Author: admin

‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பேட்டிகளை அளிக்க தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட சில சுவராசியங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஏ.ஆர்.முருகதாஸ், “‘மதராஸி’ படத்தின் களம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்‌ஷன் கதையாகும். ‘கஜினி’ போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்டுக்கான ப்ரோமோ எனது திட்டம் இல்லை. அது முழுக்கவே சிவகார்த்திகேயன் – அனிருத் இருவரும் சேர்ந்து உருவாக்கியது தான். இந்தியில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க கேட்டபோது கூட மறுத்துவிட்டார் வித்யூத் ஜாம்வால். ஆனால், நான் ‘மதராஸி’ படத்துக்காக அணுகியபோது, கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார். அவருடைய கதாபாத்திரம் மட்டுமன்றி…

Read More

சேலம்: “தூய்மைப் பணி என்பது நிரந்தரமானது என்று சொன்னால், அவர்களுடைய பணியும் நிரந்தரமாகவே இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையும் 100 சதவீதம் நியாயமானது. தொழிலாளர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அரசு செயல்படுமானால், அதை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள். அதுதான் எங்களுடைய கடமை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியது: “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அனைத்து தொந்தரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மாநில உரிமைப் பறிப்பு, நிதி ஒதுக்கிட்டு பாரபட்சம், வரியில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுவது மூலமாகவே பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்துகின்ற முயற்சி கம்யூனிஸ்ட்…

Read More

ஸ்ரீ பிரேமனந்த் ஜி மகாராஜ் விளக்குகிறார், இந்த மந்திரத்தின் சக்தி அதன் அதிர்வு மற்றும் அதன் பின்னால் உள்ள ஆழ்ந்த பக்தி இரண்டிலும் உள்ளது. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள ஒரு நேர்மறையான பிரகாசத்தை உருவாக்கும் மந்திரங்களை கோஷமிடுவதில் நாம் அடிக்கடி ஆறுதலைக் காண்கிறோம், குறிப்பாக வாழ்க்கையின் தடைகளை எதிர்கொள்ளும் போது, அவை ஆன்மீக, உணர்ச்சிவசப்பட்ட அல்லது பொருளாக இருந்தாலும், கர்மாவிலிருந்து உருவாகின்றன அல்லது தெய்வீகத்திலிருந்து விலகினாலும், இந்த மந்திரத்தை ஒரு கோஷமிட்டால், பக்தர் கிரிஷ்ணாவிற்கு சரணடைந்து, வாழ்க்கைத் தடுப்புகளை அழைக்கிறார், ஆயுட்காலம். இந்த மந்திரம் தினமும் கோஷமிடப்பட்டால், நாளின் மிக நல்ல நேரத்தில், பிரம்மா மஹுராட்டா, மனம் சமாதானமாக இருக்கும்போது, அது உடனடி நிவாரணம் மற்றும் மனநிலையை வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார். இந்த மந்திரத்தை ஒருவர் கோஷமிடுகையில், அதன் விளைவுகளை அதிகரிக்க 108 மணிகள் கொண்ட ஜபா மாலாவைப் பயன்படுத்துங்கள்.

Read More

பாட்னா: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றம்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை முதல் ’வாக்காளர் அதிகார நடைபயணம்’ தொடங்கவுள்ளார். இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், “நாளை சசாரமில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்த யாத்திரை இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக ஓர் உத்வேகத்தை உருவாக்கும். இதற்காக 15 நாட்கள் பிஹாரில் தங்கும் ராகுல் காந்தி, 25 மாவட்டங்களின் வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் ஆகஸ்ட் 20, 25 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களில் நடைபயணம் இருக்காது. நாளை சசாரத்தில் தொடங்கும் நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்,…

Read More

பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடித்து செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…

Read More

வந்தவாசி: திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய எழுச்சிப் பயணத்தில் ஆரணி, செய்யாறில் மக்களை சந்தித்த பிறகு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே நேற்றிரவு பேசினார். அப்போது அவர், “அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற உள்ளது என்பதற்கு இங்கு கூடி உள்ள மக்களின் எழுச்சியே சாட்சி. பத்தரை மணிக்கும் இவ்வளவு மக்கள் குழுமியிருக்கிறார்கள் என்றால் அதுதான் நம் வெற்றியின் ரகசியம். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கிறார். பலமான கூட்டணி என கனவு காண்கிறார். ஆனால் அதிமுக மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஸ்டாலின் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு எந்த திட்டமும் கொடுக்காமல், ஊழல் அரசை நடத்துகிறார். அதிமுகவின் 10 ஆண்டுகளில்…

Read More

எனவே ஒரு பயாப்ஸி உண்மையில் புற்றுநோயை பரப்ப முடியுமா, உங்களிடம் இருந்தால்? குறுகிய பதில் ஆம், ஆனால் இது மிகவும் அரிதானது. மார்பு மற்றும் அடிவயிறு போன்ற உடலுக்குள் ஆழமாக அமைந்துள்ள உறுப்புகளிலிருந்து மாதிரி எடுக்கப்படும்போது, ஒரு பரவலுக்கான சாத்தியம் உள்ளதா என்பதைப் புரிந்துகொள்ள நிறைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று டாக்டர் ஷர்மா விளக்குகிறார். “எண்டோஸ்கோபி மூலம் செய்யப்படும் வாய், மார்பகம், கருப்பை வாய், வயிறு மற்றும் பெருங்குடல் போன்ற பொதுவான புற்றுநோய்களின் பெரும்பாலான பயாப்ஸிகளுக்கு ஆபத்து இல்லை” என்று அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார்.அரிதான சந்தர்ப்பங்களில், ஆபத்து 1% முதல் 2.5% வரை எங்காவது உள்ளது என்பதையும் அவர் விரிவாகக் கூறினார். “ஒரு பயாப்ஸி முழு உடலிலும் கட்டியை பரப்பும் அல்லது அது ஆக்ரோஷமாக மாறும் என்று மக்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறானது, அதற்கான எந்த ஆதாரமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

Read More

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்​டாடப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி டெல்லி செங்கோட்​டை​யில் தேசியக் கொடியேற்​றி, நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையில், “வரும் தீபாவளி… இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும்” என்று கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “இந்​திய மக்​களின் வியர்​வை​யால் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்கி பயன்​படுத்த வேண்​டும். இந்த விவ​காரத்​தில் வணிகர்​களும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்​டும். கடந்த 8 ஆண்​டு​களில் ஜிஎஸ்​டி​யில் பெரிய சீர்​திருத்​தங்​களை செய்​துள்​ளோம். நாடு முழு​வதும் வரிச்​சுமை​யைக் குறைத்து உள்​ளோம், வரி முறையை எளிமைப்​படுத்தி உள்​ளோம்.…

Read More

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைசி கூறியது: கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜோர், புனேர், ஸ்வாட், மனேஹ்ரா, ஷாங்லா, டோர்கர், படாகிராம் மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்தது. மேக வெடிப்புகளால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 307 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 279 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள். 23 பேர் காயமடைந்துள்ளனர். புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்லாவில் 36 பேரும், மன்சேராவில் 23 பேரும், ஸ்வாட்டில் 22 பேரும், பஜோரில் 21 பேரும், பட்டாகிராமில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அபோட்டாபாத்தில் ஒரு குழந்தை நீரில் மூழ்கி…

Read More

த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாக கூறி, அட்லி படத்தின் பணிகளைத் தொடங்கினார் அல்லு அர்ஜுன். இதனால் த்ரிவிக்ரம் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது வெங்கடேஷ் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஹரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. வெங்கடேஷ் படத்தினை முடித்துவிட்டு, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் த்ரிவிக்ரம். அல்லு அர்ஜுனுக்காக தயார் செய்யப்பட்ட அக்கதையில் தான் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முருகக் கடவுளை மையப்படுத்தி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read More