Author: admin

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி விஜய் பங்​கேற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​திருப்​பவர்​கள், பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​கள், தவெக வழக்​கறிஞர், மின் வாரி​யத்​தினர், பவர் கிரிட் கார்ப்​பரேஷன் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். தற்​போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள் மற்​றும் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

Read More

மும்பை: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது. 10.5 கிலோ தங்​கத்​தில் (24 காரட்) வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த ஆடை​யின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்​களால் அலங்​கரிக்​கப்பட்​டுள்ள இது, துபா​யின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்​றும் உயர்தர ஆடைத் துறை​யில் புது​மைக்கு அளிக்​கும் முக்​கி​யத்​து​வத்தை பிர​திபலிக்​கிறது.

Read More

14 ஆண்டுகால ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் வசிக்கும் இடம் அவர்களின் உடல் எடையை கணிசமாக பாதிக்கிறது, உள்ளூர் உணவு சூழல்கள் மற்றும் சுற்றுப்புற வடிவமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்கள் தங்கள் புதிய சமூகங்களின் எடை சுயவிவரத்தை படிப்படியாக ஏற்றுக்கொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், சுமார் 15% பிராந்திய எடை வேறுபாடுகள் தனிப்பட்ட காரணிகள் மட்டுமல்ல, இருப்பிடத்தின் காரணமாகும். உங்கள் அஞ்சல் குறியீடு உங்களின் சமூக நிலை அல்லது உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் எவ்வளவு விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை; அது உங்கள் உடல் எடையையும் தீர்மானிக்கிறது. ஆம், அது சரிதான். நீங்கள் வசிக்கும் இடம் உங்கள் எடையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வில், ஒரு நபரின் குடியிருப்பு பகுதி உடல் எடை உட்பட அவர்களின் ஆரோக்கிய விளைவுகளை தீர்மானிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளன சமூக அறிவியல்…

Read More

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார்.

Read More

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்​தவர் நிதின் எஸ்.தர்​மாவத். அவரது மகன் அங்​குள்ள சிபிஎஸ்இ பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார். அவர் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்​ளார். அதில், ‘‘பள்​ளி​கள் பயனற்​றவை. தற்​போது நள்​ளிரவு 12 மணி ஆகிறது. எட்​டாம் வகுப்பு படிக்​கும் எனது மகன் ஹோம்​வொர்க் பாடங்​களை முடித்​து​விட்டு ‘பு​ராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்​டாள்​தன​மான வேலைகளை செய்து கொண்​டிருக்​கிறார்.

Read More

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது.

Read More

மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைக் குறைத்தது, அரசு ஊழியர்களை வெகு எளிதாக வேலைநீக்கம் செய்யும்படி சட்டத்திட்டங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது எனக் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் பிரம்மாண்டப் பேரணியில் ஈடுபட்டனர். ‘இங்கு யாரும் மன்னர் இல்லை’ என்று கோஷங்களை மக்கள் எழுப்பினர். லட்சக்கணக்கானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில், அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உட்பட ஜனநாயகக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read More

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.

Read More

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.

Read More

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை​யில் ரூ.4 ஆயிரம் சம்​பளத்​தில் வேலைக்கு சேர்ந்​துள்​ளார்.

Read More