பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது. இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தனர்.
Author: admin
சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு டிச.17-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும் என்று பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று பாமக தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிச.17-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
பெங்களூரு: ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யபுரா காவல் நிலையம். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக கடந்த 2022 முதல் பணியாற்றி வந்தவர் கே.அரவிந்த். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அன்று, தனது அடுக்குமாடி குடியிருப்பில் விஷம் அருந்தி அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி அவரது சகோதரர் அஸ்வின் கண்ணன், காவல் துறையில் புகார் அளித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ தொழில்நுட்பத்தில் பாரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், புற்றுநோய் இன்னும் பொதுவானதாகவே உள்ளது, உலகளவில், தோராயமாக ஐந்தில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை இன்னும் திடுக்கிடும் விஷயம் என்னவென்றால், புற்றுநோயானது சிகிச்சையளிப்பது மிகவும் சிக்கலானது, குறிப்பாக அது பிற்காலத்தில் கண்டறியப்பட்டால், மேலும் அது ஆக்ரோஷமாக இருக்கும். புற்றுநோயானது இறுதியில் நிவாரண நிலைக்குச் செல்லலாம், (உடலில் தற்போதைய புற்றுநோய் தடயங்கள் எதுவும் இல்லை என்று அர்த்தம்), சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் இது மிகவும் தடுக்கக்கூடியது. நோயெதிர்ப்பு அமைப்பு மேம்பாடு, செல் பாதுகாப்பு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மக்கள் தங்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க குறிப்பிட்ட வாழ்க்கை முறை தேர்வுகள் உதவுகின்றன என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இங்கே அறிவியல் ஆதரவு 8 வழிகள் உள்ளன, ஆனால் அவை உங்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வராது என்று உத்தரவாதம் அளிக்கவில்லை, ஆனால் அவை…
கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் முன்னாள் மனைவியும், ஒரு காலத்தில் ஒன்பது எண்ணிக்கையிலான காசோலைகளை எழுதிய ஒரு பெரிய பரோபகாரருமான நிக்கோல் ஷனாஹன், சிலிக்கான் பள்ளத்தாக்கின் உயரடுக்கு நன்கொடையாளர் வட்டங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹாலிவுட் பிரமுகர்கள் மற்றும் தாவோஸ்-லின் போன்ற உலக நிறுவனங்களின் உலகளாவிய நெட்வொர்க்குகளால் முன்வைக்கப்பட்ட மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அறியாமல் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பகிரப்பட்ட உரையாடலில், ஷனஹான், தன்னை உட்பட பல பணக்கார தொழில்நுட்ப மனைவிகள், சமூக நலனுக்காக நிதியளிப்பதாக நம்புவதாகவும், மாறாக பரந்த கருத்தியல் திட்டங்களை நோக்கிச் செல்வதாகவும் கூறினார்.2024 இல் RFK ஜூனியரின் ரன்னிங் துணையாகச் சுருக்கமாகப் பணியாற்றிய ஷனஹான், உலகப் பொருளாதார மன்றத்தால் ஊக்குவிக்கப்பட்ட தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மற்றும் சமூகப் பார்வையான கிளாஸ் ஸ்வாப்பின் கிரேட் ரீசெட் உடன் தொடர்புபடுத்துவதற்கு இந்தப் பெண்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். 1971 இல் WEF ஐ நிறுவிய பொருளாதார நிபுணர் கிளாஸ்…
கடந்த 2010-ல் நிதிஷ் 3-வது முறை முதல்வரானார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷுக்கு பாஜக முழு ஆதரவளித்தது. பின்னர் 2014-ல் பாஜக.வில் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ல் மகத்தான வெற்றி பெற்றார். இதில், முதல்வராக நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ல், அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏ.வுக்கு திரும்பினார். 2020-ல் மறுபடியும் முதல்வரான நிதிஷ்குமார், 2022-ல் மீண்டும் என்டிஏ.வில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார்.இதற்கிடையில் மே 24, 2024 முதல் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ல், நிதிஷ் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9-வது முறையாக முதல்வரானார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதால் 10-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளார்.
என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன்.நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.
போபால்: இந்திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனுமான ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார்.
காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன் பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்துன் பகுதியில் இருந்த தங்கள் வீட்டை கண்டறிய முயன்றபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்.” எனத் தெரிவித்துள்ளார்.நாளை விருது விழா: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள தோட்டாதரணி, ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர்.
