பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைசி கூறியது: கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜோர், புனேர், ஸ்வாட், மனேஹ்ரா, ஷாங்லா, டோர்கர், படாகிராம் மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்தது. மேக வெடிப்புகளால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 307 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 279 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள். 23 பேர் காயமடைந்துள்ளனர். புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்லாவில் 36 பேரும், மன்சேராவில் 23 பேரும், ஸ்வாட்டில் 22 பேரும், பஜோரில் 21 பேரும், பட்டாகிராமில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அபோட்டாபாத்தில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி…
Author: admin
த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாக கூறி, அட்லி படத்தின் பணிகளைத் தொடங்கினார் அல்லு அர்ஜுன். இதனால் த்ரிவிக்ரம் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது வெங்கடேஷ் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஹரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. வெங்கடேஷ் படத்தினை முடித்துவிட்டு, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் த்ரிவிக்ரம். அல்லு அர்ஜுனுக்காக தயார் செய்யப்பட்ட அக்கதையில் தான் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முருகக் கடவுளை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.…
திண்டுக்கல்: ஆடி கிருத்திகையையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர் விடுமுறை மற்றும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மலைக்கோயில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மின் இழுவை ரயிலில் (வின்ச்) மலைக்கோயிலுக்கு செல்ல கூட்டம் அலைமோதின. 3 மணி…
இந்த ஆப்டிகல் மாயை வடிவங்களை அடையாளம் காணவும், மறுபடியும் மறுபடியும் அடிப்படையில் உடனடி அனுமானங்களைச் செய்யவும் மூளையின் திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய வகையான மாயைகள் மூளை டீஸர்கள், மன சோதனைகள் மற்றும் கற்றல் பொருட்கள் ஆகியவற்றில் பொதுவானவை. சில சமயங்களில், நம் கண்களுக்கு முன்னால் என்ன சரியானது என்பதை அடையாளம் காணத் தவறிவிடலாம், நம் மனம் தானியங்கி பயன்முறையில் இருக்கும்போது அதுதான். அவர்கள் நேரத்தை கடந்து செல்வதில் மிகச் சிறந்தவர்கள் என்றாலும், ஆப்டிகல் நோய்கள் மிகச் சிறந்த மூளை பயிற்சிகள் மற்றும் நினைவகத்தை கூர்மைப்படுத்த உதவும்.இந்த படம் அனைத்து வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் பெல் என்ற வார்த்தையின் மிகவும் நேரடியான கலவையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு நெருக்கமான பார்வையில், ஒரு திருப்பம் உள்ளது, ஏனென்றால் எங்கோ, டஜன் கணக்கான “பெல்ஸ்” இல், ஒரு ஒற்றைப்படை வார்த்தை அமைதியாக மறைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நீங்கள் 10 வினாடிகளில் ஒற்றைப்படை வார்த்தையைக்…
புதுடெல்லி: முகம்மது அலி ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் பிரபு ஆகியோரே தேசப் பிரிவினைக்கு காரணம் என்று என்சிஇஆர்டி (NCERT) குறிப்பிட்டுள்ளது. பிரிவினையின் துயரத்தை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT ) வெளியிட்டுள்ள சிறப்பு தொகுப்பில், “இந்திய பிரிவினை தவறான கருத்துகளால் ஏற்பட்டது. இந்திய முஸ்லிம்களின் கட்சியான முஸ்லிம் லீக், 1940-ல் லாகூரில் ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் பேசிய அதன் தலைவர் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு வெவ்வேறு மத தத்துவங்கள், சமூக பழக்க வழக்கங்கள், இலக்கியங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். இறுதியில், ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா பிரிக்கப்பட்டது. எந்த ஒரு தனி நபரும் இதற்குக் காரணமல்ல. இந்திய பிரிவினைக்கு மூன்று கூறுகள் காரணமாக இருந்தன. ஒன்று, அந்த கோரிக்கையை முன்வைத்த முகம்மது அலி ஜின்னா, இரண்டு அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், மூன்று அதை செயல்படுத்திய மவுன்ட்பேட்டன். மவுன்ட்பேட்டன் ஒரு…
பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகை கஸ்தூரி, சமூகப் பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து, சமூக செயல்பாட்டாளராக இருந்தார். அண்மையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தார். இது குறித்து கஸ்துரி அளித்த பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் பேச்சு சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் உள்ளிட்ட எதுவுமே இல்லை. சுதந்திரமாக உயிர்வாழ கூட முடியவில்லை. சமீபமாக நடந்த பல சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை எதிர்த்து குரல் கொடுக்கும் போது, ஆளுக்கட்சி தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வந்தது. சங்கி, பாஜகவின் ஊதுகுழல், அண்ணாமலையின் ஆள் என்று பல விமர்சனங்கள் வந்தது. அநீதிக்கும், அநியாயத்துக்கும் குரல் கொடுக்கும்போது நடுநிலையாக இருந்தாலுமே திமுகவின் எதிர்ப்பு பாஜகதான் என்று என் தலையில் ஏற்றிவிட்டார்கள். ஆகையால் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து சுதந்திரமாக மக்கள்…
திருப்பூர்: ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த, திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டு குவிகிறது. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், சுதந்திரதினத்தை முன்னிட்டு போலீஸார் நேற்று அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில், அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை பார்த்த போலீஸார், ஆட்டோவின் அருகில் சென்று பார்த்தபோது கர்ப்பிணி பெண் வலியால் அலறுவதை கண்டு அஞ்சினர். மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக திருமுருகன்பூண்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்வதும் தெரிந்தது. ஆனால் மருத்துவமனை செல்வதற்குள், குழந்தை பிறந்துவிடும் என்ற இறுதிக்கட்ட நிலையில் கர்ப்பிணி இருப்பதை அறிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா, சமயோசிதமாக உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம்…
ஆயுர்வேதம் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளிகளில் ஒன்று ஷாம்பூவின் அதிகப்படியான பயன்பாட்டை தவிர்ப்பது, ரசாயனங்கள் நிறைந்ததாக இருக்கிறது, மேலும் இது இயற்கை எண்ணெய்களையும் உலர்த்தக்கூடும். ஷிகாகாய், ரீதா மற்றும் அம்லா பவுடர் போன்ற இயற்கை சுத்தப்படுத்திகளை இது அறிவுறுத்துகிறது, அவை ஈரப்பதத்தை ஈரப்பதத்துடன் பூசுகின்றன, ஆனால் இன்னும் அழுக்கை நீக்குகின்றன. வாரத்திற்கு ஒரு முறை, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மற்றும் தேங்காய் பால் அல்லது வெந்தயம் மற்றும் தயிர் போன்ற ஒரு மூலிகை முகமூடியைப் பயன்படுத்தி ஈரப்பதத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொடுகு வளைகுடாவில் வைத்திருக்கிறது மற்றும் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது, மேலும் இழைகளை பளபளப்பாகவும் நிர்வகிக்கவும் செய்கிறது.
புது டெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கும் வாங் யி, அஜித் தோவலின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 18-19 தேதிகளில் இந்தியா வருகிறார். அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ‘வாங் தனது பயணத்தின் போது, இந்திய – சீன எல்லைப் பிரச்சினை குறித்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றில் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்’ என்று கூறப்பட்டுள்ளது. எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது உட்பட, இரு நாட்டு எல்லையில் அமைதியை வலுப்படுத்துவதற்கான பல நம்பிக்கைகளை வளர்க்கும் விஷயங்களை இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு…
ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதைப் பற்றி கவலைப்படாமல் படத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 2 நாட்களில் ரூ.270 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், “‘கூலி’ பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியிருக்கிறார். ரஜினி சார் எப்போதும் போலவே சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கேற்ப ஆச்சரியப்படுத்துகிறார். அனிருத்தின் இசை படம் முழுக்கவே ஓர் அற்புத அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அதிக வன்முறை உள்ள பிறமொழிப் படங்களுக்கு U/A சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால், ‘கூலி’ படத்துக்கு மட்டும் ‘ஏ’…