எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது பூட்டிக் கிடந்த ஒரு அறையை உடைத்து சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, எம்எல்ஏ விடுதிக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு சென்றனர். அங்கு, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரமாக வெளி்யே காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரமாக காத்திருந்த நிலையில், எம்எல்ஏ விடுதிக்கு வந்த சட்டப்பேரவை…
Author: admin
காயங்கள் மற்றும் வலிகள் பொதுவாக சிறிய சுகாதார பிரச்சினைகள் என நிராகரிக்கப்படுகின்றன. கையில் திடீரென காயம் எதையாவது மோதிக் கொண்டிருப்பதால் விளக்கப்படலாம், அதே நேரத்தில் தோள்பட்டை வலி பெரும்பாலும் தோரணை அல்லது அதிகப்படியான மீது குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும், இந்த அறிகுறிகள் தெளிவான காரணமின்றி அல்லது நீண்ட காலமாக நீடிக்கும் போது, அவை இரத்த புற்றுநோய் போன்ற தீவிரமான ஒன்றைக் குறிக்கலாம்.இரத்த புற்றுநோய் யுகே படி, விவரிக்கப்படாத சிராய்ப்பு, இரத்தப்போக்கு அல்லது தொடர்ச்சியான வலி லுகேமியா, லிம்போமா அல்லது மைலோமா போன்ற நிலைமைகளை சமிக்ஞை செய்யலாம் – இவை அனைத்தும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை செயல்பாட்டை பாதிக்கின்றன. இங்கிலாந்தில் சுமார் 40,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது அவசியம்.விவரிக்கப்படாத காயங்கள் ஏன் தோன்றும்தோல் உடைக்கும்போது, பொதுவாக அதிர்ச்சி காரணமாக ஒரு காயம் உருவாகிறது. இருப்பினும், காயங்கள் காயமின்றி தோன்றினால், சாத்தியமான…
கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார். இவரது மூதாதையர் வீடு கொல்கத்தாவின் கஸ்பா நகர் பகுதியில் உள்ளது. தற்போது இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்த வீட்டை அவரது சகோதரர் மிலன் சவுத்ரி என்பவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், மிலன் சவுத்ரி அந்த வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த புலா சவுத்ரியின் பத்மஸ்ரீ உள்ளிட்ட…
தலைமைச் செயலகத்தை வரும் 22-ம் தேதி முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாகக் காரணங்களால் கூட்டமானது ஆக.18ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நாளை (18-ம் தேதி) கூட்டம் நடைபெற உள்ளது.
அடிப்படை தை சி இயக்கம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் மண்ணீரல் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளின் ஒரே நேரத்தில் தூண்டுதலுக்கு உதவுகிறது. நேரடியான ஆற்றல்மிக்க பயிற்சிகளை விரும்பும் தொடக்க பயிற்சியாளர்களை இயக்கம் முறையிடுகிறது.மென்மையான உடல் அசைவுகளை உருவாக்க உங்கள் முழங்கால்களை மெதுவாகத் துள்ளும்போது, உங்கள் கால்களைத் தவிர்த்து நிற்கவும். உங்கள் கைகள் இயற்கையாகவே ஆடுகின்றன, மேலும் உங்கள் பக்கங்களையும், மார்பு மற்றும் பின்புறத்தையும் லேசாகத் தட்டவும். எந்த உறுப்பு தூண்டுதலைப் பெறுகிறது என்பதை உங்கள் கையின் நிலை தீர்மானிக்கிறது: உங்கள் கை உங்கள் கீழ் முதுகில் அடையும் போது சிறுநீரக தூண்டுதல் ஏற்படுகிறது, அதே நேரத்தில் உங்கள் கை உங்கள் இடது பக்கத்திற்கு அருகில் இருக்கும்போது மண்ணீரல் தூண்டுதல் நிகழ்கிறது. மறுபுறம், உங்கள் கை உங்கள் மார்புக்கு அருகில் இருக்கும்போது இதய தூண்டுதல் ஏற்படுகிறது, மேலும் உங்கள் கை உங்கள் வலது பக்கத்திற்கு அருகில் இருக்கும்போது கல்லீரல் தூண்டுதல் ஏற்படுகிறது.…
புதுடெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது டிஜிட்டல் இறையாண்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் கூறும்போது, “நாட்டின் தொழில்நுட்ப அமைப்புகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். டிஜிட்டல் சுயாட்சியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆபரேட்டிங் சிஸ்டம் முதல் சைபர் பாதுகாப்பு வரை, ஆழமான தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அனைத்தும் நம்முடையதாக இருக்க வேண்டும். நமது யுபிஐ தளம் இன்று உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. நம்மிடம் திறமை உள்ளது. இந்தியா மட்டுமே யுபிஐ மூலம் 50% நிகழ்நேர பரிவர்த்தனைகளை செய்கிறது. நமது இளைஞர்களுக்கு நான் சவால் விடுகிறேன். வாருங்கள்.. நமக்கு ஏன் சொந்த சமூக ஊடக தளங்கள் இல்லை? நாம் ஏன் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும்? இந்திய செல்வம் ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்?” என்றார். எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும்…
தேர்தல் காலத்து பரபரப்புகளின் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை மனமுவந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது திமுக. அதிலும் குறிப்பாக, அதிமுக முன்னணி தலைவர்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து வரவேற்று பன்னீர் தெளிக்கும் திமுக தலைமை, அவர்களுக்கு உடனடியாக கட்சிப் பதவிகளை அளித்தும் பரவசப்படுத்துகிறது. அந்தவகையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான மருத்துவர் வா.மைத்ரேயனை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது” என்ற குற்றச்சாட்டைச் சொல்லி திமுக-வில் இணைந்த மைத்ரேயனை ‘இந்து தமிழ் திசை’ சிறப்புப் பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “என்னிடம் சிகிச்சை எடுக்கும் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு முக்கியமான சிகிச்சை ஒன்றை அளிக்க வேண்டி இருக்கிறது. அதை முடித்துவிட்டு பேசலாமா?” என்றவர், அதன்படியே சிகிச்சையை முடித்த கையோடு நம்மை அழைத்தார். இனி அவரது பேட்டி… அதிமுக-வை பாஜக தலைமை இயக்குகிறது என்பதுதான் நீங்கள்…
புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது. என்றாலும் உலகளாவிய நடைமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறுசுழற்சி செய்தல் மற்றும் புளூட்டோனியம் கழிவுகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு தனது பிடியை தக்க வைத்துக் கொள்ளும். இந்தியாவில் 76,000 டன் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 30 ஆண்டுகளுக்கு தலா 10 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்திக்கு போதுமானது. என்றாலும் அரசின் இலக்கை எட்டுவதற்கான தேவையில் சுமார் 25% மட்டுமே உள்நாட்டு வளங்கள் பூர்த்தி செய்ய முடியும்.…
புதுடெல்லி: முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்,மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அடல்ஜியின் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்கிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என்று கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாய் பிறந்தார்.…
வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் நேற்று நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆங்கரேஜ் விமான தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது வானில் அமெரிக்காவின் பி2, எப்22 ரக போர் விமானங்கள்…