ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் வெல்லும் 101-வது பட்டமாகும் இது.
Author: admin
இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.
சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக ஐஎன்டியுசி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்தலைவராக மு.பன்னீர்செல்வம், செயலாளராக கோவை செல்வம் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்ஸின் தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தலை, ஐஎன்டியுசி சட்ட விதிகள்படி நடத்தும்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக ஐஎன்டியுசி அவசர செயற்குழு கூட்டம், கடந்த அக்.31-ம் தேதி நடந்தது.
சென்னை: சரக்குகளை கையாளும் நிறுவனங்களை, ஊக்கப்படுத்த தெற்கு ரயில்வே சலுகைகள் அளித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் கோரிக்கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்தின், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடி கொள்முதல் மையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயிலை இயக்கியது. தஞ்சை, நாகப்பட்டினம், நீடாமங்கலம், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, விருத்தாச்சலம், செங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கூட்ஸ் ஷெட்டுகளில் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அக்.1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 85 ரயில்கள் இயக்கப்பட்டு, 2.3 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதயம் தொடர்பான நிலைமைகளால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர், பெரும்பாலும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கவனிக்கப்படாமல் அல்லது புறக்கணிக்கப்படுவதால். டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், போர்டு-சான்றளிக்கப்பட்ட இருதயநோய் நிபுணரும், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள செயல்பாட்டு மருத்துவ நிபுணரும், இதய நோயின் ஆரம்பக் குறிகாட்டிகளாக இரத்த அழுத்தத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றங்கள் மார்பு வலி அல்லது சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே மாரடைப்பைக் கணிக்க முடியும்.ஒரு பெரிய நிஜ உலக ஆய்வு, 2006 மற்றும் 2010 இல் அளவிடப்பட்ட இரத்த அழுத்தத்துடன், 96,000 க்கும் மேற்பட்ட நபர்களில் நிலை 1 உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்ட நீண்ட கால இருதய ஆபத்தை ஆய்வு செய்தது. இருதய நோய் (CVD)…
இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா நேற்று சமூக வலைதளத்தில் ஒரு வரைபடம் வெளியிட்டார். அதில் ராகுல் காந்தி சந்தித்த தேர்தல்களில் அடைந்த தோல்விகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘‘இன்னொரு தேர்தல்… இன்னொரு தோல்வி. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. தேர்தல் நிலைத்தன்மைக்கு விருது வழங்கலாம் என்றால், எல்லா விருதுகளையும் ராகுல் காந்தி தட்டிச் செல்வார்’’ என்று விமர்சித்துள்ளார்.அமித் மாளவியா வெளியிட்ட வரைபடத்தில், இமாச்சல் (2007, 2017), பஞ்சாப் (2007, 2012, 2022), குஜராத் ( 2007, 2012, 2017, 2022), மத்திய பிரதேசம் ( 2008, 2013, 2018, 2023), மகாராஷ்டிரா (2014, 2019, 2023) மற்றும் டெல்லி, ஹரியானா, உ.பி., பிஹார், வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஆந்திரா யூனியன்…
டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் தேசிய நினைவகம், அவரின் சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவர் மறைவுக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுதவிர கலாமின் பூர்விக வீடு, டெல்லியில் கலாம் நினைவகம், திருவனந்தபுரத்தில் கலாம் விண்வெளி அருங்காட்சியகம் ஆகியவற்றின் வழியாக இன்றளவும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விண்வெளி அருங்காட்சியகம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலாமின் அரிய ஒளிப்படங்கள், அவருடைய பெரும் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட ஜிஎஸ் எல்வி எம்கே- 3 ஏவுகணை, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களின் சிறிய மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.ஹாங்காங் நாட்டிலுள்ள மாங்காக்கில் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.
விமானப் படையின் தீயணைப்புப் பிரிவுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களின் தரையிறக்கங்களும், புறப்படுதலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.டாக்காவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த ஒன்பது விமானங்கள் தீவிபத்து காரணமாக சட்டோகிராம் மற்றும் சில்ஹெட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அவற்றில் எட்டு விமானங்கள் சட்டோகிராமிலும், ஒன்று சில்ஹெட்டிலும் தரையிறங்கியது. சரக்கு முனையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை (BGB) வீரர்கள் தீயணைப்பு படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
