Author: admin

ஒருநாள் அக்காவின் கணவர் அகமது ஜலாலுதீனுடன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார் கலாம். அப்போது வானில் பறவைகள் பறந்துகொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவர், ‘இந்தப் பறவைகள் எப்படிப் பறக்கின்றன?’ என்று கேட்டார். ‘பறவைகள் என்ன, மனிதனே இப்போது விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டான். உங்க அண்ணன் சம்சுதீன் செய்தித்தாள் முகவர். அவரிடம் கேட்டு, தினமும் செய்தித்தாள் படி. நம்ம மாணிக்கத்தின் நூலகத்துக்குப் போனால், நிறைய புத்தகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் படித்தால் உன் அறிவு விரிவாகும்’ என்றார் ஜலாலுதீன். அன்றிலிருந்து பாடக் கல்வி அல்லாத பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தார் கலாம்.

Read More

இந்தியா-ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது. துருவ் ஜுரெல் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். ரிஷப் பண்ட்டின் பிரதம போட்டியாளரான துருவ் ஜுரெல் இப்படி ஆட, ரிஷப் பண்ட்டோ 3 முறை சரியான அடி வாங்கி காயத்தினால் வெளியேறவும் செய்தார். இங்கிலாந்து பயணத்தின் போது தேவையில்லானல் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடுகிறேன் என்று ஃபுல்டாசில் பாதத்தில் வாங்கி கடும் காயமடைந்து சிகிச்சை முடிந்து இப்போது தான் திரும்பி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியிலும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.

Read More

மாஸ்கோ: ரஷ்யா – உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காணும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடு​பட்​டார். இதனால் அதிபர் ட்ரம்ப்​பும் – ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்​கா​வில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்​தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்​ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்​குதலில் ஈடு​பட்​டது. இது அதிபர் ட்ரம்ப்​புக்கு ஏமாற்​றத்தை அளித்​தது. இதனால் உக்​ரைனுக்கு மீண்​டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது. தொலை​தூரம் சென்​றும் தாக்கும் அமெரிக்​கா​வின் டொம ஹாக் ஏவு​கணை​யை, உக்​ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது.

Read More

கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஐபிஎல் -இந்தியன் பீனல் லா’. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர் நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் குமார் தயாரித்துள்ளார். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார். நவ.28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Read More

இப்​பணி​களை வெற்​றிகர​மாக மேற்​கொண்டு முடிக்க அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சிகளின் வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களின் பங்​கானது இன்​றியமை​யாதது. அரசி​யல் கட்​சிகளின் முழு​மை​யான பங்​களிப்பை உறுதி செய்​யும் வகை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யம் தனது கடந்த அக்​.27-ம் தேதி​யிட்ட கடிதத்​தில் தெரி​வித்​துள்ள வழி​காட்​டு​தல்​கள்​படி, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிஎல்​ஏ-க்​கள், வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு முன்பு வரை நாள்​தோறும் அதி​கபட்​சம் 50 எண்​ணிக்​கையி​லான நிரப்​பப்​பட்ட எஸ்​ஐஆர் படிவங்​களை பெற்று வழங்க அனு​மதி அளித்து உள்​ளது.தண்​டனைக்குரியது: அவ்​வாறு படிவங்​களை சமர்ப்​பிக்​கும்​போது பிஎல்​ஏக்​கள் “என்​னால் வழங்​கப்​படும் இந்த தகவல்​கள் அனைத்​தும் என் பாகத்​துக்கு உட்​பட்ட வாக்​காளர் பட்​டியல் உடன் சரி​பார்க்​கப்​பட்​டது என உறுதி அளிக்​கிறேன். தவறான தகவல்​கள் அளிப்​பது மக்​கள் பிர​தி​நித்​துவ சட்​டம் 1950, பிரிவு 31-ன் படி தண்​டனைக்கு உரியது என்​ப​தை​யும் நான் அறிவேன்” என்ற உறு​தி​மொழியை​யும் இணைத்து அலுவலர்கள் அளிக்க வேண்​டும்.

Read More

இந்த சூழ்​நிலை​யில் இரு நாடு​களுக்​கிடையி​லான உறவில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, வரும் அக்​டோபர் 26-ம் தேதி முதல் சீனா​வுக்கு நேரடி விமான சேவை இயக்​கப்​படும் என மத்​திய விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகம் கடந்த 2-ம் தேதி அறி​வித்​தது. இதன்​படி, இந்​தி​யா​வின் இண்​டிகோ நிறு​வனம் 5 ஆண்​டுகளுக்​குப் பிறகு முதல் முறை​யாக கொல்​கத்​தா- கு​வாங்சு (சீ​னா) இடையே 26-ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்க உள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. இது​போல, டெல்​லி-கு​வாங்சு இடையே நவம்​பர் 10-ம் தேதி முதல் விமான சேவை தொடங்​கும் என அறி​வித்​துள்​ளது.இது​போல, இந்த ஆண்டு இறு​திக்​குள் சீனா​வுக்கு நேரடி விமான சேவை இயக்​கப்​படும் என ஏர் இந்​தியா நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இந்த சூழலில், ஷாங்​காய்​-டெல்லி இடையே நவ.9-ம் தேதி விமான சேவை (வாரத்​துக்கு 3 நாள்) தொடங்​கப்​படும் என சீனாவைச் சேர்ந்த ஈஸ்​டர்ன் ஏர்​லைன்ஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

Read More

விரைவாக தப்பிக்க ஏங்கும் ஆனால் நாட்கள் மிச்சமில்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். சரியான மாற்று மருந்து என்பது ஒரு நாள் பயணமாகும்-பாதுகாப்பாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் உணரும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் உண்மையான இடைவெளியைப் போல் உணரும் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. கலாச்சாரம், அமைதி, இயற்கை அல்லது சிறந்த உணவு என நீங்கள் எதைத் தேடினாலும் முக்கிய இந்திய நகரங்களில் இருந்து இந்த எட்டு ஒரு நாள் பயணங்கள் எளிதான மற்றும் உற்சாகத்தின் சரியான கலவையை வழங்குகின்றன. பட்டியலில் மேலும் நகரங்களைச் சேர்க்க விரும்பினால், கருத்துகள் பிரிவில் உங்கள் எண்ணங்களைப் பகிரவும்.டெல்லியில் இருந்து: நீம்ரானா கோட்டை ஒரு அரச இடைநிறுத்தத்திற்கு டெல்லியில் இருந்து இரண்டு மணிநேரத்தில், 15 ஆம் நூற்றாண்டின் நீம்ரானா கோட்டை அரண்மனை, அந்த ஏகபோகத்தை உடைக்க அந்த விரைவான பின்வாங்கலுக்கான குறைபாடற்ற தளம் போல ஆரவல்லியின் மீது நிற்கிறது. இந்த பின்வாங்கல் வரலாற்றுக்கு ஆறுதலின் சிறந்த விகிதத்தை…

Read More

அதே​நேரம் ஜன் சுராஜ் கட்​சி​யின் வேட்​பாளர் சஞ்​சல் குமார் வெறும் 3,086 வாக்​கு​களை மட்​டுமே பெற்​றார். லாலு பிர​சாத் யாதவ் குடும்​பத்​துக்கு மிக​வும் பாது​காப்​பான கோட்​டை​யாக ரகோபூர் தொகுதி உள்​ளது. இங்கு இவர்​களது குடும்​பத்​தினருக்கு செல்​வாக்கு அதி​கம். அதனால்​தான், கடந்த தேர்​தல்​களில் ராப்ரி தேவி, லாலு பிர​சாத் யாதவ் இந்த தொகு​தி​யில் பலமுறை போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ளனர். கடந்த 2015-ம் ஆண்​டிலிருந்து தேஜஸ்வி இத்​தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தொடர்ந்து வெற்​றி​பெற்று வரு​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் தேஜஸ்வி 38,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற்று வெற்​றி​பெற்​றார். ஆனால், இந்த முறை வெறும் 14,000 வாக்​கு​களில் மட்​டுமே அவர் வெற்றி சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. இது, தேஜஸ்​வி​யின் செல்​வாக்கு அத்​தொகு​தி​யில் குறைந்து வரு​வதை எடுத்​துக்​காட்​டு​வ​தாக அரசி​யல் திற​னாய்​வாளர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Read More

‘தூக்கத்தில் காண்பது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று சொன்னவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ’கனவு உலகத்தில் வாழ்ந்தால் நனவுலகம் நழுவிப் போகும்’ என்று கூறப்பட்ட காலக்கட்டத்தில், தான் கண்ட கனவுகளின் கைபிடித்து நடை போட்டு வெற்றிகளை அள்ளியவர் கலாம். கனவுகளை லட்சியங்களுக்கான விதைகளாகவும் கண்டறிதல்களுக்கான தொடக்கப்புள்ளிகளாகவும் நோக்கியவர் கலாம். விண்வெளி அறிவியலில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பல துறைகளுக்கும் பொருத்த மானதாக அமைந்தன கனவுகள் குறித்த கலாமின் கருத்துகள்.

Read More

சிட்னி: என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார். ஆஸ்திரேலியாவின் சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ராதி​கா​வும், கனடா​வின் இமான் ஷாஹீனும் மோதினர். 61 நிமிடங்​கள் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ரா​தி​காவை வீழ்த்தி பட்​டம் வென்​றார்.

Read More