பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
Author: admin
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நடிகர் தர்மேந்திராவுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு (89) சுவாசக் கோளாறு காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை இந்தி நடிகர்கள் சிலர் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர். பின்னர் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. அவர் காலமாகிவிட்டதாகவும் சில இந்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதை அவருடைய மனைவி ஹேமமாலினி மறுத்தார்.
பிஹாரில் இண்டியா கூட்டணி எடுபடவில்லை. கூட்டணியின் பெயரையும் மகாகட்பந்தன் என மாற்றினர். அவர்களது தோல்வி அங்கேயே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பு பிஹாரில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிந்தவுடன், புதிதாக ஏதாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆரை கையில் எடுத்து பூதாகரமாக்கினர். எஸ்ஐஆர்தான் அவர்களது பிரச்சாரத்தின் மையப்பகுதியாக இருந்தது. மக்களின் குறைகளையோ, மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதையோ அவர்கள் பேசவே இல்லை. எஸ்ஐஆரை ஆயுதமாக்க நினைத்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது.அதேநேரம், கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், உள்ளூர் பிரச்சினைகளை சரியாக அணுகுவதிலும் பாஜக மிகத் தெளிவாக இருந்தது. இதனால், வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகள் வாக்குத் திருட்டு என பொய்யாக குற்றம்சாட்டுகின்றனர். பிஹாரில் முஸ்லிம்கள், யாதவர்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மும்பை: பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) சத்யா நாதெள்ளா கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவருக்கு கடந்த 2023-24 நிதியாண்டுக்கு ரூ.694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2024-25-ல் ரூ.850 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இது உலகளவில் அந்த நிறுவனம் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் உதவியுள்ளது. சத்யாவின் ஊதியம் கணிசமான அளவுக்கு அதிகரித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தினமும் பீட்ரூட் சாறு? சிறந்த ஆரோக்கியத்திற்கான எளிய ஆனால் பயனுள்ள திட்டம் போல் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் அனைவரும் நம்பும் ரகசியமா? அல்லது அது குறைபாடுகளுடன் வருகிறதா? இதயம், தோல், முடி மற்றும் நமது கல்லீரல் என உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் இறுதி நன்மைகள் காரணமாக பீட்ரூட் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமடைந்துள்ளது, ஆனால் இந்த பானம் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் முடியும் என்றாலும், மிதமான தினசரி உட்கொள்ளலின் உண்மையான நன்மைகளை ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது ஒரு மேஜிக் புல்லட் அல்ல. எல்லாவற்றிலும் மிகையானது மோசமானது என்பதால், சில மக்கள் அதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் பக்க விளைவுகளைத் தவிர்க்க அதை மட்டுப்படுத்த வேண்டும்! ஆய்வுகள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளின் ஆதாரங்களைப் பார்ப்போம்.அறிவியலால் ஆதரிக்கப்படும் முக்கிய நன்மைகள் பீட்ரூட் நமது இதய ஆரோக்கியத்தை உகந்த முறையில் நிர்வகிக்கும் போது ஒரு நட்சத்திரம்,…
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த 2 நாட்களாக இந்திய தொழில் கூட்டாண்மை மாநாடு நடைபெற்றது. இதனை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.மாநாட்டில் இந்தியா மற்றும் 72 நாடுகளின் தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.நிறைவு நாளான நேற்று முதல்வர் சந்திரபாபு பேசியதாவது: தொழில் கூட்டாண்மை மாநாட்டில் சுமார் ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.22 லட்சம் கோடி முதலீடு பெற்றுள்ளது.
என் பெயர் கவ்யா ஸ்ரீ. நான் சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் ஒரு புதுமையான படைப்பை உருவாக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு தமிழ்நாட்டின் கோயில்களை விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் அனுபவமாக மாற்றும் திட்டத்தை உருவாக்கினோம். இந்த திட்டத்தின் நோக்கம் – வரலாற்று சிறப்புமிக்க கோயில்களையும் பாரம்பரிய கட்டிடங்களையும் 3டி வடிவில் காட்சிப்படுத்தி, அவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அனுபவமாக வழங்குவது. இதற்காக Gaussian Sampling மற்றும் Polycam போன்ற நவீன 3டி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயிலின் இயல்பான ஒலி சூழல், பல மொழிகளில் வழிகாட்டும் ஏஐ தொழில்நுட்பம், வரலாற்று தகவல்களை வழங்கும் இன்டராக்டிவ் பேனல்கள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 29, கேப்டன் சாய் கிஷோர் 16, பாபா இந்திரஜித் 6, ஆந்த்ரே சித்தார்த் 33, சோனு யாதவ் 28, வித்யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆந்திர அணி சார்பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ரெட்டி 75 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கரண் ஷிண்டே 64 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். அஸ்வின் ஹெப்பார் 21, கலிதிண்டி ராஜு 20 ரன்கள் சேர்த்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, எச்1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர் வழங்கப்பட்ட மற்றும் தற்போது செல்லுபடியாகும் எச்1 பி விசாக்களுக்கும், செப்டம்பர் 21 நள்ளிரவு 12:01 மணிக்கு முன்னர் விசா கோரி விண்ணப்பித்தவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், தற்போது எச்1 பி வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பதை இந்த அறிவிப்பு தடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமவுலி – மகேஷ் பாபு இணைப்பில் உருவாகும் படத்திலிருந்து பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
