Author: admin

ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு வடிவத்திற்குள் ஒரு மறைக்கப்பட்ட எண்ணைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. படம் “4576” என்ற எண்ணை பல முறை காட்டுகிறது, ஆனால் புத்திசாலித்தனமாக “4567” எண். பங்கேற்பாளர்கள் ஒற்றைப்படை எண்ணை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதில் பணிபுரிகிறார்கள். தீர்வு “4567” 7 வது வரிசை மற்றும் 2 வது நெடுவரிசையில் அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பார்வை கூர்மையானது மற்றும் உங்கள் கவனம் வெல்ல முடியாதது என்று நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் மாயை அதைச் சோதிக்க இங்கே உள்ளது, மேலும் இது முதல் பார்வையை விட கடினமாக உள்ளது!படத்தில், முழு காட்சியிலும் மீண்டும் மீண்டும் “4576” என்ற அதே எண்ணைக் கொண்ட ஒரு வடிவத்தை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த வடிவத்திற்குள் கவனமாக மறைக்கப்பட்டிருப்பது ஒற்றைப்படை எண் “4567”. ஒற்றைப்படை வார்த்தையை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது உங்கள் சவால்.படம்: ஃப்ரீஜோபாலெர்ட்.காம்இது எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால்…

Read More

வேலூர்: இந்​தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்​கி​யம் என்று விஐடி பல்​கலை. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். வேலூர் விஐடி பல்​கலை.​யின் 40-வது பட்​டமளிப்பு விழா மற்​றும் அப்​துல் கலாம்​-ஜெகதீஷ் சந்​திர​போஸ் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. வேந்​தர் கோ.​விசுவ​நாதன் தலைமை வகித்​தார். உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்​குப் பட்​டங்​களை வழங்​கி​னார். விழா​வில் விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசி​ய​தாவது: நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்​டும். மத்​திய அரசு பட்​ஜெட்​டில் 2.5 சதவீதம் மட்​டுமே கல்விக்கு ஒதுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில், தமிழகம் 21 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கி நாட்​டிலேயே முன்​னணி மாநில​மாகத் திகழ்​கிறது. புதிய கல்விக் கொள்​கை​யில் உயர்​கல்வி மாணவர் சேர்க்​கையை 50 சதவீத​மாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது உயர்​கல்வி பயில்​வோரின் எண்​ணிக்​கையை 8 கோடி​யாக உயர்த்த வேண்​டும். இதற்கு அதிக உட்​கட்​டமைப்பு…

Read More

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஆக. 18-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வுவ​தால் வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று (ஆக.17) இடி, மின்​ன லுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். நாளை ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை​யும், 19 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்​களி​லும், 22-ம் தேதி சில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை​ பெய்​யக்​கூடும். இன்று நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டத்​தின் மலைப்பகு​தி​களில் ஓரிரு இடங்​களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகு​திகளில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்படும். நகரின் சில பகு​திகளில் லேசான…

Read More

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர். மேலும் சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவுஎடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர்…

Read More

சென்னை: இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வப் படிப்​புக்கு 4,200-க்​கும் மேற்​பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ​தரவரிசைப் பட்​டியல் அடுத்த வாரம் வெளி​யிடப்​படு​கிறது. ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வப் பட்​டப்​படிப்​புக்கு (BNYS) 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு www.tnhealth.tn.gov.in மற்​றும் www.tnayushselection.org ஆகிய சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. பின்​னர், மாணவ, மாணவி​களின் கோரிக்​கையை ஏற்​று, விண்​ணப்​பிக்​கும் அவகாசம் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது. அந்த வகை​யில், 4,200-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யும் பணி நடை​பெற்று வரு​கிறது. அடுத்த வாரம் தகு​தி​யான மாணவர்​களின் தரவரிசை பட்​டியலை வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

Read More

திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ​திரு​வள்​ளூர் மாவட்​டம் திருத்​தணி​யில் உள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில், முரு​க​னின் அறு​படை வீடு​களில் ஒன்​றாக விளங்​கு​கிறது. இக்​கோயி​லில், ஆண்​டு​தோறும் ஆடிக் கிருத்​திகை திரு​விழா சிறப்​பாக நடை​பெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்​திகை திரு​விழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்​வினி விழாவோடு தொடங்​கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான ஆடிக் கிருத்​திகை திரு​விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. அதி​காலை 4 மணி அளவில் மூல​வருக்கு சிறப்பு அபிஷே கம் மற்​றும் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. தங்​கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்​கல் மற்​றும் வைர ஆபரணங்​கள் அணி​வித்​து, சிறப்பு தீபா​ராதனை நடை​பெற்​றது. அதே​போல், காவடி மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் காட்​சி​யளித்த உற்​சவருக்கு தீபா​ராதனை நடை​பெற்​றது. தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும், ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பிற​மாநிலங்​களில் இருந்​தும்…

Read More

சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: சாதிய ரீதியி​லான தீண்​டாமை கொடுமை​களை களை​யும் வித​மாக பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யினத்​தவர்​களுக்கு கல்​வி, வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட அரசின் அனைத்து திட்​டங்​களி​லும், தேர்​தலிலும் முன்​னுரிமை​யுடன் கூடிய இடஒதுக்​கீடு அளிக்​கப்​பட்டு வரு​கிறது. நாடு முழு​வதும் பட்​டியலினத்​தவர்​களுக்​கான பிரி​வில் ஆதி​தி​ரா​விடர், ஆதி ஆந்​தி​ரா, ஆதி கர்​நாட​கா, தேவேந்​திரகுளத்​தான் உள்​ளிட்ட 76 சாதி​யினர் உள்​ளனர். இதில் ஆதி​தி​ரா​விடர் என்​பதும் ஒரு பிரிவு​தான். ஆனால், தமிழகத்​தில் பட்​டியல் சாதி​யினத்​தவர்​களுக்​கான நலத்​துறையை தமிழக அரசு கடந்த 1969-ம் ஆண்டு ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை என பெயர் மாற்​றம் செய்​துள்​ளது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு புறம்​பானது. எனவே, ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை​யின் பெயரை பட்​டியல் சாதி​யினர் நலத்​துறை என பெயர்…

Read More

புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றுநடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி,…

Read More

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள் மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​படும் என்று துறை​யின் அமைச்​சர் அன்​பில் மகேஸ் சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யின்​போது அறி​விப்பு வெளி​யிட்​டார். அதை செயல்​படுத்​தும் வித​மாக தற்​போது 20 உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக தரம் உயர்த்​தப்​பட்​டுள்ளன. அதன்​படி கடலூர் (பண்​ருட்​டி),கள்​ளக்​குறிச்சி (ரிஷிவந்​தி​யம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்​கல்​பட்டு (பேரனூர் கிராமம்), திண்​டுக்​கல் (வள​விசெட்​டிபட்​டி),மதுரை (செட்​டிகுளம்), திருச்சி (கள்​ளக்​காம்​பட்​டி), திருப்​பத்​தூர் (திம்​மாம்​பேட்​டை), சென்னை (மாத்​தூர்), விழுப்​புரம் (கஞ்​சனூர்), திருச்சி (கலைஞர் கருணாநிதி நகர்), விழுப்​புரம் (மேல்​கரணை), ராம​நாத​புரம் (வாலிநோக்​கம்), திருப்​பூர் (முதலி​பாளை​யம்), கிருஷ்ணகிரி (பாத்​தகோட்​டா), சேலம் (லக்​கம்​பட்​டி), திரு​வண்​ணா​மலை (வேளானந்​தல்), நாகப்​பட்​டினம் (கணப​திபுரம்), ராம​நாத​புரம் (புது​மடம்), கன்​னி​யாகுமரி (வாரியூர்) ஆகிய 20 இடங்​களில் செயல்​பட்​டு​வரும் உயர்​நிலைப் பள்​ளி​கள் அரசு…

Read More

நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்துக்குப் பிறகு நிவின் பாலி, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’. இதனை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்பபடத்தில் அஜு வர்கீஸ், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது காமெடி, ஆக்‌ஷன் கலந்த எண்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளதை டீசரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read More