யார் இந்த கிரிஜா ஓக்? ‘வெளிர் நீலம், வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை என அழகிய லினன் காட்டன் புடவையில் அம்சமாக ஜொலிக்கிறார்’, ‘ஒரு தென்னிந்திய நடிகையைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.’, ‘ஸ்லீவெலெஸ் ஜாக்கெட்டுகளில் வசீகரிக்கிறார்.’, என்று விதவிதமான வர்ணனைகளை வாரி வழங்கிய நெட்டிசன்கள், ’யார் இந்த தேவதை?’ என்று இன்ஸ்டாகிராம் தொடங்கி அத்தனை சமூகவலைதளங்களிலும் தேட ஆரம்பித்தனர். அவர் கிரிஜா ஓக், மராத்தி நடிகை என்பதையும் கண்டறிந்து அவரைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.கிரிஜா ஓக், மராத்தி, இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். 2007-ல் இவர் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ மற்றும் 2010-ல் இவர் நடித்த ‘ஷோர் இன் தி சிட்டி’ படங்கள் பிரபலமானவை. 2023-ல் ‘ஜவான்’ படத்தில் ஒர் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
Author: admin
ஓசூர்: புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஓசூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. வாஜ்பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்கிறது. வரும் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. கட்சி சார்பில் நிர்வாகிகள் போட்டியிடுவார்கள்.தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. தமிழகத்தில் மும்முனை போட்டி இருந்தாலும் அதிமுக எளிதாக ஆட்சி அமைத்துவிடும். தவெகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 – 50,000 வாக்குகள் உள்ளன. வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.
வேலை, குடும்பம் மற்றும் அன்றாட வேலைகள் குவிந்து கிடக்கும் போது உடற்பயிற்சி செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது அவர்களுக்கு உந்துதல் இல்லாததால் அல்ல, ஆனால் அவர்களின் வழக்கமான வாழ்க்கை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாததால். ஒரு ஸ்மார்ட் ஃபிட்னஸ் திட்டம் நிரம்பிய அட்டவணையில் செயல்படுகிறது, அதற்கு எதிராக அல்ல. முக்கியமானது குறுகிய அமர்வுகள், எளிய இயக்கங்கள் மற்றும் நிலையான முன்னேற்றம். இந்த 7 நாள் வழிகாட்டி, உடற்பயிற்சி கூடம் அல்லது உபகரணங்கள் தேவையில்லாமல் மக்கள் வலிமையை வளர்க்கவும், ஆற்றலை அதிகரிக்கவும், சீராக இருக்கவும் உதவுகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன.
சென்னை: யுஜிசி நெட் தேர்வு, டிச.31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை கணினிவழியில் நடைபெறுகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்படுகிறது.இத்தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தமிழக அணி விளையாடத் தொடங்கியது.
துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல அந்த படகு சென்றது. செல்லும் வழியில் அந்தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்கினர். இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.கடலில் விழுந்த 6 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தவெக வழக்கறிஞர், மின் வாரியத்தினர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
