Author: admin

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்தி உள்​ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்​கா, ரஷ்ய அதிபர்​கள் நேற்று நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆங்​கரேஜ் விமான தளத்​தில் தரை​யிறங்​கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்​துச் சென்​றார். அப்​போது வானில் அமெரிக்​கா​வின் பி2, எப்22 ரக போர் விமானங்​கள்…

Read More

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 84-ம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளனர் என்றும் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித் திருந்தார். அவர் பேசும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் தமிழக பாஜக பதிவிட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு என தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக…

Read More

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இயங்கும் போது இசையைக் கேட்பது மன சோர்வுக்கு எதிராக போராடவும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்பதைக் கண்டுபிடித்தனர். மன வேலைகளுக்குப் பிறகு தங்களுக்கு விருப்பமான இசையைக் கேட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் சோர்வடையாதபோது இதேபோல் செயல்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை எதிர்கொள்வோம். நீங்கள் ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கலாம், ஆனால் மன சோர்வு உங்கள் காலணிகளை கூட ஒரு சவாலாக உணர வைக்கும் நாட்கள் உள்ளன. சுறுசுறுப்பாக இருப்பது முன்பை விட இப்போது முக்கியமானது, குறிப்பாக வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வரும் நேரத்தில். ஆனால் நீங்கள் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறீர்கள் மற்றும் மன சோர்வை எதிர்த்துப் போராடுகிறீர்கள்? உங்கள் தினசரி ஓட்டத்தில் ஒரு சிறிய மாற்றங்கள் வேலையைச் செய்யக்கூடும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், இயங்கும் போது இசையைக் கேட்பது மன சோர்வுக்கு எதிராக போராடக்கூடும் என்று கண்டறியப்பட்டது.…

Read More

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்​டில் இஸ்​ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு கவசத்தை நிறு​வியது. எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​களை அயர்ன் டோமில் இருந்து புறப்​படும் ஏவு​கணை​கள் நடு​வானில் அழித்​து​விடும். இதை அடிப்​படை​யாக வைத்து இந்​தி​யா​வின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர வான் பாது​காப்பு கவசம் உரு​வாக்​கப்பட உள்​ளது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது ஆகாஷ்தீர் என்ற வான் பாது​காப்பு கவசத்தை பயன்​படுத்​தினோம். தற்​போது ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவசத்​தில் எஸ்​400 ஏவு​கணை​கள், பிரள​யம், பிருத்​வி, ஏஏடி, ஆகாஷ், எஸ்​125 பெசோ​ரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்​எஸ்​ஏஎம், எஸ்​200 ஆகிய ஏவு​கணை​கள்…

Read More

சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று மதச் சார்பின்மை காப்போம்’ என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ஏஐ தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை காப்போம் தலைப் பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், இயக்குநர் கே.பாக்ய ராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம் பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்றனர். பின் னர்.…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹிசார் நீதிமன்றத்தில் ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2,500 பக்க குற்றப் பத்திரிகையை ஹிசார் நீதிமன்றத்தில் எஸ்ஐடி தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருந்த ஈசன்-உர்-ரஹிம் (எ) டேனிஷ் அலியுடன் ஜோதி தொடர்பில் இருந்துள்ளார். ஒரு முறை கர்த்தார்பூர் காரிடார் வழியாக பாகிஸ்தான் சென்ற அவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள்…

Read More

Last Updated : 17 Aug, 2025 07:05 AM Published : 17 Aug 2025 07:05 AM Last Updated : 17 Aug 2025 07:05 AM லாட்டரி கடை ஊழியருடன் ஜெயேஷ் குமார். (கண்ணாடி அணிந்திருப்பவர்). கல்பெட்டா: கேரள மாநிலம் கல்​பெட்டா பகு​தி​யில் தனி​யார் பேருந்து ஓட்​டுன​ராக வேலை செய்​பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்​பெட்டா புது பேருந்து நிலை​யத்​துக்கு அரு​கில் உள்ள அம்மா லாட்​டரி கடை​யில் உள்ள ஊழியர்​களிடம் 5 தனலட்​சுமி லாட்​டரி டிக்​கெட்​டு​களை எடுத்து வைக்​கும்​படி கூறி​யுள்​ளார். அதற்​கான பணத்தை பிறகு கொடுப்​ப​தாக கூறி​யுள்​ளார். அதன்​படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்​டரி டிக்​கெட்​டு​களை ஊழியர் ஸ்வாதி சத்​யன் தனி​யாக எடுத்து வைத்து விட்​டார். இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை குலுக்​கல் நடை​பெற்​றது. அதில் ஜெயேஷ் குமாருக்​காக எடுத்து வைத்​திருந்த 5 டிக்​கெட்​டு​களில் ஒரு டிக்​கெட்​டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்​திருந்​தது. உடனடி​யாக குமாரை அழைத்து…

Read More

புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை விரை​வில் அறி​முக​மாவதற்கு முன்​பாகவே முக்​கிய சோதனை​களில் அது தேர்ச்சி பெற்​றுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டில் உள்ள பல்​வேறு பாரம்​பரிய மலைப்​பாதைகளில் ‘‘ஹைட்​ரஜன் பார் ஹெரிட்​டேஜ்’’ திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க ரயில்வே அமைச்​சகம் திட்​ட​மிட்​டுள்​ளது. சென்​னை​யில் உள்ள ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை​யில் (ஐசிஎப்) உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த ரயில் சுத்​த​மான எரிசக்தி ஆதா​ர​மான ஹைட்​ரஜன் எரிபொருளில் இயக்​கப்பட உள்​ளது. பூஜ்ய கார்​பன் உமிழ்வு இலக்​கு​களை அடை​யும் வகை​யில் பசுமை போக்​கு​வரத்து தொழில்​நுட்​பத்தை நோக்​கிய பயணத்​தில் ஹைட்​ரஜன் ரயில் இந்​தி​யாவை முன்​னோக்கி நகர்த்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து ஐசிஎப் பொது மேலா​ளர் யு.சுப்​பா​ராவ் கூறிய​தாவது: மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயில் விரை​வில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது. சுமை சோதனை​களை இந்த ரயில் வெற்​றிகர​மாக நிறைவு செய்​துள்​ளது. அதன் செயல்​பாட்​டில் சிறப்​பான முன்​னேற்​றம் காணப்​படு​கிறது. இது குறித்த தகவல்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும். இவ்​வாறு சுப்​பா​ராவ் தெரி​வித்​தார்.…

Read More

சென்னை: வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன் நேற்று காலமானார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை வீட்டில் அவர் கால் தவறி கீழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த, அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது உடல்நிலை யில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமான…

Read More

புதுடெல்லி: 12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது. டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரி​சாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்​கப்பட உள்​ள​தாக தெரி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5, 12, 18 மற்​றும் 28 என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அல்​லது குறைந்த வரி விதிக்​கப்​படு​கிறது. அதே​நேரம், அத்​தி​யா​வசி​யமற்ற மற்​றும் ஆடம்பர பொருட்​கள் மிக உயர்ந்த வரி அடுக்​கின் கீழ் (28%) வரு​கின்​றன. ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்​கு​களாக குறைக்​கு​மாறு அமைச்​சர்​கள் குழு​வுக்கு ஆலோ​சனை வழங்கி இருப்​ப​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் அறி​வித்​தது. ஜிஎஸ்டி வரிக் கட்​டமைப்​பில் ‘ஸ்​டாண்​டர்​டு’ மற்​றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று மத்​திய அரசு மாநில…

Read More