சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஆக.16) திட்டமிட்டபடி நடக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு புதுச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் ஆக.17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
இந்த நாட்களில், எடையைத் தூக்கி, தசை உடலை உருவாக்குவது அதிக கவனத்தையும் ஒரு நல்ல காரணத்திற்காகவும். சரியாகவும் தொடர்ச்சியாகவும் செய்தால், அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலில் பரந்த அளவிலான நேர்மறையான மாற்றங்களைத் தூண்டும். பெரும்பாலான காரணங்கள் நமக்கு முன்னால் உள்ளன, இது தசையைப் பெறவும், கொழுப்பை இழக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வலுவாக உணரவும் உதவுகிறது, ஆனால் அது நமது மன நல்வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?இது பொருத்தமாக இருப்பதற்கான ஒரு வழியை விட அதிகம்! தவறாமல் செய்தால், வலிமை அதன் செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்துகிறது, ஒவ்வொரு நாளும் அது நம்மை எப்படி உணர வைக்கிறது என்பதை வலிமை பயிற்சி மாற்றியமைக்கிறது. நாங்கள் வழக்கமாக எடையை உயர்த்தினால் உண்மையில் என்ன நடக்கும் என்பதை ஆராய்வோம்!ஜிம் தேவையில்லை: விரைவாக பொருத்தமாக இருக்க இந்த பயனுள்ள வீட்டு வொர்க்அவுட்டை முயற்சிக்கவும்ஹைபர்டிராபி (தசை வெகுஜன அதிகரிப்பு)ஹைபர்டிராபி என்பது பலரால் அறியப்படாத ஒரு சொல், ஆனால்…
‘ஏகே64’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார். அவரது இயக்கத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. மீண்டும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். அவரிடம் அடுத்த அஜித் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. ‘ஏகே64’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களும், ரசிகர்களும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக கதைக்களம் இருக்கும்”…
சென்னை: “அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னை சமூக நீதி அரசு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது இந்தப் போலி மாடல் ஸ்டாலின் அரசு என்பதற்கு இது சிறந்த உதாரணம். தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. துறையை மேற்பார்வை செய்யவேண்டிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ, உதயநிதி ரசிகர் மன்ற தலைவரைப் போலவே தற்போது வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற பணிகளை விட்டுவிட்டு கொஞ்சம் தான் சார்ந்த துறை…
பிரையன் ஜான்சன் நீண்ட ஆயுளில் டயட் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று நம்புகிறார். உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளில் உணவின் முக்கியத்துவத்தை அறிவியலும் ஆதரிக்கிறது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 2250 கலோரிகளைப் பயன்படுத்துகிறார், இது ஆர்.டி.ஏவிலிருந்து 10% கலோரி கட்டுப்பாடு. இவை பின்வருமாறு: பிரையன் ஜான்சன் தனது முதல் உணவை எடுத்துக்கொள்கிறார் – காலை 6:45 மணிக்கு காலை உணவு, இது கொலாஜன் புரதம், கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெய் மற்றும் கோகோவுடன் புளுபெர்ரி நட்டு கலவையாகும். காலை 9 மணியளவில், அவர் தனது இரண்டாவது உணவைக் கொண்டிருக்கிறார், இதில் கருப்பு பயறு, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பூண்டு மற்றும் சில மூலிகைகள், புளித்த உணவுகளுடன் அடங்கும். அவர் தனது இறுதி உணவை காலை 11 மணிக்கு எடுத்துக்கொள்கிறார். ஆம், அது சரி. இது காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் பெர்ரிகளின் கலவையாகும். சரி, அவரது உணவு எப்போதும் இப்படி இல்லை.…
புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். உக்ரைனில் ஏற்படும் மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா சந்திப்பு: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு…
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்த்திபன் உறுதி செய்திருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சாலையோரத்தில் இருக்கும் இட்லி கடைகள் பலவற்றில் ‘இட்லி கடை’ படத்தின் விளம்பரத்தை இடம்பெற செய்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக பார்த்திபன், “இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கவுரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ்…
தமிழகம் முழுவதும் அனைத்து மின் கம்பங்களிலும், கேபிள் மற்றும், தனியார் இன்டர்நெட் வயர்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும், மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள்மற்றும், விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பல சமயங்களில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் வயர்கள் வாகனங்களில் சிக்கும் போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்க விட்டும், வீடுகளின் மீது அனுமதி இல்லாமலும் கேபிள் வயர்களை எடுத்துச் செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு…
நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியம் விலையுயர்ந்த உணவுகள் அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளிலும், ஆனால் வாழ்விலும், தற்செயலாக உலகின் தொலைதூர மூலைகளிலும் பகிரப்பட்டால் என்ன செய்வது?ஆச்சரியம் என்னவென்றால், நீல மண்டலங்கள், மக்கள் பெரும்பாலும் 100 ஐ கடந்த பகுதிகள் என்ற கருத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதான். இது அதிசயம் அல்ல; அதற்கு பதிலாக, இது அன்றாட வாழ்க்கையில் எளிமையான வாழ்க்கை வழிகளைப் பற்றியது.இந்தியாவில் மூத்த வாழ்க்கை- புராணங்கள், யதார்த்தங்கள் மற்றும் நோக்கமான வயதான எதிர்காலம்நீல மண்டலங்கள் என்றால் என்னஅமெரிக்க எழுத்தாளர், எக்ஸ்ப்ளோரர், கதைசொல்லி மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியாளர் டான் பியூட்னர் ஒரு தேசிய புவியியல் பயணத்தில் சென்றிருந்தார், மேலும் வியக்கத்தக்க வகையில் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது பற்றிய ஒரு பெரிய கண்டுபிடிப்பாக மாறியது.விஞ்ஞானிகள், மானுடவியலாளர்கள் மற்றும் மக்கள்தொகைகளால் ஆன பியூட்னரும் அவரது குழுவினரும் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று மக்கள் தவறாமல் வாழும் பகுதிகளை ஆராய புறப்பட்டனர்.…
புதுடெல்லி: சவுதி அரேபியாவில் 1999-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை குற்றத்துக்காக 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். கனரக மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றிய தில்ஷாத், 1999 அக்டோபரில் ரியாத்தில் தனது பணியிடத்தில் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலைக்குப் பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். சவுதி அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சிபிஐ ஏப்ரல் 2022-ல் அந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தில்ஷாத்தின் சொந்த கிராமத்தைக் கண்டுபிடித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். அதன் பின்னரும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரணையில், தில்ஷாத் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தது…