Author: admin

விழுப்புரம்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அன்புமணி குறித்து முக்கிய முடிவை நிறுவனர் ராமதாஸ் எடுக்கக் கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸின் மனைவியும், அன்புமணியின் தாயாருமான சரஸ்வதி அம்மையாரின் பிறந்த தினம் நேற்று என்பதால், அவருக்கு ராமதாஸ் மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி நேற்றிரவு தைலாபுரத்திற்குச் சென்றார். அப்போது அவர் தனது தாயை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றார். தாயும் மகனும் சந்தித்த நிலையில் ராமதாஸும் அதே இல்லத்தில் தான் இருந்தார். இவர்கள் இருவரும் பேசினார்களா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தைலாபுரத்திற்கு அன்புமணி சென்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது.

Read More

மதுரை: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் சேவையின் 48-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மதுரை-சென்னை இடையே இயங்கி வரும் பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த ரயிலுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல் நடைமேடையில் காலை 6 மணிக்கு வைகை ரயில் இன்ஜின் முன்பாக ரயில் பயணிகள், ஆர்வலர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து முன்னாள், தற்போதைய ரயில் ஓட்டுநர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உற்சாகமாக புறப்பட்டது.

Read More

இந்தியில் ‘கூலி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையினை பென் மீடியா கைப்பற்றி வெளியிட்டது. இதில் ஆமிர்கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே வேளையில் ‘வார் 2’ படமும் வெளியானதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது. தற்போது ‘வார் 2’ மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியை தழுவி இருக்கிறது. அதே வேளையில் இதர மாநிலங்களை விட, வட இந்தியாவில் ‘கூலி’ படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. வட இந்தியாவில் மொத்தமாக 3000 முதல் 3500 வரையிலான திரையரங்குகளில் ‘கூலி’ வெளியிடப்பட்டது. மக்களிடையே வரவேற்பினால் இப்போது 4500-5000 திரையரங்குகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ’கூலி’ படத்துக்கு கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளது. ஆனால், இப்படத்தினை விட ‘வார் 2’ மிக மோசமான விமர்சனங்களை…

Read More

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை சிங்கப்பூர் தொழிலதிபர் பொன்.கோவிந்தராஜ் இலவசமாக வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், திருமங்கலக்கோட்டை கீழையூர், மேலையூர், அருமுளை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக கிராம மக்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் இணைந்து ‘திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு அறக்கட்டளை’ ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலக் கோட்டை கீழையூரைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்.கோவிந்த ராஜ்(80), பள்ளியின் இட நெருக்கடியை போக்கும் விதமாக, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். இதற்கான ஆவணத்தை கோவிந்தராஜ் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருமங்கலக்கோட்டை வட்டார கல்வி வளர்ச்சி குழு…

Read More

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இன்று சுற்றுலாத்துறை பெரிய காரணியாக விளங்குகிறது. உலக அளவில் நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், மனித நாகரிகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. உலகம் – இந்தியா – மாநில அளவில் சுற்றுலா வளர்ச்சி: 2024 ம் ஆண்டில், உலக அளவில் ஏறத்தாழ 1.4 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டினை விட 11 சதவீதம் அதிகமாகும். இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 ல் 8.15 மில்லியன்…

Read More

பயிற்சி முறை உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT), செயலில் மீட்பு பிரிவுகளைத் தொடர்ந்து தீவிரமான உடல் வேலைகளின் சுருக்கமான காலங்களைக் கொண்டுள்ளது. பயிற்சி முறை உங்கள் இதயத்தை திறம்பட பலப்படுத்துகிறது, ஏனென்றால் இது இதய துடிப்பு மற்றும் தசை சுருக்கம் தீவிரத்தை அதிகரிக்க உங்கள் இருதய அமைப்பைத் தள்ளுகிறது.1-2 நிமிட இடைவெளியில் நடைபயிற்சி அல்லது மெதுவாக ஜாகிங் செய்வதைத் தொடர்ந்து நீங்கள் 30 விநாடிகள் ஓடும் அல்லது ஜம்பிங் ஜாக்குகளைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முறை 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்கிறது. HIIT பயிற்சி ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்கள் இதயத்தை அதிக இரத்தத்தை செலுத்த உதவுகிறது, அதே நேரத்தில் இதய தசைகள் மிகவும் நெகிழ்வானதாக இருக்கும். உடல் கொழுப்பைக் குறைக்கவும், உங்கள் உடல் இன்சுலின் எவ்வாறு கையாளுகிறது என்பதை மேம்படுத்தவும் பயிற்சி முறை செயல்படுகிறது.HIIT க்கு அறிந்தவர்கள் அடிப்படை இயக்கங்களுடன் தொடங்கலாம், குறைந்த தீவிரத்தில், பின்னர் அவர்களின் முயற்சிகளை…

Read More

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருந்த ‘தேவரா 2’ கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூனியர் என்.டி.ஆர் – கொரட்டலா சிவா இணைப்பில் வெளியான படம் ‘தேவரா’. இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் பாகம் மட்டுமே வெளியானது. 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது பற்றிய தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை. தற்போது இதன் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தேவாரா’ முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனால் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், படக்குழுவினர் கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது இப்படம் கைவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. இதனை நந்தமுரி கல்யாண் ராம் தயாரித்து…

Read More

சேலம்: “ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் திமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சேலத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன் திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்டுகள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்தக் கொள்கை உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். சேலம் சிறையில் 22 கைதிகள் 1950-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நாளை கண்டன நாளாக அறிவித்த பெரியார், ஊரடங்கு ஊர்வலங்களை நடத்தினார். அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று மணி மண்டபம் அமைக்கப்படும். திமுக தோழமைக் கட்சிகளின் ஒற்றுமை, பலரின் கண்களை உறுத்துகிறது. இந்தக் கூட்டணியை உடைக்க எத்தனையோ சதிச் செயல்களையும், பொய்ச் செய்திகளையும் பரப்பப்புகின்றனர். அதில் முக்கியமானவர்…

Read More

கவனமுள்ள காலை பழக்கத்துடன் உங்கள் நாளை தொடங்குவது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் நிகழ்த்தப்படும் எளிய நடைமுறைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், புழக்கத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இந்த நடைமுறைகள் நாட்பட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் ஒட்டுமொத்த ஆற்றலையும் நல்வாழ்வையும் அதிகரிக்கின்றன. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் காலையில் அதிகப்படியான நீரேற்றத்தை இணைத்து கிக்ஸ்டார்ட்ஸ் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடல் இயற்கையாக நச்சுத்தன்மையை ஏற்படுத்த உதவுகிறது. இந்த பழக்கவழக்கங்களுடன் நிலைத்தன்மை, மருத்துவ ஆலோசனை மற்றும் வழக்கமான கண்காணிப்புடன் இணைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீண்டகால சுகாதார விளைவுகளை பெரிதும் மேம்படுத்துகிறது.இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை சமப்படுத்த காலை பழக்கம்1. ஆழமான சுவாசம் அல்லது தியானத்தை பயிற்சி செய்யுங்கள்ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் அல்லது தியானத்துடன் உங்கள்…

Read More

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், “எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது” என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும். எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது. பாஜக அரசு ஒருபுறம், தேர்தல் கமிஷனை தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு எஸ்ஐஆர் போன்ற பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது ஏவுகிறது. அதனடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து கட்சியோடு உறுதுணையாக நிற்கக் கூடியவர். எந்த பயமுறுத்தலாலும் கட்சித் தொண்டர்களை அச்சுறுத்த முடியாது” என்று அவர் கூறினார். இதனிடையே, “‘வாக்கு திருட்டு’ என்ற…

Read More