பாட்னா: பிஹார் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் பிஹாரின் ஜெகானாபாத்தில் தினமும் படுகொலைகள் அரங்கேறின. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜெகானாபாத் தற்போது அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. இங்கு கோகு தொகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தோம். அப்போது குந்திதேவி பாஸ்வான் என்ற மூதாட்டி எங்களை வழிமறித்து நிறுத்தினார்.‘துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டினால்கூட பிரதமர் மோடிக்கு மட்டுமே வாக்களிப்போம். அவர்தான் எங்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்களை வழங்குகிறார். ஏழைகளுக்கு இலவசமாக வீடுகளை கட்டித் தருகிறார். அவருக்கு மட்டுமே வாக்களிப்போம்’ என்று மூதாட்டி கூறினார். இவரை போன்ற பிஹார் பெண்களின் ஞானமே, தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மூல காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
Author: admin
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆராய்ச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தலைமை வகித்தார். பதிவாளர் கி.சிவசங்கீதா வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் பங்கேற்ற 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் தங்கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்டிகள் மற்றும் புதுமையான கருத்துகளை வழங்கினர்.
விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று ஆந்திராவுடன் மோதியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வித்யூத் 40, சந்தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்கள் சேர்த்தனர். விமல்குமார் 10, பாலசுப்ரமணியம் சச்சின் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, ஆந்த்ரே சித்தார்த் 0, கேப்டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்களில் நடையை கட்டினர்.
ஜெருசலேம்: காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வட சென்னை போன்று அரங்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. இந்த அரங்கில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று வீண் பேச்சு பேசும் முதல்வரே, உங்கள் விடியா அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன. ‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “செப். 22 முதல் நாங்கள் மண்டலம் வாரியாக தகவல்களைப் பெற்று வருகிறோம். குறிப்பாக ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரு சக்கர வாகனங்கள், கார்கள், நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன. நுகர்வோருக்கு பலன்கள் சென்றடைந்துள்ளன.மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 79,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 84,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, விற்பனை 5.5% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 3.72 லட்சமாக இருந்தது. டிராக்டர் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களில் வாங்குவதும், விற்பதும் பரபரப்பாக இருந்துள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்க்ரப் டைபஸ் வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன, மாநிலத்தில் 174 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 130 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் இருப்பதாக சமீபத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு அதிகாரிகளிடையே கவலையைத் தூண்டியுள்ளது, குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும், மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானது. ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, ஸ்க்ரப் டைபஸ் என்பது ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது “புஷ் டைபஸ்”, “மைட்-போர்ன் டைபஸ்” அல்லது “ஜங்கிள் டைபஸ்” போன்ற பிற பெயர்களாலும் அறியப்படுகிறது. யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா,…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபியின் வீடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விசாரணையில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி என்பது தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் 950 மையங்களில் தமிழ் மொழி இலக்கியத் திறனறி தேர்வு நேற்று நடைபெற்றது. பிளஸ் 1 மாணவர்கள் 2.70 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, திறனறி தேர்வை பள்ளிக்கல்வி இயக்ககம் நடத்துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பிற தனியார் பள்ளி மாணவர்கள் என அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
