மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது. இந்நிலையில் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் ஜஸ்பிரீத் பும்ரா தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ)…
Author: admin
சென்னை: பயணிகளின் தேவை அடிப்படையில், தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்து, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 33 ரயில்களுக்கு 42 கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது, அதன்விவரம்: சென்னை சென்ட்ரல் – கர்நாடக மாநிலம் ஷிமோகாடவுண் – சென்னை இடையே இயக்கப்படும் ரயில் (12691-12692) ஆம்பூரில் 2 நிமிடம் நின்று செல்லும். இது, ஆக.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும். தன்பாத் – ஆலப்புழா ரயில் (13351) குடியாத்தம், வாணியம்பாடியில் ஆக.18-ம் தேதி முதல் தலா 2 நிமிடம் நின்று செல்லும்.…
வைட்டமின் சி பற்றி நீங்கள் நினைக்கும் போது, ஆரஞ்சு என்பது நினைவுக்கு வரும் முதல் பழம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாக அவை இருந்தாலும், அவை உண்மையில் சிறந்த போட்டியாளராக இல்லை. ஒரு நடுத்தர ஆரஞ்சில் சுமார் 70 மி.கி வைட்டமின் சி உள்ளது, ஆனால் பல பழங்கள் மற்றும் காய்கறிகள் இன்னும் பெரிய பஞ்சைக் கட்டுகின்றன. சிலுவை காய்கறிகளிலிருந்து வெப்பமண்டல பழங்கள் வரை, இந்த உணவுகள் வைட்டமின் சி இல் ஆரஞ்சுகளை மிஞ்சுவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பிற சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டு வருகின்றன. வைட்டமின் சி இல் ஆரஞ்சுகளை வெளிப்படுத்தும் ஒன்பது உணவுகள் இங்கே உள்ளன.ஆரஞ்சுகளை விட வைட்டமின் சி பணக்கார உணவுகள் 1. ஸ்ட்ராபெர்ரிஒரு கப் புதிய ஸ்ட்ராபெர்ரி சுமார் 98 மி.கி வைட்டமின் சி வழங்குகிறது, இது உங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய…
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரையின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்களிடையே வாக்காளர் திருட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா கூட்டணி முடுக்கி விட உள்ளது. யாத்திரை தொடக்க விழாவின்போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்திரை அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம். நாடு முழுவதிலும் சட்டமன்ற தேர்தல்கள், மக்களவை தேர்தல்கள் திருடப்படுகின்றன. பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளர்களை நீக்குவது மற்றும் சேர்ப்பதன் மூலம் வாக்குகளை திருட ஒரு புதிய சதி செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் தேர்தல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.ஏழைகளிடம் மிஞ்சியுள்ளது வாக்குரிமை மட்டுமே.…
சென்னை: சங்கர நேத்ராலயா எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனத்தின் 4-வது சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் ஒளியியல் மாநாடு (EIVOC) சென்னையில் நடைபெற்றது. கண் மருத்துவத் துறையில் முன்னோடி அடையாளமான சென்னை சங்கர நேத்ராலயாவின் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முதல் முன்னோடி ஒளியியல் மருத்துவக் கல்லூரியாகவும், 4 ஆண்டு தொழில்முறை பட்டத்தை வழங்கும் முதல் கல்லூரியாகவும் விளங்குகிறது. எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் ஒளியியல் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இதன் 4-வது மாநாடு ஆக.15, 16, 17 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 60-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச கண்ணியல் நிபுணர்கள் வழங்கும் சொற்பொழிவுகளுடன் ஆப்டோமெட்ரி மற்றும் பார்வை அறிவியல் சமூகத்துக்கான உயர்தர தளத்தை அமைக்கும் மாநாடாக இது…
மும்பை: இந்திய டி20 அணியில் மீண்டும் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (ஆக.19) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளது. ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் என இருவரும் ஐபிஎல் 2025 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டி20 அணியில் ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் விளையாடி இருந்தார். ஜிதேஷ் சர்மா கடந்த 2024 ஜனவரியில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இருவரும் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியின் கீழ் 15 டி20 போட்டிகளில் 13 வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 28-ம்…
சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார். சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி விடுமுறையை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து நீண்ட நாட்களாக பேசிக்கொண்டு இருக்கிறேன். என் பேச்சுகளை முழுமையாக கவனிப்பவர்களுக்கு அது தெரியும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளை நாம் உடனடியாக பேசி சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை மறைந்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவளவனுக்கு இந்த தகவல் நேற்றே (16-ம் தேதி) தெரியும். ஆனால், தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். சேலத்தில் நடைபெறும் இந்திய…
51 வயதான கஜோல் ஒரு மும்பை விருது நிகழ்ச்சியை உருவாக்கினார், வயது என்பதை நிரூபிப்பது அவரது அதிர்ச்சியூட்டும் சிவப்பு கம்பள பாணியுடன் ஒரு எண். திகைப்பூட்டும் வைரங்களால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு புதுப்பாணியான, வெளிர் ஒரு தோள்பட்டை கவுனில் அவள் சிரமமின்றி திகைத்துப் போனாள். அவரது நேர்த்தியான புதுப்பிப்பு, தைரியமான சிவப்பு உதடுகள் மற்றும் கதிரியக்க ஒப்பனை ஆகியவை மெருகூட்டப்பட்ட மற்றும் தளர்வான தோற்றத்தை நிறைவு செய்தன, இது உண்மையானதாக இருக்கும்போது தலைகளைத் திருப்புவதற்கான அவரது கையொப்ப திறனைக் காட்டுகிறது. ரெட் கார்பெட் பாணிக்கு வரும்போது, வயது உண்மையில் ஒரு எண் என்பதை கஜோல் நிரூபித்தார். 51 வயதான நட்சத்திரம் மும்பையில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் ஒரு வெளிர் கவுனில் சிரமமின்றி கவர்ச்சியாகக் காட்டியது, இது புதுப்பாணியான நேர்த்தியைப் பற்றியது, மேலும் அவர் அதை வைரங்களுடன் முதலிடம் பிடித்தார், அது யாரையும் நிறுத்தி முறைத்துப் பார்க்கக்கூடும்.கவுன் எளிமையானது, ஆனால் அதிர்ச்சியூட்டுகிறது.…
புதுடெல்லி: கொள்கை சீர்திருத்தம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது ஆகியவற்றால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1,50,590 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் உற்பத்தியை விட 18 சதவீதம் உயர்வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் உயர்வு. இந்த சாதனை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியதற்கு ராணுவத் தளவாட துறை மற்றும் தொழிற் துறையினரின் பங்களிப்பே காரணம். இந்த வளர்ச்சி, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியின் பலத்தை காட்டுவதாகவும், இறக்குமதி குறைந்து ராணுவத் தளவாட ஏற்றுமதியை அதிகரிக்கும் அளவுக்கு நாட்டை கொண்டு சென்றுள்ளது. ஒரு நாடு தனது பாதுகாப்பு தேவையில் தன்னிறைவு பெறவில்லை என்றால்,…
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யபப்ட்டார். இந்நிலையில் டெவால்ட் பிரேவிஸுக்கு அதிக தொகை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தயாராக இருந்ததாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சானலில் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து…