Author: admin

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 7 இடங்​களில் நேற்று நடை​பெற்ற ரேபிஸ் நோய் தடுப்​பூசி முகாமில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​கள் வளர்ப்​ப​தற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக தங்​கள் விவரங்​களை பதிவு செய்​து, ரேபிஸ் நோய் தடுப்​பூசி போட்​டுக்​கொண்​டு, மைக்ரோ சிப் பொருத்​திக்​கொள்ள வேண்​டும். செல்​லப் பிராணி உரிமை​யாளர்​கள் வலை​தளத்​தில் சென்று பதிவுச் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

Read More

சென்னை: சென்னையில் நேற்று (அக்.22) ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு மொத்தமாக ரூ.3680 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையானது.

Read More

பெரும்பாலான பிரபல மோதிரங்கள் பரிச்சயமான சூத்திரங்களைப் பின்பற்றும் போது – பெரிய சொலிடர்கள், புத்திசாலித்தனமான ஒளிவட்டம் மற்றும் நேரத்தைச் சோதித்த வெட்டுக்கள், சமந்தாவின் மோதிரம் ஒவ்வொரு வடிவத்தையும் உடைக்கிறது. இன்ஸ்டாகிராமில் பிரபலங்களின் ஆபரணங்களை டீகோடிங் செய்வதில் பெயர் பெற்ற ஜூவல்லரி வர்ணனையாளர் பிரியன்ஷு கோயல், மோதிரத்தை கவனமாக ஆய்வு செய்ய நேரத்தை எடுத்துக் கொண்டார், மேலும் அவர் படித்த மிகவும் அசாதாரண வடிவமைப்புகளில் இதுவும் ஒன்று என்று ஒப்புக்கொண்டார். முதல் பார்வையில் மோதிரம் அதன் சிக்கலான தன்மையைக் கொடுக்காததால், ரசிகர்கள் அதன் அமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சித்து, கருத்துகளை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். இது நவீனமாகவும், சிற்பமாகவும், கிட்டத்தட்ட அணியக்கூடிய கலைப் பகுதியைப் போலவும் இருக்கிறது.

Read More

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், துமகூரு மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம் முழு​வதும் பயணம் செய்து லட்​சக்​கணக்​கான மரங்​களை நட்​டார். இதனால் மரங்​களின் தாய் என சாலுமரத திம்​மக்கா அழைக்​கப்​பட்​டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்​திய அரசு பத்​மஸ்ரீ விருது வழங்​கி​யுள்​ளது.முது​மை​யின் காரண​மாக திம்​மக்கா பெங்​களூரு​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். இதைத்​தொடர்ந்து கலா கிராமத்​தில் முழு அரசு மரி​யாதை​யுடன் திம்​மக்​கா​வின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

Read More

சென்னை: நடப்​பாண்டு இலவசக் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) சேர்க்​கைக்கு 82,016 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இதற்​கான குலுக்​கல் தேர்வு முறை அக்​.31-ல் நடை​பெறும் என பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இலவசக் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனியார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்​படு​வார்​கள். இதன்படி, தமிழகத்​தில் இது​வரை 5 லட்​சம் குழந்தைகள் தனி​யார் பள்​ளி​களில் படிக்கின்​றனர். இந்த திட்​டத்​துக்​கான நிதியை மத்​திய அரசு வழங்​காத​தால், 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கானமாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்​வித் துறை நிறுத்தி வைத்​திருந்​தது. இதுகுறித்த வழக்​கில் உயர் நீதி​மன்​றமும் உச்ச நீதி​மன்​ற​மும் அறி​வுறுத்தியதை யடுத்து மத்​திய அரசு நிதியை விடு​வித்​தது. இதையடுத்து பள்​ளி​களில் ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்ட மாணவர்​களில் தகு​தி​யானவர்​களை ஆர்​டிஇ ஒதுக்​கீட்​டில் பதிவு செய்ய வேண்​டுமென அறி​வுறுத்​தப்​பட்​டது. அதன்​படி, மாநிலம் முழு​வதும் உள்ள 7,717 பள்​ளி​களில் எல்​கேஜிவகுப்​பில் 81,927 குழந்தைகளும், ஒன்​றாம் வகுப்​பில் சேர 89 பேரும் விண்​ணப்​பித்​தனர்.

Read More

புதுடெல்லி: பெங்களூரு​வில் உள்ள மீகோ கார்​டோபியா சர்க்​யூட்​டில் எஃப்​எம்​எஸ்​சிஐ இந்​தி​யன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்​டிங் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதில் டெல்லி பப்​ளிக் பள்​ளி​யில் படித்து வரும் 9 வயது மாண​வி​யான அர்ஷி குப்தா சாம்​பியன் பட்​டம் வென்​றார். இதன் மூலம் தேசிய கார்ட்​டிங்​கில் சாம்​பியன் பட்​டம் வென்ற முதல் வீராங்​கனை என்ற சாதனையை அர்ஷி படைத்​தார்​.

Read More

புதுடெல்லி: ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது. காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில் ஒரு​வ​ரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்​கி​னார்.

Read More

இந்​தப் படத்​தின் கதை​யில் சில இடங்​களில் மாற்​றம் செய்ய வேண்​டும் என ஆமிர்​கான் கூறிய​தாக​வும் இதனால் படப்​பிடிப்பு தாமத​மாகி வருவதாகவும் ஏற்​கெனவே செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால், இதை பால்​கே​வின் பேரன் சந்​திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்​கர் மறுத்​திருந்​தார். இதன் படப்​பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்​கிறது என்​றும் வித்யா பாலன், பால்கே மனை​வி​யாக நடிப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், பலமுறை கதை திருத்​தம் செய்த பிறகும், ஆமிர்​கானுக்கு திருப்தி இல்​லாத​தால் இப்​படத்​தைத் தற்​காலிக​மாக நிறுத்த முடிவு செய்​துள்​ளனர்.இதற்​கிடையே, இயக்​குநர் ராஜமவுலி​யும் பால்​கே​வின் பயோபிக்கை இயக்க இருப்​ப​தாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்​கப்​பட்​டது. அதில் ஜூனியர் என்​.டி.ஆர். பால்கே கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாகக்​ கூறப்​பட்​டது.

Read More

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி நிகழ்த்​தப்​படும் பல்​வேறு முறை​கேடு​களுக்கு காரண​மான திமுக அரசுக்கு எதி​ராக இன்று (நவ.17) ஆர்ப்​பாட்​டம் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

Read More

தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

Read More