Author: admin

சென்னை: தமிழகம் முழு​வதும் 950 மையங்​களில் தமிழ் மொழி இலக்​கி​யத் திறனறி தேர்வு நேற்று நடை​பெற்​றது. பிளஸ் 1 மாணவர்​கள் 2.70 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர்.பள்ளி மாணவர்​களிடம் தமிழ்​மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்த, திறனறி தேர்வை பள்​ளிக்​கல்வி இயக்​ககம் நடத்​துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்​கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள், எஞ்​சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்​கள் மற்​றும் பிற தனி​யார் பள்ளி மாணவர்​கள் என அதிக மதிப்​பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். அவர்​களுக்கு 2 ஆண்​டுக்கு மாதம்​தோறும் ரூ.1,500 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​படும்.

Read More

சென்னை: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் ராதிகா சுதந்​திரா சீலன், போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் நியூஸிலாந்​தின் எம்மா மெர்​சனுடன் மோதி​னார். 32 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ராதிகா சுதந்​திரா சீலன் 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

Read More

இந்​நிலை​யில், அமெரிக்க விமானப் படை தொடர்​பான ரகசிய ஆவணங்​களை பதுக்​கியது மற்​றும் ஓட்​டலில் சீன அரசு அதி​காரி​களை சந்​தித்து பேசி​யது ஆகிய குற்​றச்​சாட்​டு​களின் கீழ் ஆஷ்லே டெல்​லிஸை எப்​பிஐ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர். முன்​ன​தாக வெர்​ஜினி​யா​வில் உள்ள அவரது வீட்​டில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. அப்​போது 1,000-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவ ரகசி​யங்​கள் அடங்​கிய ஆவணங்​களை புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள் கைப்​பற்​றினர். அமெரிக்க பாது​காப்​புத் துறை மற்​றும் வெளி​யுறவுத் துறை அலு​வல​கங்​களில் இருந்த ரகசிய ஆவணங்​களை எடுத்துச் சென்றுள்ளார் என்று எப்​பிஐ புல​னாய்​வுத் துறை சிறப்பு ஏஜென்ட் ஜெப்ரி ஸ்காட் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​தார்.மேலும், கடந்த 2002-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் வரை வெர்​ஜினி​யா​வில் உள்ள பிரபல ஓட்​டலில் சீன அதி​காரி​களை ஆஷ்லே டெல்​லிஸ் சந்​தித்து பேசி​யதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தீவிர விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. ஆஷ்லே மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால் 10 ஆண்டு சிறை தண்​டனை​யும்​…

Read More

சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் நடிக்கும் படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் உருவாகும் இப்படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் அனுராக் கஷ்யாப்பின் லுக் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இப்படம் சைக்கோ கில்லர் கதை போன்று தெரிகிறது.

Read More

அதனால், 100 வார்டுகளிலும் இரு கட்சி நிர்வாகிகளும், அதன் கவுன்சிலர்களும் திரைமறைவு அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேயர் இல்லாததால் அவரது இடத்தில் துணைமேயர் நாகராஜன் தங்கள் வார்டுகளில் வந்து மக்கள் குறை கேட்பது, ஆய்வு செய்வதையும் திமுக கவுன்சிலர்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் திமுகவுடன் மோதினால், அது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி விடும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்கி வாசிக்கின்றனர்.ஆனாலும், துணை மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் திரைமறைவு அரசியல் மோதல் அனைத்து நிலைகளிலும் நடந்து வருகிறது. அதன் காரணமாகவே, நேற்று முன்தினம் துணைமேயர் பங்கேற்ற ரூ.2,300 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 2 என்​எம் சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: தரவு​கள் (டேட்​டா) என்​பது தற்​போது கச்சா எண்​ணெய்க்கு இணை​யாக​வும் தரவு மையங்​கள் (டேட்டா சென்​டர்​கள்) என்​பது எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலைகளாக​வும் கருதப்​படு​கின்​றன. தற்​போது டேட்டா மற்​றும் டேட்டா சென்​டர்​களே ஒரு நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை தீர்​மானிக்​கின்​றன. இந்​தத் துறை​யில் இந்​தியா முன்​வரிசையை எட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Read More

உங்கள் நாள் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது நள்ளிரவு ஆசைகள் தோன்றும். உலகம் அமைதியாக இருக்கிறது, உங்கள் மன உறுதி குறைவாக உள்ளது, குளிர்சாதன பெட்டி திடீரென்று காந்தமாக உணர்கிறது. தாமதமாக இரவில் சாப்பிடுவது தூக்கத்தையும் செரிமானத்தையும் சீர்குலைக்கும் என்று ஆய்வுகள் காட்டினாலும், நள்ளிரவில் பசி என்பது ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள் மற்றும் மன அழுத்தத்தால் இயக்கப்படும் ஒரு உண்மையான உடலியல் தூண்டுதல் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. தந்திரம் உங்கள் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் ஆறுதல் தரும் தின்பண்டங்களைத் தேர்ந்தெடுப்பது.ஆரோக்கியமான நள்ளிரவு சிற்றுண்டி அது உண்மையில் இடத்தைத் தாக்கியதுபெர்ரிகளுடன் கிரேக்க தயிர்உணவியல் வல்லுநர்கள் பெரும்பாலும் கிரேக்க தயிரை பரிந்துரைக்கிறார்கள், ஏனெனில் இது மெதுவாக ஜீரணிக்கும் கேசீன் புரதத்தை வழங்குகிறது, இது இரவு முழுவதும் பசியை சீராக வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பெர்ரிகளுடன் ஜோடியாக, இது இரத்த சர்க்கரை ஸ்பைக் இல்லாமல் இனிப்பை வழங்குகிறது. பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷன் தயிரை இரவு நேரத்தில்…

Read More

திருப்பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் உண்​டியல் மூலம் செலுத்​தும் பணத்தை எண்​ணும் இடத்தை ‘பர​காமணி’ என்​றழைக்​கின்​றனர். தீவிர சோதனை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் போன்ற கெடு​பிடிகள் இருந்​தா​லும், தேவஸ்​தான சீனியர் அஸிஸ்​டெண்​டாக பணிபுரிந்து வந்த ரவிக்​ கு​மார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​நாட்டு கரன்​ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்​டிருந்​த​போது, அங்கு பாது​காப்பு பணியி​லிருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவு​மாக பிடித்​தார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சுமார் ரூ.100 கோடி வரை திருடியதை​யும் தான் திருடிய சொத்​துகளில் 2 வீடு​களை மட்​டும் வைத்து கொண்டு மீத​முள்ள அனைத்து சொத்​துகள் அனைத்​தை​யும் மீண்​டும் தேவஸ்​தானத்​திற்கே திருப்பி தான​மாக கொடுத்து விடு​வ​தாக​வும் கூறி​னார். இதனிடையே ஆந்​தி​ரா​வில் ஆட்சி மாறியதையடுத்​து, இது தொடர்​பாக ஆந்​திர உயர்​நீதி மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு சிஐடி போலீ​ஸார் விசா​ரிக்க உத்​தர​விடப்​பட்​டது. சமீபத்​தில் இந்த விசா​ரணைக்கு ரவிக்​கு​மாரை கைது செய்த…

Read More

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில், நீண்ட காலமாகவே புவியியல் காரணிகள் முக்கிய பங்காற்றி வந்துள்ளன. கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை, நீலகிரியின் குக்கிராமங்கள் மற்றும் தருமபுரி, ஈரோட்டில் வனங்களுக்கு அருகில் வாழும் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது.மழைக்காலத்தில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, பள்ளி வருகை குறைவதுடன், இடைநிற்றல் விகிதமும் உயர்வது வாடிக்கையாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில அரசு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் ‘தொல்குடி திட்டம்’ மூலம் பள்ளிக்கென 26 தனி வாகனங்களை திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வழங்க பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது.இதனால் 74 உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 3600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் இந்த வாகனப் போக்குவரத்து திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியபோது, மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்த தையும், இடைநிற்றல் குறைந்ததையும் கண்டறிய முடிந்தது.

Read More

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.

Read More