அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்குவதற்காக அந்தத் தொகுதியை சுற்றிச் சுற்றி வருவதாகவும் கடந்த முறை இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுத்த அதிமுக, இம்முறையும் அதற்கு தயாராக இருப்பதாகவும் நேற்றைய ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழிதேவன்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அந்தச் செய்தியில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனின் கருத்தையும் நாம் பதிவு செய்திருந்த நிலையில், செய்தி வெளியான பிறகு நம்மை தொடர்பு கொண்ட கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஐடி விங்க் செயலாளரான பி.டி.முத்தமிழ்ச்செல்வன், “அமைச்சர் கணேசனும் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனும் பள்ளித் தோழர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. இருவரும் ஒரே பள்ளியில்கூட படிக்கவில்லை என்பது தான் உண்மை. மேலும், திட்டக்குடி தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாதது போலவும் அமைச்சர் கணேசன்…
Author: admin
போதிய தூக்கத்திற்கும் அதிகரித்த சுகாதார அபாயங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வில் ஒரு சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது. இரவுக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவான தூங்குவது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக உயர்த்தும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற முன்பே இருக்கும் நபர்களுக்கு. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு போதுமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்குமா? போதுமான தூக்கம் ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் வரை எங்கும் உள்ளது. நீங்கள் தொடர்ந்து போதுமான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், நீங்கள் நாள்பட்ட நோய்களுக்கும், ஆரம்பகால மரணத்திற்கும் பெரும் ஆபத்தில் இருக்கலாம். ஆம், அது சரி. தூக்கமின்மை உங்களுக்கு மன சோர்வைக் கொடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும், மேலும் ஆரம்பகால மரணத்திற்கு வழிவகுக்கும் 2019 ஆம்…
பாட்னா: பிஹாரில் தொழில்களை மேம்படுத்தவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் கீழ், 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் இலக்கை எங்கள் அரசாங்கம் நிறைவேற்றியது. தற்போது, எங்கள் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இப்போது, பிஹாரில் தொழில்களை அமைக்கும் தொழில்முனைவோருக்கு ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும். பிஹாரில் தொழில்களை அமைக்கவும், தனியார் துறைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் “சிறப்பு பொருளாதார தொகுப்பு” வழங்க முடிவு செய்துள்ளது. இதன்…
சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையினர் அண்ணா சாலையில் (தேனாம்பேட்டை சிக்னல் – அண்ணா அறிவாலயம் பகுதிக்கு இடையே உள்ள பகுதி) 3.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர். இந்த கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே நாளை (17-ம் தேதி) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா சாலையில் சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி தியாகராய சாலை, ம.பொ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவா சாலை சந்திப்பு வழியாக அண்ணா சாலையை அடையலாம். அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச்…
சிறுநீரக புற்றுநோய் பெரும்பாலும் சோர்வைக் காட்டுகிறது, இது மக்கள் பொதுவாக புறக்கணிக்கும் ஒரு ஆரம்ப அறிகுறியாகும். கட்டிகள் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி பிரச்சினைகள் மற்றும் வீக்கத்தை உருவாக்குவதால் இது நிகழ்கிறது, இது இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது, இது தீவிர சோர்வை ஏற்படுத்துகிறது. சோர்வு மற்றும் குறைக்கப்பட்ட கவனத்தின் அறிகுறிகள் மற்றும் குறைக்கப்பட்ட பலவீனத்துடன் நோயாளிகளுக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் நீண்ட காலங்களில் உருவாகின்றன.புற்றுநோயால் ஏற்படும் சோர்வு உடல் செயல்பாடு அல்லது மன அழுத்தத்திலிருந்து சாதாரண சோர்வு போல நீங்காது. மக்கள் வழக்கமாக இந்த அறிகுறியை தங்கள் பிஸியான கால அட்டவணைக்கு காரணம் கூறுவதன் மூலம் நிராகரிக்கின்றனர், ஆனால் விவரிக்கப்படாத தொடர்ச்சியான சோர்வுக்கு மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது, குறிப்பாக எடை இழப்பு, ஹெமாட்டூரியா அல்லது வலியுடன் இணைக்கும்போது. ஆரம்ப கட்ட தலையீடுகள் சிகிச்சைக்கு பிந்தைய மீட்பின் போது சிறந்த உயிர்வாழும் விளைவுகளையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உருவாக்குகின்றன.குறிப்பு இணைப்புகள்https://www.pacehospital.com/kidney-cancer-causes-simptoms-diagnosis- சிகிச்சைhttps://www.cancer.org/cancer/types/kidney-cancer/detection-diagnosis-staging/signs-and-smptoms.htmlhttps://www.nhs.uk/conditions/kidney-cancer/simptoms/https://www.oncarecancer.com/blogs/how-is-kidney-cancer-diagnosed-and-deedected-early/https://blueblisshospital.com/blog/kidney-cancer-screning-why-early-detection-could-save-your-your-life/https://bmjopen.bmj.com/content/10/5/e035938மறுப்பு: இந்த…
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சித்தாந்த குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்களும் இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், “சுதந்திர தின உரையின் போது ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டுகால வரலாற்றை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்தது பாராட்டுக்குரியது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் சித்தாந்தம் தொடர்பாகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றுபட்டுள்ளன. பாஜக அரசியலில் பணியாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் அதற்கு வெளியே தேசத்திற்கான சமூக சேவைக்காக செயல்படுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடுகள் உள்ளதாக ஊகங்கள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஒரே சித்தாந்த குடையின் கீழ் இணைந்த இரண்டு அமைப்புகள் ஆகும். நாங்கள் ஒரே சித்தாந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம், எங்கள் உறவில் எந்த பதற்றமும்…
காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கீழம்பி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார். இந்த ஊராட்சியில் 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம…
2021 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 541 மில்லியன் நபர்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கணிப்புகள் 2045 ஆம் ஆண்டில் 730 மில்லியனாக உயரும் என்று மதிப்பிடுகிறது. அதிகரித்த தாகம், இருண்ட தோல், சோர்வு, மங்கலான பார்வை மற்றும் உணர்ச்சியற்ற தன்மை போன்ற அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலம் ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது. வாழ்க்கை முறை மாற்றங்கள் வகை 2 நீரிழிவு நோய்க்கு முன்னேற்றத்தைத் தடுக்கலாம் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தணிக்கும். 2021 தரவுகளின்படி, சுமார் 541 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்களுடன் வாழ்ந்து வந்தனர். இது 2045 ஆம் ஆண்டில் 730 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் இது வகை 2 நீரிழிவு நோயாக மாறுவதைத் தடுக்க தனிநபர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது போன்ற…
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் பாஜகவின் முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல்-ல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், சதைவ் அடலில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் முன்னிலையில் பக்தி இசைப் பாடல்கள் பாடப்பட்டன. முன்னதாக, சதைவ் அடலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “அடல் பிஹாரி…
சென்னை: மலேசியாவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 166 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்வெளியில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, தகவலைத் தெரிவித்து விமானத்தை சென்னையில் தரையிறக்க அனுமதி கேட்டார். கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து, நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில்…