எந்தவொரு சூப்பர் மார்க்கெட் இடைகழிகளையும் கீழே நடந்து செல்லுங்கள் அல்லது ஆரோக்கிய செல்வாக்கு செலுத்துபவர்களின் ஊட்டங்கள் மூலம் உருட்டவும், மற்றும் அல்கலைன் நீரை ஒரு அதிசய பானமாக விற்பனை செய்யுங்கள்.ஒரு பில்லியன் டாலர் தொழிற்துறையாக மாறும். விற்பனை புள்ளி? அதன் உயர் pH நிலை, பிராண்டுகள் கூறும் உடலில் உள்ள அமிலத்தன்மையை “நடுநிலையாக்க” உதவுகிறது. உடல்நலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை யார் விரும்பவில்லை என்பது பிட்ச் நம்பத்தகுந்ததாகத் தெரிகிறது? ‘புற்றுநோயைத் தடுக்கும்’ போன்ற உயரமான உரிமைகோரலுடன் வரும்போது, அது 2x வேகத்தில் அதிகரிக்கும் என்று நம்புவதற்கான வாய்ப்பு, ஆனால் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்த எவ்வளவு அறிவியல் உள்ளது? இது உண்மையில் பயனுள்ளதா அல்லது இது ஒரு சந்தைப்படுத்தல் வித்தை, சமூக ஊடகங்கள் ‘குளிர்ச்சியாக’ இருக்கும் என்ற எண்ணத்துடன் நம்பும்படி கட்டாயப்படுத்துகின்றனவா? கார நீர் உண்மையில் என்ன செய்கிறதுஒரு ஹைப் எடுக்கத் தொடங்கும் போது, சில சதவீத உண்மை உள்ளது மற்றும் ஓய்வு…
Author: admin
புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இருந்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர்இல்லத்தில் நடைபெற்ற…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு குவியும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம் ‘கூலி’. இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் நல்லபடியாக படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக காட்டமாக பதிலளித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். இதே வேலையாகவும் சுற்றுகிறார்கள். விமர்சனம் செய்கிறவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் மக்கள் எடுத்துக் கொள்வது இல்லை. ‘கூலி’ படத்துக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து திரையரங்குகளிலும் ‘கூலி’ நல்லபடியாக ஓடிக்…
சென்னை: தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் மற்றும் முதல் தளம் அல்லது, ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்கள் அதிகபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கட்டிடமாக இருக்க வேண்டும். இந்த கட்டிடம் கட்டவோ, மறு கட்டுமானம் செய்யவோ அனுமதி பெறுவதற்கு, நில உரிமையாளர், நில குத்தகைதாரர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் விண்ணப்பிக்க தகுதியானவர். விண்ணப்பம் அளிக்கும்போது, மனை இடத்தின் புகைப்படம், நில உரிமையாளர் என்பதற்கான சுயசான்றிட்ட விற்பனை பத்திரம், சுய சான்றிட்ட…
புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி சுசீலா, மகனும் தற்போதைய பழநி தொகுதி எம்எல்ஏ-வுமான செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை…
சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை என்று இயக்குநர் பேரரசு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் முழுக்க கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “கடுக்கா என்றால் காய் இல்லை, நம்பவைத்து ஏமாற்றுவதுதான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பதுதான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத்தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவுக்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.விஜய் கௌரிஷ் ‘அட்டகத்தி’ தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ரசிகர்களை…
அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரின் ‘நல்ல தார்மீக தன்மை’ (ஜிஎம்சி) மதிப்பிடுவதற்கான கடுமையான மற்றும் முழுமையான அணுகுமுறையை மீட்டெடுக்கும் ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) அறிவித்துள்ளது.விளக்குவதற்கு: செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவது உங்கள் தகுதியைக் குறைக்கக்கூடும், ஆனால் நீங்கள் வரிகளைத் தவிர்த்துவிட்டால் – ஆனால் பின்னர் உங்கள் நிலுவைத் தொகையை அழித்துவிட்டால் இது மீட்கும் காரணியாக இருக்கலாம். அல்லது உங்களுக்கு நல்ல கல்வித் தகுதிகள் மற்றும் வேலை ஸ்திரத்தன்மை இருந்தால், இதுவும் உங்களுக்கு பிரவுனி புள்ளிகளைப் பெறக்கூடும். ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்ட கொள்கை மெமோராண்டம், அமெரிக்க குடியுரிமை என்பது சட்ட நன்மையை விட அதிகமாக உள்ளது என்பதை வலியுறுத்துகிறது -இது அமெரிக்க சமுதாயத்தில் செயலில் மற்றும் பொறுப்பான உறுப்பினர்களாக ஆழ்ந்த மாற்றத்தைக் குறிக்கிறது.முன்னோடியில்லாத பயணத் தடையுடன் டிரம்ப் சீற்றம் | ‘இனவெறி, வெளிப்படையான கொடூரமானது’2024 நிதியாண்டில் (செப்டம்பர் 30 ஆம் தேதியுடன்…
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…
தனது படங்களில் 2-ம் பாகம் உருவாக்க உகந்த படம் ‘துப்பாக்கி’தான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அதன் 2-ம் பாகத்தை உருவாக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், “‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே அப்படி அமைந்தது. ஹீரோ ராணுவத்துக்கு சென்றுவிட்டார். இங்கு குடும்பம் இருக்கிறது. குடும்பத்துக்கு ஏதேனும் நடக்கலாம், அல்லது ராணுவ இடத்தில் ஏதேனும் நடக்கலாம் அல்லது மீண்டும் விடுமுறைக்கு அவர் திரும்பலாம். இப்படி பல்வேறு விஷயங்களோடு தான் படத்தை முடித்திருப்பேன். அது திட்டமிட்டேதான் வைத்தேன். ஏனென்றால், அப்படத்தில் சத்யன் ஒரு காட்சியில் “ஒவ்வொரு தடவையும் லீவுக்கு வருவ, ஏதாவது பிரச்சினைய…
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்காக கூட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற குழு…