புதுடெல்லி: 12 சதவீத வரம்பில் உள்ள 99% பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறையும் என தெரிகிறது. டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5, 12, 18 மற்றும் 28 என 4 வரி அடுக்குகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் மிக உயர்ந்த வரி அடுக்கின் கீழ் (28%) வருகின்றன. ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்குகளாக குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. ஜிஎஸ்டி வரிக் கட்டமைப்பில் ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில…
Author: admin
பசில், அல்லது ஆயுர்வேதத்தில் அழைக்கப்பட்டபடி, வாழ்க்கையின் அமுதம். இந்த சக்திவாய்ந்த மூலப்பொருள் நீண்ட காலமாக பலவிதமான வியாதிகளுக்கு எதிராக உடலை ஆதரிப்பதோடு தொடர்புடையது, குறிப்பாக மன அழுத்தம் மற்றும் ஏற்றத்தாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக ஓசிமம் டெனுஃப்ளோரம் என்று அழைக்கப்படுகிறது, இது சமீபத்தில் உடலில் கார்டிசோலின் அளவைக் குறைக்கும் அதன் சுவாரஸ்யமான திறனுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இது பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது.பண்டைய ஞானம் நீண்ட காலமாக ஆதரிக்கிறது என்ற கூற்று இப்போது புதிய அறிவியல் ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகிறது. புனித பசில் கார்டிசோலின் அளவை உடலில் 36% வரை கணிசமாகக் குறைக்கும். மேலும் அறிய படிக்கவும்!உங்கள் ஆரோக்கியத்திற்கு மன அழுத்தம் என்ன செய்கிறது என்பது இங்கேகார்டிசோல் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?கார்டிசோல் என்பது மன அழுத்தத்திற்கு உடலின் இயல்பான பதில். மன அழுத்தம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்று ஒருவர் யோசிக்கிறீர்கள் என்றால், இங்கே கார்டிசோல்…
சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர். பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை, வீட்டில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக எம்பி. கனிமொழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிர மணியன் கடேஸ்வரன், இந்து மக்கள் கட்சி தலைவர்…
சென்னை: சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழக அரசால் அமைக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக்குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட் டுள்ளது. மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த 14-ம்தேதி நடந்தது. குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் எம்.நாகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் நிகழும் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை மாநில திட்டக்குழு உறுப்பினர் நா.எழிலன் எம்எல்ஏ சமர்ப்பித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்…
சென்னை: ‘சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மண் வளத்துக்கும், இயற்கை சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலா ளர் வைகோ உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது. மாநிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி, அகற்ற ஒரே நேரத்தில் டெண்டர் விடப்படும் என தமிழக அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெரிவித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை’’ என தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில்,…
நீடித்த உட்கார்ந்து (குறிப்பாக மேசை வேலையில்) ஏற்படும் இறுக்கத்தை எதிர்ப்பதற்கான ஒரு சிறந்த பயிற்சியாக இடுப்பு நெகிழ்வு நீட்சி உள்ளது. இதைச் செய்ய, ஒன்று தரையில் 90 டிகிரி கோணத்தை உருவாக்க, தரையில் மண்டியிட வேண்டும், ஒரு முழங்கால் கீழே மற்றும் மற்றொன்று முன்னால் நடப்படுகிறது. இந்த நிலையில் இருக்கும்போது, பின்புறத்தை நேராக வைத்து, மையத்தை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், மெதுவாக இடுப்பை முன்னோக்கி தள்ளி, இந்த நிலையை சுமார் 20-30 வினாடிகள் வைத்திருங்கள், பின்னர் முயற்சித்து பக்கங்களை மாற்றவும். இந்த நீட்சி இடுப்பு இயக்கம் மேம்படுத்தவும் குறைந்த முதுகுவலியைக் குறைக்கவும் உதவுகிறது.
சேலம்: தமிழகம் உள்பட மாநிலங்களில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும். 1950-ல் சேலம் சிறையில் 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நாளை கண்டன நாளாக அறிவித்த பெரியார், ஊர்வலங்களை நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று அங்கு மணி மண்டபம் அமைக்கப்படும்.திமுக தோழமைக் கட்சிகளின் ஒற்றுமை பலரின் கண்களை உறுத்துகிறது. கூட்டணியை உடைக்க எத்தனையோ சதி செய்து, பொய் தகவல்களை பரப்புகின்றனர். அதில் முக்கியமானவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மேல் திடீர் பாசம் பொங்குகிறது. அடிமைத்தனம் பற்றி பழனிசாமி…
குறைவாக பேசுங்கள், பெற்றோர் சிறந்தவர்கள்: விரிவுரை இல்லாமல் குழந்தைகளுக்கு பெரிய உணர்வுகளுக்கு செல்ல 5 வழிகள் (படம்: TOI) குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்ட கடற்பாசிகள், அவர்கள் சொல்வதை விட அவர்கள் பார்ப்பதிலிருந்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் அடிக்கடி எங்கள் குழந்தைகளை “அமைதிப்படுத்த” அழைக்கிறோம், மன அழுத்த தருணங்களின் போது நம்முடைய சொந்த செயல்கள் அவர்கள் பெறும் மிக சக்திவாய்ந்த பாடங்கள். ஒரு சொற்பொழிவு இல்லாமல் பெரிய உணர்வுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உங்கள் குழந்தைக்கு கற்பிக்கலாம். ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! சுய கட்டுப்பாட்டை மாதிரியாக்குவதன் மூலம், உங்கள் சொந்த உணர்ச்சி புயல்களைக் கையாள அவர்களுக்கு ஒரு வரைபடத்தை தருகிறீர்கள்.2025 ஆய்வு, தாய்வழி உணர்ச்சி பயிற்சி மற்றும் குழந்தை உணர்ச்சி ஒழுங்குமுறை: குழந்தை பருவத்தில் குறுக்குவெட்டு காட்சிகள், ஒரு ஆய்வகப் பணியின் போது பெற்றோர் -குழந்தை தொடர்புகளைக் கவனித்ததோடு, தாய்மார்கள் நேர்மறையான உணர்ச்சிகளைப் பயிற்றுவித்தபோது, குழந்தைகள் விரைவில் இணக்கத்தையும் ஈடுபாட்டையும்…
சென்னை: நெல்லையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித் ஷா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக சார்பில் தென் மாவட்டங்களில் உள்ள பாஜகபூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு ஆக. 17-ம் தேதி (இன்று) நெல்லையில் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் நேற்று முன்தினம் மாலை காலமானார். இதையடுத்து, நெல்லையில் நடைபெறவிருந்த பூத் கமிட்டி மாநாடு ரத்து செய்யப்பட்டு, வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்று கேரளாவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அமித் ஷா, அங்கிருந்து நெல்லை வந்து மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது, தமிழக பாஜக தலைவர்களுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை அவர் மேற்கொள்ள உள்ளார் என்று பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
திருச்சி: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம் 10.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது கோரிக்கைகளில் முதன்மையானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாகும். அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த கோரிக்கை சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழக அரசில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 1,98,331 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6,24,140 பேர் புதிய ஓய்வூதியதிட்டத்திலும் உள்ளனர். சிபிஎஸ் திட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 7,864 பேர் பணியின்போது உயிரிழந்துவிட்டனர். 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப…