டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
Author: admin
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. மேலும் ராதா ரவி, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, குரேஷி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ தயாரித்துள்ள இப்படம் நவ. 21-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, சுசீந்திரன், சக்திவேல், ஒப்பிலி கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ், ரவிக்குமார், விஷால் வெங்கட், ராஜு முருகன், ஏ.ஆர்.கே.சரவணன் என பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி தொகுதியில் கடந்த முறைவெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசோகன் இம்முறை மீண்டும் சிவகாசியில் சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் 13,850 வாக்குகள் கூடுதலாக பெற்றதாலேயே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றி சாத்தியமானது.இந்நிலையில், சிவகாசியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றியதைப் போலவே, இம்முறை சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக-வையும், ராஜேந்திர பாலாஜியையும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புதுடெல்லி: இந்தியாவில் இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணப் பரிவர்த்தனையில் யுபிஐ 85% பங்கு வகிக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமாக நடப்பு அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 74 கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல, அதிகபட்சமாக தினசரி யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதுவரை 6 முறை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. அதேநேரம் சராசரி தினசரி யுபிஐ பணப் பரிவர்த்தனையின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ.94 ஆயிரம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள், ஒரு பிரபலமான மசாலா மற்றும் சப்ளிமெண்ட், ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக அளவு செரிமான கோளாறு, கல்லீரல் திரிபு மற்றும் மருந்து தொடர்புகளுக்கு வழிவகுக்கும். குறைக்கப்பட்ட இரும்பு உறிஞ்சுதல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் கூட சாத்தியமாகும். தனிநபர்கள் மருந்தின் அளவைக் கண்காணித்து மருத்துவர்களை அணுக வேண்டும், குறிப்பாக ஏற்கனவே உள்ள சுகாதார நிலைமைகள் அல்லது மருந்துகளை உட்கொள்பவர்கள். மஞ்சள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை மூலப்பொருளாக மாறியுள்ளது, சமையலில் மற்றும் பிரபலமான உணவு நிரப்பியாக கொண்டாடப்படுகிறது. மஞ்சளில் உள்ள முதன்மை உயிரியக்கக் கலவையான குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளிலிருந்து வளர்சிதை மாற்ற மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிப்பது வரை அதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுக்காக அடிக்கடி சிறப்பிக்கப்படுகிறது. இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும் போது, பல தனிநபர்கள் மஞ்சளை சாதாரண உணவு அளவுகளுக்கு அப்பாற்பட்ட அளவில் உட்கொள்கின்றனர், பெரும்பாலும் செறிவூட்டப்பட்ட சப்ளிமெண்ட்ஸ்…
சூரத்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கவுரவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குஜராத்தின் நர்மதா மாவட்டம், டெடியாபடா பகுதியில் உள்ள தேவமோக்ரா தேவி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபட்டார். இந்த கோயில் பழங்குடி மக்களின் கோயில் ஆகும்.
என் பெயர் பு.தீபிகா மாரிமுத்து. நான் வணிகவியல் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்ற பட்டதாரி. தற்போது நான் கண்ணகி நகர் பகுதியில் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். படித்திருந்தாலும், வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் வந்தது. வேலைக்குச் சென்றால், குடும்பத்திற்கான நேரம் சரியாக அமையவில்லை. கணவரின் வருமானத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த சிரமம் ஏற்பட்டது. இதனால் மனதில் எப்போதும் வருத்தம் இருந்தது.அந்த நேரத்தில், என் தோழியின் மூலமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் முதல் தலைமுறை அறக்கட்டளை பற்றி அறிந்தேன். அங்கு கட்டணமில்லா Hand Embroidery பயிற்சி ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலமாக நடைபெறுவது என்பதை அறிந்து, உடனே சேர்ந்தேன். மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். இன்று, நான் டைலரிங் மற்றும் ஆரி ஹேண்ட் எம்பிராய்டரி கடை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இதன் மூலம் என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உறுதியான ஆதரவாக…
கொல்கத்தா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவாக கொல்கத்தா வந்து சேர்ந்தனர். இங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்தான் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம் பெற்று இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா வந்து தங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைந்தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்ளிட்ட சில வீரர்களும்,…
பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நடிகர் தர்மேந்திராவுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு (89) சுவாசக் கோளாறு காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை இந்தி நடிகர்கள் சிலர் மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர். பின்னர் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பரவின. அவர் காலமாகிவிட்டதாகவும் சில இந்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அதை அவருடைய மனைவி ஹேமமாலினி மறுத்தார்.
