Author: admin

டெல் அவிவ்: இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த ஹமாஸ் குழு​வினருக்​கும் இடையே 2 ஆண்​டு​களாக போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. 13-ம் தேதி எகிப்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் எகிப்து அதிபர் அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

Read More

‘த தின்மேன்’ தொடரின் 4-வது படம், ஷேடோ ஆஃப் த தின் மேன் (Shadow of the Thin Man – 1941). கொலையைக் கண்டுபிடிக்கச் சொன்னவர்தான், கொலையாளி என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் லைன். நிக், ஓய்வு நேரத்தைக் கழிக்க, மனைவி நோராவுடன் குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்குச் செல்கிறார். அங்கு குளியலறையில் ஒரு ‘ஜாக்கி’ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். போலீஸாரும், பத்திரிகையாளர்களும் பரபரப்பாகக் கூடியிருக்க, லெப்டினன்ட் ஏப்ரம்ஸ் அந்த கேஸை விசாரிக்கிறார். பந்தயக் குழுவின் துணை இயக்குநராகப் பதவி ஏற்றிருக்கும் மேஜர் ஸ்கல்லியும் , பால் என்ற பத்திரிகை நிருபரும் ஜாக்கியின் கொலையைச் விசாரிக்கச் சொல்லி, நிக்கின் வீடு தேடி வருகிறார்கள். சூதாட்டக் குழுவை நடத்தும் லிங்க் ஸ்டீபன்ஸ் மற்றும் ஃபிரட் மேஸியுடன் ஜாக்கி ஒத்துப் போகாததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியை வைத்து நிக் விசாரிக்கிறார்.

Read More

சென்னை: “எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை.” என அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளித்தார்.மதுரையில் செய்தியாளர்களிடம் நிர்மல் குமார் பேசுகையில், “எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக இன்று போராட்டம் நடத்தியது. இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகளை நடத்தினால், பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும். இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொடுமைப் படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

Read More

இந்நிலையில், நேற்று காலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்து, மாலையில் ரூ.400 உயர்ந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. இதனால், தங்கம் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரு பவுன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13,091, ஒரு பவுன் ரூ.1,04,728 ஆக இருந்தது. வெள்ளி விலையும் குறைந்தது: வெள்ளி விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.13,000 குறைந்து, ரூ.1,90,000 ஆகவும் இருந்தது.

Read More

ஹாலிவுட் பிரீமியர்களின் சலசலப்பு முதல் அதிகாலை நடைப்பயிற்சி வரை, மிண்டி கலிங்கின் மாற்றம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவரது மெலிதான நிழற்படத்திற்குப் பின்னால் உள்ள பாதை டேப்லாய்டுகள் பரிந்துரைப்பதை விட மிகவும் குறைவான வியத்தகு முறையில் உள்ளது. 45 வயதான நடிகையின் மிதமான தன்மை, இயக்கம் மற்றும் மனநிலையின் மாற்றத்தை இங்கே பாருங்கள். மிண்டியின் மாற்றத்தைத் தூண்டியது எது கலிங்கைப் பொறுத்தவரை, திருப்புமுனை ஒரு பாத்திரம் அல்லது விருதுப் பருவம் அல்ல, அது மீண்டும் ஒரு அம்மாவாக மாறியது. செப்டம்பர் 2020 இல், தொற்றுநோய் பூட்டப்பட்ட ஆரம்ப நாட்களில் அவர் தனது மகன் ஸ்பென்சரை வரவேற்றார். ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு, வீட்டுக்குள்ளேயே வாழ்க்கை தள்ளப்பட்டதால், “நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு” என்று அவர் விவரித்ததைக் கழித்தார். வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியதும், லாக்டவுனின் போது சுற்றியிருப்பதை, திட்டமிடப்படாத உணவுகள், ஆறுதல் உணவுகள், உண்மையான வழக்கமான உணவுகள் எதுவுமே அவள் எப்படி அடிக்கடி…

Read More

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றி​யால் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களின் பாஜக தொண்​டர்​களுக்கு புது சக்தி கிடைத்​திருக்​கிறது. பாஜக தொண்​டர்​களால் முடி​யாதது என்று எது​வுமே இல்​லை. அவர்​கள் மனது வைத்​தால் எதை​யும் சாதிப்​பார்​கள்.பிஹாரில் காட்​டாட்சி ஏற்​படு​வது தடுக்​கப்​பட்டு உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் தற்​போது நடை​பெறும் காட்​டாட்​சியை மக்​கள் அகற்ற வேண்​டும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்​கு​வங்​கம், அசாம் மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் மாநில தேர்​தல் வெற்​றி,இந்த மாநிலங்​களி​லும்​ எதிரொலிக்​கும்​ என்​று பிரதமர்​ நரேந்​திர மோடி சுட்​டிக்​ ​காட்​டி உள்​ளார்​.

Read More

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். கல்​லூரி​யில் பட்​டப் படிப்​பையோ அல்​லது பட்​டமேற்​படிப்​பையோ முடிக்​கும் மாணவர்​களுக்கு அனைத்து செமஸ்​டர் மதிப்​பெண்​களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ், மாற்​றுச் சான்​றிதழ் உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும். இந்​நிலை​யில், சென்னை பல்​கலைக் கழகத்​தில் பட்​டப்​படிப்பை முடிக்​கும் மாணவர்​களுக்கு கடந்த 3 ஆண்டு கால​மாக மதிப்​பெண் சான்​றிதழ்​கள், புர​விஷனல் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட​வில்​லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்​கள் மேற்​படிப்பை தொடர்​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

Read More

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன. 34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது. அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன் களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்​காமலும் இருந்​தனர்.

Read More

காபூல்: பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் படை​யினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்​கள் 58 பேர் இறந்​த​னர். இந்நிலையில், காந்​த​கார் பகு​தி​யில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று காலை தாக்​குதல் நடத்​தி​ய​து. இதில் ஆப்​கன் மக்​கள் 12 பேர் உயி​ரிழந்​த​னர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். ஆப்​கன் படைகள் நடத்​திய பதில் தாக்​குதலில் பாக். வீரர்​கள் பலர் உயி​ரிழந்​துள்ளனர். இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Read More

சென்னை: தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த Sprit Media Private Limited ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து காந்தா என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

Read More