உங்களுக்குப் பிடித்த வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகள், அடிக்கடி ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். இந்த பொருட்களை எரிப்பதால் நச்சு இரசாயனங்கள் வெளியாகும், நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹார்மோன்களை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கையான மெழுகு மெழுகுவர்த்திகள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்களுடன் எண்ணெய் டிஃப்பியூசர்களைத் தேர்வுசெய்து, ஒரு இனிமையான வீட்டுச் சூழலை உருவாக்க பாதுகாப்பான வழி. அவிழ்ப்பது பற்றிய உங்கள் யோசனை என்ன? வெண்ணிலா வாசனை மெழுகுவர்த்திகளின் அமைதியை சுவாசித்து, ஒரு சூடான குளியல். அல்லது சந்தன தூபம் காற்றில் சுருட்டுவது போல, உங்கள் படுக்கையில் அமர்ந்து, சூடான தேநீர் பருகுகிறீர்களா? ஒளிரும் இதய வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபத்தின் சூடான நறுமணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓய்வெடுக்க சரியான வழி போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவை இல்லை. சுய பாதுகாப்பு சடங்கு என்று நீங்கள் கருதுவது உங்கள் ஆரோக்கியத்தை ரகசியமாக சேதப்படுத்தும். ஹார்வர்ட்…
Author: admin
இந்த வெடிவிபத்து காவல் நிலைய கட்டிடத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அருகில் உள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த துயரமான நேரத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.முன்னதாக, இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத், “மாநில புலனாய்வு நிறுவன அதிகாரி ஒருவர், மூன்று தடயவியல் ஆய்வக அதிகாரிகள், இரண்டு குற்றப்பிரிவு அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள் மற்றம் இந்த குழுவுடன் தொடர்புடைய ஒரு தையல்காரர் ஆகியோர் உயிரிழந்தனர். 27 காவல்துறை அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள், பொதுமக்களில் மூவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
சென்னை: நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்து இளநிலை, முதுநிலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி யாளர்களுக்கு ஆன்லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக திகழும் அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நானோ அறிவியல், தொழில்நுட்ப மையம் இயங்கி வருகிறது. இங்கு நானோ அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கு நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த ஆன்லைன் பயிற்சி நவம்பர் 26-ம் தேதி தொடங்கி டிசம்பர் 9-ம் தேதி நிறைவடையும்.
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் டை-பிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன. டை-பிரேக்கர் சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் கார்த்திக் வெங்கட்ராமன், ரொமேனியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் போக்டான் டேனியல் டீக்குடன் மோதினார். 43-வது நகர்த்தலில் போக்டான் டேனியல் டீக்கை தோற்கடித்தார் கார்த்திக். இதன்மூலம் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் கார்த்திக் வெங்கட்ராமன்.
இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று கத்தார் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதேநேரத்தில், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.
இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதனை பேட்டியொன்றில் சந்தீப் ரெட்டி வாங்கா கேள்வியாக எழுப்பினர். அதற்கு அப்பா கதாபாத்திரம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரஞ்சீவி நடிக்கவில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.மேலும், டாங் லீ நடிப்பது குறித்து கேட்டதற்கு உறுதியும் படுத்தாமல், மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்துள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதனால் பிரபாஸ் உடன் டாங் லீ நடிப்பது உறுதி என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்தாண்டு பிப்ரவரியில் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த மாதம் இறுதியில் படப்பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.
காட்பாடி: வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர்ப் பகுதியில் உள்ள இல்லத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைத் தமிழக அரசு விட்டுக்கொடுப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர். அவர்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க முடியாது. யார் முயற்சி செய்தாலும், உச்ச நீதிமன்றமோ அல்லது காவிரி ஒழுங்காற்று ஆணையமாகக்கூட இருந்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது. இது தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் கூறிவிட்டாலும், திரும்பத் திரும்ப பேசுவது எதற்கு என்று புரியவில்லை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
சிவகாசி: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக சிவகாசி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். சிவகாசி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால், உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு சரியான முறையில் அல்லது சரியான திறனில் எப்படி உடற்பயிற்சி செய்வது என்பது தெரியாது. நாம் வயதாகும்போது உடற்பயிற்சி என்பது நம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக பெண்களுக்கு, அதைச் சரியாகச் செய்வது முக்கியம். டாக்டர் வோண்டா ரைட், ஆர்த்தோ அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நீண்ட ஆயுள் நிபுணர், சமீபத்திய IG வீடியோவில், சில அடிப்படை, ஆனால் பயனுள்ள உடற்பயிற்சி மற்றும் நடை வழிகாட்டுதல்களை வெளிப்படுத்தினார், இது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மருத்துவர் நடைபயிற்சி மூலம் வழக்கமான உடற்பயிற்சியை ஊக்குவிக்கிறார், ஏனெனில் இந்த அணுகுமுறை சிறந்த ஆரோக்கிய முடிவுகளுக்கு தினசரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும் என்று அவர் நம்புகிறார்.வழக்கமான நடைப்பயிற்சியின் முக்கியத்துவம்ஒவ்வொருவரும் 45 நிமிடங்கள் கொண்ட நான்கு அமர்வுகள் மூலம் வாரத்திற்கு குறைந்தது…
திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
