சென்னை: அயனாவரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி திமுக கவுன்சிலர் தனசேகரனின் பேரன் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம் சுரேஷ் என்பவரது மகன் நிதின்சாய் (19). மயிலாப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 29 அன்று தனது கல்லூரி நண்பர்களுடன் அண்ணாநகரில் உணவருந்தச் சென்றார். காதல் பிரச்சினை: இதற்கிடையே நிதின்சாயும், அவரது நண்பர் அபிஷேக்கும் சென்ற இருசக்கர வாகனம் மீது காரை மோதியதில், நிதின்சாய் படுகாயமடைந்து இறந்தார். அபிஷேக் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். காதல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிதின்சாயை கொலை செய்ததாக கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திமுக மாநகராட்சி கவுன்சிலரான தனசேகரனின் பேரனான சந்துரு, அவரது நண்பர் பிரணவ் உள்ளிட்டோரை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு…
Author: admin
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை சந்தையில் எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது. பின்னர் படிப்படியாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று…
சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளின் விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, அமைச்சர், ‘பன்னீரின்’ 531 மாதிரிகளில், 196 மாதிரிகள் தரமற்றவை என்றும் 59 பேர் நுகர்வுக்கு பாதுகாப்பற்றவர்கள் என்றும் கூறினார். “பன்னீர் (சீஸ்) மற்றும் ‘தேசி நெய்’ (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) ஆகியவற்றில் அதிகபட்ச கலப்படம் உள்ளது” என்று சிங் கூறினார்.
ராஞ்சி: ஜார்க்கண்டின் கும்லா மாவட்டம், சங்கபாடி உபர் டோலி பகுதியில் நக்சலைட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் – நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவர், பிஎல்எப்ஐ என்ற நக்சலைட் அமைப்பின் தலைவர் மற்றும் பிராந்திய கமாண்டர் மார்ட்டின் கெர்கெட்டா என அடையாளம் காணப்பட்டார். மார்ட்டின் மீது ஜார்க்கண்டின் 7 மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் 72 வழக்குகள் உள்ளன. அவரை பற்றிய தகவலுக்கு ரூ.15 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. 9 நக்சலைட் சரண்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் 9 நக்சலைட்கள் நேற்று காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
Last Updated : 07 Aug, 2025 10:33 AM Published : 07 Aug 2025 10:33 AM Last Updated : 07 Aug 2025 10:33 AM ஜூலை மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி 754 ரன்கள் குவித்ததை தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில்…
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி வயது மூப்பு காரணமாக மறைந்தார். அவரது 7-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் பகுதியாக திமுக சென்னை மாவட்டம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவர், ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பேரணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்செல்ல அவரது பின்னால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கருணாநிதியின் புகைப்படம் ஏந்திய பதாகை…
கிளி மீன் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்கிளி மீன்கள் அழகான, துடிப்பான வண்ண மீன்வளம் செல்லப்பிராணிகளாக இருக்கின்றன, ஏனெனில் அவற்றின் முக அம்சங்கள் கிளிகளின் அம்சங்களை ஒத்திருக்கின்றன. ஆனால் ஒரு வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன், அவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான அவர்களின் தனித்துவமான கவனிப்பு தேவைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்:
ஜூலை 2025 இல் பி.என்.ஏ.எஸ் (தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள்) இல் வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான ஆய்வு கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது 75,000 ஆண்டுகள் பழமையான விலங்கு உள்ளது நோர்வேயில், ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள கரி போக்குகளுக்குள் ஆழமாக பாதுகாக்கப்படுகிறது. மேம்பட்ட மரபணு பகுப்பாய்வு மற்றும் ரேடியோகார்பன் டேட்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் துண்டுகளை அடையாளம் கண்டனர் பனி வயது மெகாஃபவுனா. “பண்டைய முதுகெலும்பு டி.என்.ஏ தாமதமான ப்ளீஸ்டோசீன் நோர்வேயில் மெகாஃபவுனல் நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது” என்ற தலைப்பில் இந்த ஆய்வில், இந்த இனங்கள் தப்பிப்பிழைத்தது மட்டுமல்லாமல் வடக்கு ஐரோப்பாவில் முன்னர் கருதப்பட்டதை விட முன்னதாகவே தழுவின என்பதற்கு முக்கியமான சான்றுகளை வழங்குகிறது. இது ஸ்காண்டிநேவியாவில் பனி வயது ஆராய்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கிறது மற்றும் அழிவு காலக்கெடு மற்றும் வாழ்விட பின்னடைவு பற்றிய நீண்டகால கோட்பாடுகளை சவால் செய்கிறது.நோர்வேயின் கரி போக்குகளில் பண்டைய டி.என்.ஏ என்ன கண்டுபிடித்ததுநோர்வேயின் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள கரி நிறைந்த வண்டல்…
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் கடந்த மே 30-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வரேவற்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சகாரிகா கோஷ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை: தமிழ் மரபு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ‘தமிழ்க் கனவு’ பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி தமிழ் இணையக் கல்வி கழகம் மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 200 இடங்களில் 2 ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரை நிகழ்ச்சி கடந்த 2023, பிப்.3-ம் தேதி தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளர்ச்சி, சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்ற…