புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றுநடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி,…
Author: admin
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி கடலூர் (பண்ருட்டி),கள்ளக்குறிச்சி (ரிஷிவந்தியம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்கல்பட்டு (பேரனூர் கிராமம்), திண்டுக்கல் (வளவிசெட்டிபட்டி),மதுரை (செட்டிகுளம்), திருச்சி (கள்ளக்காம்பட்டி), திருப்பத்தூர் (திம்மாம்பேட்டை), சென்னை (மாத்தூர்), விழுப்புரம் (கஞ்சனூர்), திருச்சி (கலைஞர் கருணாநிதி நகர்), விழுப்புரம் (மேல்கரணை), ராமநாதபுரம் (வாலிநோக்கம்), திருப்பூர் (முதலிபாளையம்), கிருஷ்ணகிரி (பாத்தகோட்டா), சேலம் (லக்கம்பட்டி), திருவண்ணாமலை (வேளானந்தல்), நாகப்பட்டினம் (கணபதிபுரம்), ராமநாதபுரம் (புதுமடம்), கன்னியாகுமரி (வாரியூர்) ஆகிய 20 இடங்களில் செயல்பட்டுவரும் உயர்நிலைப் பள்ளிகள் அரசு…
நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்துக்குப் பிறகு நிவின் பாலி, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’. இதனை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்பபடத்தில் அஜு வர்கீஸ், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது காமெடி, ஆக்ஷன் கலந்த எண்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளதை டீசரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விழுப்புரம்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அன்புமணி குறித்து முக்கிய முடிவை நிறுவனர் ராமதாஸ் எடுக்கக் கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸின் மனைவியும், அன்புமணியின் தாயாருமான சரஸ்வதி அம்மையாரின் பிறந்த தினம் நேற்று என்பதால், அவருக்கு ராமதாஸ் மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி நேற்றிரவு தைலாபுரத்திற்குச் சென்றார். அப்போது அவர் தனது தாயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றார். தாயும் மகனும் சந்தித்த நிலையில் ராமதாஸும் அதே இல்லத்தில் தான் இருந்தார். இவர்கள் இருவரும் பேசினார்களா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்திற்கு அன்புமணி சென்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது.
மதுரை: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் சேவையின் 48-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மதுரை-சென்னை இடையே இயங்கி வரும் பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல் நடைமேடையில் காலை 6 மணிக்கு வைகை ரயில் இன்ஜின் முன்பாக ரயில் பயணிகள், ஆர்வலர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து முன்னாள், தற்போதைய ரயில் ஓட்டுநர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உற்சாகமாக புறப்பட்டது.
இந்தியில் ‘கூலி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையினை பென் மீடியா கைப்பற்றி வெளியிட்டது. இதில் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே வேளையில் ‘வார் 2’ படமும் வெளியானதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது. தற்போது ‘வார் 2’ மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை தழுவி இருக்கிறது. அதே வேளையில் இதர மாநிலங்களை விட, வட இந்தியாவில் ‘கூலி’ படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. வட இந்தியாவில் மொத்தமாக 3000 முதல் 3500 வரையிலான திரையரங்குகளில் ‘கூலி’ வெளியிடப்பட்டது. மக்களிடையே வரவேற்பினால் இப்போது 4500-5000 திரையரங்குகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ’கூலி’ படத்துக்கு கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளது. ஆனால், இப்படத்தினை விட ‘வார் 2’ மிக மோசமான விமர்சனங்களை…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ் இலவசமாக வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர், அருமுளை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து ‘திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை’ ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலக் கோட்டை கீழையூரைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்.கோவிந்த ராஜ்(80), பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு…
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இன்று சுற்றுலாத்துறை பெரிய காரணியாக விளங்குகிறது. உலக அளவில் நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், மனித நாகரிகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. உலகம் – இந்தியா – மாநில அளவில் சுற்றுலா வளர்ச்சி: 2024 ம் ஆண்டில், உலக அளவில் ஏறத்தாழ 1.4 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டினை விட 11 சதவீதம் அதிகமாகும். இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 ல் 8.15 மில்லியன்…
பயிற்சி முறை உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT), செயலில் மீட்பு பிரிவுகளைத் தொடர்ந்து தீவிரமான உடல் வேலைகளின் சுருக்கமான காலங்களைக் கொண்டுள்ளது. பயிற்சி முறை உங்கள் இதயத்தை திறம்பட பலப்படுத்துகிறது, ஏனென்றால் இது இதய துடிப்பு மற்றும் தசை சுருக்கம் தீவிரத்தை அதிகரிக்க உங்கள் இருதய அமைப்பைத் தள்ளுகிறது.1-2 நிமிட இடைவெளியில் நடைபயிற்சி அல்லது மெதுவாக ஜாகிங் செய்வதைத் தொடர்ந்து நீங்கள் 30 விநாடிகள் ஓடும் அல்லது ஜம்பிங் ஜாக்குகளைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முறை 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்கிறது. HIIT பயிற்சி ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்கள் இதயத்தை அதிக இரத்தத்தை செலுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இதய தசைகள் மிகவும் நெகிழ்வானதாக இருக்கும். உடல் கொழுப்பைக் குறைக்கவும், உங்கள் உடல் இன்சுலின் எவ்வாறு கையாளுகிறது என்பதை மேம்படுத்தவும் பயிற்சி முறை செயல்படுகிறது.HIIT க்கு அறிந்தவர்கள் அடிப்படை இயக்கங்களுடன் தொடங்கலாம், குறைந்த தீவிரத்தில், பின்னர் அவர்களின் முயற்சிகளை…
ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருந்த ‘தேவரா 2’ கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூனியர் என்.டி.ஆர் – கொரட்டலா சிவா இணைப்பில் வெளியான படம் ‘தேவரா’. இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் பாகம் மட்டுமே வெளியானது. 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது பற்றிய தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது இதன் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தேவாரா’ முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனால் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், படக்குழுவினர் கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது இப்படம் கைவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. இதனை நந்தமுரி கல்யாண் ராம் தயாரித்து…