Author: admin

புதுடெல்லி: டிஜிபி அனு​ராக் குப்​தாவுக்​குப் பணி நீட்​டிப்பு கோரிய ஜார்க்​கண்ட் அரசின் கோரிக்​கையை மத்​திய அரசு நிராகரித்​தது. இதனிடையே, அனு​ராக் குப்​தாவை தற்​காலிக டிஜிபி​யாக ஜார்க்​கண்ட் அரசு நியமித்​ததற்கு எதி​ராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மாநிலத்​தின் 3 மூத்த ஐபிஎஸ் அதி​காரி​களில் ஒரு​வ​ராக இருக்க வேண்​டும். அவரது பதவிக்​காலம் 6 மாதம் நிலு​வை​யில் இருக்க வேண்​டும். டிஜிபி​யாக நியமிக்​கப்​படு​பவர் 2 ஆண்​டு​கள் பதவி​யில் இருக்க வேண்​டும் போன்ற விதி​முறை​களை பிர​காஷ் சிங் வழக்கில் உச்ச நீதி​மன்​றம் வகுத்​தது. இது மீறப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​து தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்​வு இன்​று வி​சா​ரிக்​கிறது.

Read More

இஸ்லாமாபாத்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்​கப்​பட்டு லீக் சுற்று போட்​டிகள் நடை​பெறும். இதில் இரு பிரி​விலும் முதல் 2 இடங்​களைப் பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறும். இந்​தச் சுற்​றில் முதல் 2 இடம் பிடிக்​கும் அணி​கள் செப். 28-ம்​ தேதி நடை​பெறவுள்ள இறு​திச் சுற்​றில் கோப்​பையை வெல்ல பலப்​பரீட்சை…

Read More

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்க இருக்கிறார். இந்த தகவலை அவர் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதில் மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக், அஜித்தின் 64வது படம் குறித்து தெரிவித்துள்ளார். “குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அஜித்தின் 64-வது படம் அனைவருக்குமான படமாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அது அவர் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்” என்றார். படத்தை 2026-ம் ஆண்டு கோடையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Read More

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர். தெரு நாய்​களின் எண்​ணிக்​கை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் டெல்​லி​யில் உள்ள தெரு​நாய்​கள் அனைத்​தை​யும் பிடித்து காப்​பகத்​தில் அடைக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இதற்கு விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். அந்த உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திருச்​சி​யில் பேரணி​யும் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், தெரு நாய்​களை காப்​பகத்​தில் அடைக்​கும் உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, விலங்​கு​கள் நல அமைப்​பு​களைச் சேர்ந்த விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் 500-க்​கும் மேற்​பட்​டோர் சென்​னை, புதுப்​பேட்டை லாங்ஸ் கார்​டன் சாலை​யில் இருந்து பேரணி​யாகப் புறப்​பட்​டு, எழும்​பூர் வழி​யாக ராஜரத்​தினம் விளை​யாட்​டரங்​கம் வரை சென்​றனர். பின்​னர் பேரணி​யில் பங்​கேற்ற விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைப்​பது தீர்​வா​காது. அவற்​றுக்கு கருத்​தடை செய்​வது மட்​டுமே தீர்​வாகும். நகர்ப்​புறங்​களில் திருட்​டைத் தடுப்​ப​தில் தெரு நாய்​கள்…

Read More

புதுடெல்லி: டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது. இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார். இதே​போல டெல்​லி​யின் அலிப்​பூர் முதல் டிச்​சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடி​யில் நகர்ப்​புற விரி​வாக்க சாலை அமைக்கப்பட்டு உள்​ளது. டெல்​லி​யின் 3-வது ரிங் சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி…

Read More

முடி மெலிந்து ஒரு எளிய சமையலறை தீர்வைக் கொண்டு உரையாற்றலாம்: முட்டை. புரதம், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகளால் நிரம்பிய, முட்டைகள் வேர்களை வலுப்படுத்துகின்றன, முடி வீழ்ச்சியைக் குறைக்கின்றன, மேலும் அளவைச் சேர்க்கின்றன. ஆலிவ் எண்ணெய், தயிர், தேன் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களுடன் முட்டைகளைப் பயன்படுத்தி எளிதான DIY முகமூடிகள் வழக்கமான பயன்பாட்டுடன் முடியை புத்துயிர் பெறலாம், இது உள் ஊட்டச்சத்துக்காக முட்டை நிறைந்த உணவால் பூர்த்தி செய்யப்படுகிறது. உங்கள் தலைமுடியின் பல இழைகளை குளியலறை தரையில் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதை விட பயங்கரமான எதுவும் இல்லை அல்லது உங்கள் தூரிகையில் சிக்கிக்கொண்டது. முடி மெலிந்து போவது என்பது நம்மில் பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் கையாள்வது, அது உங்கள் நம்பிக்கையுடன் உண்மையில் குழப்பமடையக்கூடும். மன அழுத்தம், மோசமான தூக்கம், வெப்ப ஸ்டைலிங், மாசுபாடு, வெறும் மரபியல் கூட, முடி செயல்படத் தொடங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.ஆனால் வேலை செய்யக்கூடிய…

Read More

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடெமி, இந்திய ராணுவ அகாடெமி உள்ளிட்ட ராணுவப் பயிற்சி பள்ளியில் பயில்பவர்கள் சில நேரங்களில் பயிற்சியின்போது படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியாகி விடுவது உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களை பணியில் சேர்க்காமல் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுவதில்லை. இதனால், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் ராணுவ மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. பணியில் சேர்ந்த பிறகு காயம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கண்ட சலுகைகளை பெற முடியும் என ராணுவம் தெரிவிக்கிறது. ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளி யாகிவிட்டதால் வேறு வேலைக் கும் செல்ல முடியாமல் சிரமப் படுகின்றனர். இதுபோன்ற சூழலில் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் நெருக்கடி தருகிறது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியானது. இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இதில், சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். படத்தைச் சுற்றியிருந்த ‘எனர்ஜி’, அதை எங்களுக்கு உணர்த்தியது. எனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் சிறப்பானது. சிறந்த திரைப்படம் என்பது, அனைவரின் ஒத்துழைப்பு, நடிகர்களின் கெமிஸ்ட்ரி, படம் முடிந்த பின்னும் பார்வையாளர்களுக்கு எப்போதும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும் உற்சாகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது என்பதை, இந்தப் படம் நினைவூட்டுகிறது. திரையரங்குகளில் கொண்டாட்டத்தைக்…

Read More

குன்​னூர்: நீல​கிரி வனக்​கோட்​டம் குந்தா வனச் சரகத்​துக்கு உட்​பட்ட கிளிஞ்​சாடா கிராமத்​தில் உள்ள தனி​யார் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடப்​ப​தாக நேற்று வனத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, அங்கு சென்ற வனத் துறை​யினர், சிறுத்​தை​யின் உடலைக் கைப்​பற்​றினர். தேசிய புலிகள் பாது​காப்பு ஆணைய வழி​காட்​டு​தல்​படி, நீல​கிரி வனக்​கோட்ட உதவி வனப் பாது​காவலர் தலை​மை​யில், முது​மலை புலிகள் காப்பக உதவி வனக் கால்​நடை மருத்​து​வர் மற்​றும் அதி​கரட்டி உதவி கால்​நடை மருத்​து​வர் ஆகியோர் கொண்ட குழு​வினரின் மேற்​பார்​வை​யில், சிறுத்​தை​யின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்​யப்​பட்​டது. வேறு வன விலங்​கு​களு​டன் ஏற்​பட்ட மோதலால், சிறுத்தை இறந்​திருக்​கலாம் என்று வனத் துறை​யினர் தெரி​வித்​தனர்.

Read More

புர்த்வான்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலர், மேற்கு வங்க மாநிலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் வந்த பேருந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் காவலர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உட்பட 36 பயணிகள் புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை சட்டவிரோதமாக நிறுத்தியற்காக பஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர்.

Read More