தனது படங்களில் 2-ம் பாகம் உருவாக்க உகந்த படம் ‘துப்பாக்கி’தான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அதன் 2-ம் பாகத்தை உருவாக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், “‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே அப்படி அமைந்தது. ஹீரோ ராணுவத்துக்கு சென்றுவிட்டார். இங்கு குடும்பம் இருக்கிறது. குடும்பத்துக்கு ஏதேனும் நடக்கலாம், அல்லது ராணுவ இடத்தில் ஏதேனும் நடக்கலாம் அல்லது மீண்டும் விடுமுறைக்கு அவர் திரும்பலாம். இப்படி பல்வேறு விஷயங்களோடு தான் படத்தை முடித்திருப்பேன். அது திட்டமிட்டேதான் வைத்தேன். ஏனென்றால், அப்படத்தில் சத்யன் ஒரு காட்சியில் “ஒவ்வொரு தடவையும் லீவுக்கு வருவ, ஏதாவது பிரச்சினைய…
Author: admin
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு…
திரையரங்கில் இஷ்டத்துக்கு காட்சிகள் தருகிறார்கள் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார். கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் முழுக்க கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்துவிட்டார்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துகள். சினிமாவில் நாம் சரிசெய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு காட்சிகள் தருகிறார்கள், எந்தக் காட்சியில் நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.நான் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால், அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால்,…
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை சிறைப்பிடித்து, படகிலிருந்த 7 மீனவர்களை கைது செய்தனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதம், ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை விடுதலை செய்ய வேண்டும், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்ற தர மத்திய, மாநில அரசுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 அன்று…
‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணமல்ல என்று பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. சமீபத்திய பெரிய நடிகர்களின் இந்திப் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படம் ‘சிக்கந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில் “‘சிக்கந்தர்’ படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா தனது மனைவியை பற்றி அவர் வாழும்போது புரிந்துகொள்ளவில்லை. நாம் அனைவருமே அப்படித்தான், இவர்கள் நம் கூடவே இருப்பார்கள் என்று நினைத்து அந்த உறவுக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. திடீரென்று மறையும்போது தான், இன்னும் கொஞ்சம் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கலாமே என்று தோன்றும். அப்படி ஒருநாள் மனைவி இறக்கும்போது, அவளது உறுப்புகள் 3 பேருக்கு தானம் செய்யப்படுகிறது. அவன்…
மதுரை: மதுரை மாநாடு வெற்றி பெற கருப்புசாமி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்கள், மக்களுக்கு தவெகவினர் விருந்தளித்தனர். மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் பாரபத்தி எனுமிடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக. 21-ல் நடக்கிறது. இதற்காக 500 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு, அவ்விடத்தில் மேடை அமைத்தல், பார்க்கிங் வசதி, தலைவர், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்கு தனித்தனி வழிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரையில் முகாமிட்டு நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார். மாநாடுக்கான போலீஸ் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் மாநாடு நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு அளிப்பது குறித்த ஆய்வு செய்துள்ளனர். மாநாடுக்கு இன்னும் 2 நாட்ளே இருக்கும் நிலையில் ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் தொண்டர்கள், நிர்வாகிகள் மாநாடுக்கு…
சமமாக ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும் காலை உணவுக்கு என்ன வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். டாக்டர் ச ura ரப் சேத்தி, குடல் மருத்துவர் (ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், ஐம்ஸ்) நிரப்புதல், ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமான 10 சிறந்த காலை உணவு காம்போக்களை பட்டியலிடுகிறார். உங்கள் தேர்வை எடுத்து, சுவைக்கு ஏற்ப மாற்றவும்!
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆக.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, 19-ம் தேதி மாலையில் தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை கடக்கக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 19 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…
உண்மையில் நம் நினைவகத்தை என்ன தீர்மானிக்கிறது? மனித மூளையின் மையத்தில் ஆழமான ஹிப்போகாம்பஸ் என அழைக்கப்படும் ஒரு ஜோடி கட்டைவிரல் அளவிலான கட்டமைப்புகள், விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் நினைவில் கொள்வதற்கும் நமது திறனுக்கு காரணமாகின்றன.ஆனால் ஹிப்போகாம்பஸின் செயல்பாடு சரியாக என்ன? எளிமையான பதில்: இது மனித மூளையின் ஒரு பகுதியாகும், இது நினைவகத்தை சேமிக்கிறது. ஆமாம், உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் சேமிக்க நீங்கள் நம்பியிருக்கும் பேனா டிரைவைப் போலவே-அது போய்விட்டால், நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். எங்கள் ஹிப்போகாம்பஸ் செயல்பாட்டிலும் இதுவே நிகழ்கிறது. ‘ஹிப்போகாம்பஸ்’ என்ற பெயர் எங்கிருந்து வருகிறது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். ஹிப்போ என்ற கிரேக்க சொற்கள் குதிரை, மற்றும் கம்போஸ் என்றால் கடல் அசுரன் என்று பொருள். உண்மையில், இது ‘சீஹார்ஸ்’ என்று மொழிபெயர்க்கிறது, இது அதன் கடல் குதிரை போன்ற வடிவத்தைக் குறிக்கிறது. இந்த சிறிய அமைப்பு உண்மையில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எப்படி? நகைச்சுவையாக, மக்கள்…
பெங்களூரு: ‘துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த கர்நாடக முதல்வராக வருவார்’ என்று கூறியதற்காக சன்னகிரி எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை புகைந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் காங்கிரஸ் தலைமை உறுதியாக தெரிவித்தது. இந்த நிலையில், சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா சனிக்கிழமையன்று தாவங்கேரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, டி.கே. சிவக்குமார் முதல்வராக வருவார்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். கர்நாடக மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் மாற்றம் குறித்து சிவகங்கா ஊடகங்களுக்கு ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இது கட்சிக்குள் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கருத்து கட்சியின் ஒழுக்கத்தை…