தானே பேச வேண்டும். பயிற்சியாளர் கம்பீர் டீம் பேட்டிங் டவுன் ஆர்டர் பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்?. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி ஷுப்மன் கில்லுடையது, டி20 சூரியகுமார் யாதவுடையது என்று அன்று வாய் கிழிய செய்தியாளர்களிடம் கூறிய கம்பீர் இப்போது டவுன் ஆர்டர் பற்றி கூறுவதைப் பார்த்தால் உள்ளுக்குள்ளிருந்து கேப்டன்சியையும் கம்பீர்தான் செய்கிறார் என்பது நிரூபணமாகிறது.
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ரக கொசுக்கள் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தென்படுபவை. ஆனால், இவை எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த…
பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. வாராணசி பின்னணியில் உருவாகியுள்ள காதல் கதையை கொண்ட இப்படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அதனால், குறிப்பிட்ட கலங்கல் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில், பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் நகர உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், தற்போது 350 மீட்டர் நீளத்துக்கு சிறிய அளவிலான உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாதுளங்குப்பத்தை சேர்ந்த பானு கூறியதாவது: கலங்கலில் உபரிநீர் வெளியேறும்போது பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அப்பகுதியை கடந்த செல்வதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை இருந்தது. தற்போது, பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் சந்தை அணுகல் மற்றும் வரிகள் பற்றியது மட்டுமல்ல. மாறாக நம்பிக்கை, நீண்ட கால உறவுகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய வணிக ஒத்துழைப்புக்கான நிலையான கட்டமைப்புகளை உருவாக்குதல் பற்றியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.சந்தை அணுகல், சுற்றுச்சூழல் தரநிலை மற்றும் மூல விதிகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பொட்டாசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், இது உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, மேலும் சரியான நரம்பு சமிக்ஞையை ஆதரிக்கிறது, இதயத் துடிப்பு உட்பட ஆரோக்கியமான இதய தசை சுருக்கங்களை ஊக்குவிக்கிறது. NIH படி, 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களில், சராசரியாக வயது வந்தோர் உட்கொள்ள வேண்டும், உணவில் இருந்து சராசரியாக தினசரி பொட்டாசியம் உட்கொள்ளல் ஆண்களுக்கு 3,016 mg மற்றும் பெண்களுக்கு 2,320 mg ஆகும். தவறினால் – நமது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாழைப்பழங்கள் பெரும்பாலும் பொட்டாசியத்திற்கான வசதியான மற்றும் செல்லக்கூடிய ஆதாரமாகக் கருதப்பட்டாலும், இந்திய உணவுப் பொருட்கள் பலவிதமான பொட்டாசியம் நிறைந்த விருப்பங்களை வழங்குகின்றன, அவை ஒரு சேவைக்கு பொட்டாசியம் உள்ளடக்கத்தில் அதிகமாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய தாது ஆகும், இது திரவ சமநிலையை சீராக்க உதவுகிறது, சாதாரண தசை மற்றும்…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது. இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிறுமி நேற்று உயிரிழந்தார். குழந்தைகள் தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர், பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
காட்டாங்கொளத்தூர்: வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி மு.கற்பகவிநாயகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கப்படு கின்றன. சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, 11 படைப்பாளிகளுக்கு தமிழ்ப்பேராயம் விருதும், பணமுடிப்பும் வழங்கப்படும். இதன்படி, 15-வது ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்ப்பேராயம் புரவலரும், எஸ்ஆர்எம் பல்கலை. வேந்தருமான பாரி வேந்தர் தலைமை வகித்தார். தமிழ்ப்பேராயம் தலைவர் கரு.நாகராசன் வரவேற்றார். மொத்தம் 11 தலைப்புகளில், ரூ.11.90 லட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகளை ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பக விநாயகம் வழங்கினார்.
