டெல் அவிவ்: இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
Author: admin
‘த தின்மேன்’ தொடரின் 4-வது படம், ஷேடோ ஆஃப் த தின் மேன் (Shadow of the Thin Man – 1941). கொலையைக் கண்டுபிடிக்கச் சொன்னவர்தான், கொலையாளி என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் லைன். நிக், ஓய்வு நேரத்தைக் கழிக்க, மனைவி நோராவுடன் குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்குச் செல்கிறார். அங்கு குளியலறையில் ஒரு ‘ஜாக்கி’ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். போலீஸாரும், பத்திரிகையாளர்களும் பரபரப்பாகக் கூடியிருக்க, லெப்டினன்ட் ஏப்ரம்ஸ் அந்த கேஸை விசாரிக்கிறார். பந்தயக் குழுவின் துணை இயக்குநராகப் பதவி ஏற்றிருக்கும் மேஜர் ஸ்கல்லியும் , பால் என்ற பத்திரிகை நிருபரும் ஜாக்கியின் கொலையைச் விசாரிக்கச் சொல்லி, நிக்கின் வீடு தேடி வருகிறார்கள். சூதாட்டக் குழுவை நடத்தும் லிங்க் ஸ்டீபன்ஸ் மற்றும் ஃபிரட் மேஸியுடன் ஜாக்கி ஒத்துப் போகாததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியை வைத்து நிக் விசாரிக்கிறார்.
சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்தார்.மதுரையில் செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் பேசுகையில், “எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக இன்று போராட்டம் நடத்தியது. இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகளை நடத்தினால், பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும். இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொடுமைப் படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று காலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்து, மாலையில் ரூ.400 உயர்ந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. இதனால், தங்கம் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு பவுன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,091, ஒரு பவுன் ரூ.1,04,728 ஆக இருந்தது. வெள்ளி விலையும் குறைந்தது: வெள்ளி விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.13,000 குறைந்து, ரூ.1,90,000 ஆகவும் இருந்தது.
ஹாலிவுட் பிரீமியர்களின் சலசலப்பு முதல் அதிகாலை நடைப்பயிற்சி வரை, மிண்டி கலிங்கின் மாற்றம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவரது மெலிதான நிழற்படத்திற்குப் பின்னால் உள்ள பாதை டேப்லாய்டுகள் பரிந்துரைப்பதை விட மிகவும் குறைவான வியத்தகு முறையில் உள்ளது. 45 வயதான நடிகையின் மிதமான தன்மை, இயக்கம் மற்றும் மனநிலையின் மாற்றத்தை இங்கே பாருங்கள். மிண்டியின் மாற்றத்தைத் தூண்டியது எது கலிங்கைப் பொறுத்தவரை, திருப்புமுனை ஒரு பாத்திரம் அல்லது விருதுப் பருவம் அல்ல, அது மீண்டும் ஒரு அம்மாவாக மாறியது. செப்டம்பர் 2020 இல், தொற்றுநோய் பூட்டப்பட்ட ஆரம்ப நாட்களில் அவர் தனது மகன் ஸ்பென்சரை வரவேற்றார். ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு, வீட்டுக்குள்ளேயே வாழ்க்கை தள்ளப்பட்டதால், “நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு” என்று அவர் விவரித்ததைக் கழித்தார். வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியதும், லாக்டவுனின் போது சுற்றியிருப்பதை, திட்டமிடப்படாத உணவுகள், ஆறுதல் உணவுகள், உண்மையான வழக்கமான உணவுகள் எதுவுமே அவள் எப்படி அடிக்கடி…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களின் பாஜக தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பார்கள்.பிஹாரில் காட்டாட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது நடைபெறும் காட்டாட்சியை மக்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிஹார் மாநில தேர்தல் வெற்றி,இந்த மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டி உள்ளார்.
சென்னை: பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 118 இணைப்புக் கல்லூரிகளும், 37 தன்னாட்சி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் பட்டப் படிப்பையோ அல்லது பட்டமேற்படிப்பையோ முடிக்கும் மாணவர்களுக்கு அனைத்து செமஸ்டர் மதிப்பெண்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், புரவிஷனல் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டு காலமாக மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிஷனல் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணி 255 ரன்களும், தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்களும் எடுத்தன. 34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 0, தேவ்தத் படிக்கல் 24, சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 26 ரன் களுடனும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.
காபூல்: பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்கள் 58 பேர் இறந்தனர். இந்நிலையில், காந்தகார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கன் மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் பாக். வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
சென்னை: தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த Sprit Media Private Limited ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து காந்தா என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளன.
