Author: admin

வாஷிங்டன்: உலகில் பல போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு பாகிஸ்தான் – ஆப்கனிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதானதே என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அந்த மோதலை தீர்க்க விரும்பினால், அது எனக்கு எளிதானதே. இதற்கிடையில் நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனாலும், போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நான் விரும்புகிறேன்.

Read More

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் மத எல்​லைகளைத் தாண்​டி, பெண்​கள் வளர்ச்​சிக்​காகத் தன்​னலமற்ற சேவை​களை செய்​தவர், கன்​னி​யாஸ்​திரி ராணி மரி​யா. அவர் வாழ்க்​கைச் சம்​பவங்​களை மையப்​படுத்தி உரு​வாகி​யுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்​லெஸ்’ (முகமற்​றவரின் முகம்).ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்​படம், 2024ம் ஆண்டு ஆஸ்​கர் விருதுக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டது. 123-க்​கும் மேற்​பட்ட சர்​வ​தேச விருதுகளை வென்ற இப்​படத்​தில், வின்சி அலாய்​சி​யஸ், சோனாலி மொஹந்​தி, ஜீத் மத்​தா​ரு, அஜிஸ் ஜோசப் நடித்​துள்​ளனர். 136 நிமிடங்​கள் ஓடும் இப்​படம் இந்​தி, மலை​யாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழில் நவ.21ம் தேதி வெளி​யாகிறது.

Read More

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்: தேங்கிய நீர், அசுத்தமான அல்லது மாசடைந்த நீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் குளிக்கக்கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும். தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயர்சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு, அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

சென்னை: தீ​பாவளி பண்​டிகை இன்று நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர். இதை முன்​னிட்டு சென்​னை​யில் ஜவுளி, பட்​டாசு மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனை அமோக​மாக நடந்​தது. தீபாவளி பண்​டிகை என்​றாலே, துணிக்​கடைகள் அதி​கம் உள்ள சென்​னை​யின் முக்​கிய கடை வீதி​களில் கூட்ட நெரிசல் இயல்​பாகவே அதி​கரித்து விடும். அந்​தவகை​யில், தீபாவளிக்கு முந்​தைய நாளான நேற்​று, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலை​யிலும், நேற்று விடு​முறை நாள் என்​ப​தால் மக்​கள் தங்​களது குடும்​பத்​தினருடன் ஜவுளி கடைகள், பட்​டாசு கடைகளை நோக்கி படையெடுத்​தனர்.

Read More

சால்மன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களின் வளமான மூலமாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் மற்றும் தொழில்துறை விவசாய முறைகள் காரணமாக சால்மன் நுகர்வு சில ஆரோக்கிய அபாயங்களையும் அளிக்கிறது. வளர்க்கப்படும் சால்மனில் உள்ள அசுத்தமான அளவுகள் காட்டு சால்மன் மீன்களை விட அதிகமாக உள்ளது, ஏனெனில் அதில் அதிக அளவு PCB கள் (பாலிகுளோரினேட்டட் பைபினைல்கள்) மற்றும் பிற மாசுக்கள் உள்ளன, இது புற்றுநோய் அபாயத்தையும் ஹார்மோன் பிரச்சனைகளையும் அதிகரிக்கும். எப்படி என்று பார்ப்போம்…வளர்க்கப்பட்ட சால்மனில் உள்ள அசுத்தங்கள்சால்மன் மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மீன் தீவனம், PCBகள், டையாக்ஸின்கள் மற்றும் கன உலோகங்கள் உள்ளிட்ட நிலையான கரிம மாசுகளைக் கொண்டுள்ளது. மீன் தீவனத்தில் உள்ள அசுத்தங்கள் அசுத்தமான மூலங்களிலிருந்து உருவாகின்றன, பின்னர் அவை தீவனத்தில் குவிகின்றன. காட்டு சால்மன் மீன்களை…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார்.ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் கடந்த ஜூன் மாதம் உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். இதனால் இந்த தொகு​திக்கு கடந்த 11-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இத் தேர்​தலில் காங்​கிரஸ், பிஆர்​எஸ், பாஜக வேட்​பாளர்​கள் உட்பட மொத்​தம் 58 பேர் போட்​டி​யிட்​டனர். 49 சதவீத வாக்​கு​கள் மட்​டுமே பதி​வா​யின.

Read More

இளையோரின் நேசன்: ‘சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்வி’ என்றார் கலாம். இதனை அவர் ஆழமாக நம்பியதால்தான் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராகப் பல உயரிய பொறுப்புகளை வகித்த பிறகும் தனது இறுதி மூச்சுவரை மாணவர்களைத் தேடிச் சென்று உரையாடினார். இளையோருக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைப் போதித்து அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் தாம் பெற்ற படிப்பினையைப் பகிர்ந்தார்.இதுபோக, உலக மாணவர் நாள் மேலும் பல காரணங்களுக்காகக் கடைப்பிடிக்கப் படுகிறது. எதிர்காலத் தலைவர்களாக, புதிய கண்டறிதல்களை நிகழ்த்துபவர்களாக மாணவர்கள் உருவாக அழைப்புவிடுக்கும் நாள் இது. கல்வி எவ்வாறு ஒருவரின் தலையெழுத்தைத் திருத்தி சிறப்பாக எழுத வல்லது என்பதை உரக்கச் சொல்லும் நாள் இது. ஆண்டுதோறும் இந்நாளுக்கான கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

Read More

ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச் சாம்​பியன் பட்​டம் வென்​றார். கிரீஸ் நாட்​டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற இந்​தப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் ஜோகோ​விச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்​டியை வீழ்த்தி பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். அவர் வெல்​லும் 101-வது பட்​ட​மாகும் இது.

Read More

இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.

Read More

சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

Read More