போபால்: இந்திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனுமான ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார்.
Author: admin
காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன் பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்துன் பகுதியில் இருந்த தங்கள் வீட்டை கண்டறிய முயன்றபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்.” எனத் தெரிவித்துள்ளார்.நாளை விருது விழா: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள தோட்டாதரணி, ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர்.
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று (நவ.17) தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: சென்னையில் இன்று (அக்.21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஹாலிவுட் நடிகை எமி ஷுமர், அவரது வியத்தகு 50-பவுண்டு எடை இழப்பு மற்றும் மெலிதான தோற்றம் பற்றிய பரவலான ஊகங்களுக்கு உரையாற்றினார். டிசம்பர் 1 இன்ஸ்டாகிராம் பதிவில், “சூடான தோற்றத்திற்காக” உடல் எடையை குறைக்கவில்லை என்று “ஐ ஃபீல் ப்ரீட்டி” நட்சத்திரம் பகிர்ந்துள்ளார், மாறாக “உன்னைக் கொல்லக்கூடிய” ஒரு நோயிலிருந்து “உயிர்வாழ்வதற்காக” இதைச் செய்தேன். எமியின் 6 வயது மகனால் படம்பிடிக்கப்பட்ட வீடியோவில், ஒரு வாசகம் உள்ளது, அதில் எமி தனது உடல் எடையை குறைத்தது ஒரு தீவிர மருத்துவ நிலை காரணமாக இருந்தது என்று தெளிவுபடுத்தினார். ஷுமர் முன்பு தனது உடல்நலப் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறினார். “நியூஸ் நாட் நோஸ்” பதிவர் ஜெசிகா யெலின் ஒரு நேர்காணலில், ஷுமர் தனக்கு ‘குஷிங் சிண்ட்ரோம்’ இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறினார். மருத்துவ நிலை குஷிங் சிண்ட்ரோம் என்பது அதிக அளவு மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் ஏற்படும் ஹார்மோன்…
ஜம்மு: ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாந்தர்ஸ் பார்ட்டி வேட்பாளர் ஹர்ஷ் தேவ் சிங் தோல்வி அடைந்தார்.
என் பெயர் சரண்யா. நான் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் படித்து முடித்தேன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவியாக, திறன் பயிற்சிகளுக்காக தனியாக செலவு செய்ய முடியாது என்ற ஒரு வரம்பு எப்போதும் இருந்தது. அந்த நேரத்தில், எங்களுக்கு நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் பயிற்சி கட்டாயமாக சேர்க்கப்பட்டதால், கல்வியுடன் சேர்த்து தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது துறைக்கு நேரடியாக இணைந்த பயிற்சி என்பதால், படித்து முடிந்தவுடன் வேலை தேடுவதற்கான நம்பிக்கை மேலும் உறுதியானது.
சாக்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி நெல்சன் பகுதியிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்பு ரீதியிலான ஒரு ஆட்டத்தில் பங்கேற்க எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் உர்குன் திரும்பிய பிறகு அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரி ழந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது.
