பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் மிக அருமையாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய டி20 அணியில் மீண்டும் அழைக்கப்பட தகுதியானவரே என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாளை, செவ்வாய்க் கிழமை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறார் ஆகாஷ் சோப்ரா. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் ஓர் அற்புதமான கேப்டனாகவும் அய்யர் உருவெடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் இப்போதைய சிறந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்தான். எனவே அணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் கேப்டனுக்கு உதவியாக ஸ்ரேயஸ் இருப்பது இந்திய அணிக்கு வலுசேர்க்கும். ஸ்ரேயஸ் அய்யருக்கும் 3 வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே ஸ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்வியாக இருந்தாலும் ஸ்ரேயஸ் அய்யர் அணிக்குள் அழைக்கப்பட வேண்டும் என்பது இங்கிலாந்து தொடரிலிருந்தே பேச்சாக இருந்து…
Author: admin
“சினிமா எடுப்பதில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டோம் என நினைத்தது நான் செய்த தவறு” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ மற்றும் ‘சிக்கந்தர்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் பலரும் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையான சாடினார்கள். தற்போது அவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தான் செய்த தவறு என்னவென்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, “‘7-ம் அறிவு’ படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போது, ‘துப்பாக்கி’ படத்தின் முதல் பாதி கதை மட்டுமே என்னிடம் இருந்தது. அதைத்தான் எஸ்.ஏ.சி சார் மற்றும் விஜய் சார் இருவரிடமும் சொன்னேன். இந்தப் படம் பண்ணலாம் என்று உடனே கூறிவிட்டார்கள். 2-ம் பாதி இனிமேல்தான் பண்ண வேண்டும் என்றேன். அவுட்லைன் கேட்கலாம் என்று தான் வந்தேன். எனக்கு முதல் பாதியே நன்றாக இருக்கிறது பண்ணலாம் என்று விஜய் சார்…
சென்னை: பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு விடுத்து வருகிறது. மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர், கடந்த 8-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் கால் தவறி கிழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் பல்துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஆக.15-ம் தேதி மாலை இல.கணேசன் காலமானார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மறைந்த இல.கணேசனுக்கு பாஜக சார்பில் புகழஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
நாம் அனைவரும் நீண்ட காலம் வாழ விரும்புகிறோம், ஆரோக்கியமான வாழ்க்கை, அந்த காரணத்திற்காக, சுத்தமாக சாப்பிடுவது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, குப்பை உணவைக் குறைப்பது போன்ற பழக்கங்களை நாம் அடிக்கடி ஏற்றுக்கொள்கிறோம். இந்த நடைமுறைகள் பொதுவாக நல்லவை, ஆனால் சில நேரங்களில், ஆரோக்கியமாகத் தேடும் தேர்வுகள் கூட அமைதியாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆச்சரியமான உண்மை? ஒரு “நல்ல விஷயம்” மெதுவாக உடல்நல அபாயமாக மாறும். சமீபத்திய வணிக உள் அறிக்கையில், இருதயநோய் நிபுணர் டாக்டர் எலிசபெத் க்ளோடாஸ் அதிக புரத உணவுகள், தீவிரமான உடற்பயிற்சிகளும், அவ்வப்போது அதிகப்படியான குடிப்பழக்கமும் போன்ற சில பொதுவான நடைமுறைகள் நீண்ட காலத்திற்கு பின்வாங்கலாம் என்பதை விளக்கினார். இந்த நேரத்தில் அவர்கள் ஆரோக்கியமாக உணரக்கூடும் என்றாலும், அவை வீக்கத்தைத் தூண்டலாம், உறுப்புகளை சேதப்படுத்தலாம், சமநிலை இல்லாமல் செய்தால் நாட்பட்ட நோய்களின் அபாயத்தை உயர்த்தலாம். உண்மையான ஆரோக்கியம் என்பது உச்சநிலையைப் பற்றியது அல்ல, ஆனால் நிலைத்தன்மை மற்றும்…
‘பரதா’ படத்துக்காக விமர்சகர்களுக்கு பணம் கொடுக்க பட்ஜெட் இல்லை என்று அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘பரதா’ (PARADHA). ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை இணையத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இதனிடையே ‘பரதா’ விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் அனுபமா பரமேஸ்வரன், “‘பரதா’ விமர்சனங்கள் தாமாகவே உருவாகச் செய்ய வேண்டியது தவிர, விமர்சகர்களுக்கு பணம் கொடுக்கவோம், விமர்சனங்களைத் திசைதிருப்பவோ எங்களிடம் பட்ஜெட் இல்லை. எனவே, படம் பற்றி வெளிவரும் விமர்சனங்கள் தாமாக வருவதுதான். அவை நன்றாக இருந்தால் மட்டுமே ‘பரதா’ படத்தை திரையரங்கில் போய் பாருங்கள். அப்படி இல்லை என்றால் விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். மேலும், ‘டில்லு’ படம் தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், சொத்து வரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று மேயர் பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வரும் அதிமுக, மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் கூட மேயர் பதவி விலக வலியுறுத்தாமல் அடக்கி வாசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், வரி விதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கணவர், 2 உதவி ஆணையர்கள் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மட்டுமின்றி குடியிருப்பு கட்டிடங்கள் வரை சொத்துவரி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைதான நிலையில், உடனடியாக மேயர் பதவி விலகவோ அல்லது கட்சித் தலைமை மண்டலத் தலைவர்களைப்போல் அவரை ராஜினாமா…
தீபிகா படுகோனின் மாபெரும் சொலிடர் வளையம் அளவு பற்றி இருந்தால், 2025 மணப்பெண்கள் அனைத்தும் வண்ணத்தைப் பற்றியது. வண்ண வைரங்கள் – ஷாம்பெயின், ப்ளஷ் பிங்க், கேனரி மஞ்சள் மற்றும் நுட்பமான சாம்பல் கூட இந்த ஆண்டு பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்திய மணப்பெண்கள் பெருகிய முறையில் ஏதேனும் ஆஃபீட் தேடுவதால், இந்த வண்ணமயமான ஸ்பார்க்லர்கள் உங்கள் வளையத்திற்கு ஒரு தனிப்பட்ட கதையை கொண்டு வருகிறார்கள்.உதாரணமாக, இளஞ்சிவப்பு வைரங்கள் காதல் மற்றும் பெண்பால் எனக் காணப்படுகின்றன, அதே நேரத்தில் மஞ்சள் நிறங்கள் தைரியமானவை மற்றும் சூரிய ஒளி ஆற்றல் நிறைந்தவை. சிறந்த பகுதி? நீங்கள் மங்கலான, கோதுமை அல்லது நியாயமானதாக இருந்தாலும், வண்ண வைரங்கள் இந்திய தோல் டோன்களை அழகாக பூர்த்தி செய்கின்றன. உங்கள் திருமண செயல்பாடுகளில் குண்டன் செட் அல்லது போல்கி நகைகளுடன் அவற்றை இணைக்கவும், உங்கள் மோதிரம் மோதாமல் தனித்து நிற்கும்.ஹாட் பிக்: ரோஜா தங்கத்தில் அமைக்கப்பட்ட…
நீல தோற்றம்ஜெஃப் பெசோஸ் தலைமையில், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மைல்கல் பணிக்கு தயாராகி வருகிறார், இது நாசாவைத் தொடங்க உள்ளது தப்பிக்கும் ஆய்வுகள் கப்பலில் புதிய க்ளென் ராக்கெட் செப்டம்பர் 29, 2025 அன்று. இது ப்ளூ ஆரிஜினின் முதல் கிரக விமானக் விமானத்தை குறிக்கும் மற்றும் இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸின் எந்தவொரு செவ்வாய் கிரகத்திற்கும் முன்னதாகவே உள்ளது, அதன் ஸ்டார்ஷிப் இன்னும் வளர்ச்சி மற்றும் சுற்றுப்பாதை சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள எஸ்கேப் மிஷன், செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தையும் வளிமண்டலத்தையும் படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சூரிய காற்று சிவப்பு கிரகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கான முக்கியமான தரவுகளை வழங்குகிறது. இந்த ஏவுதல் வணிக விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு விண்வெளி நிறுவனங்களுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.எஸ்கேப்…
சமீபத்தில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இணையத்தில் பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இருவரையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில், “மணி சார் மற்றும் ஷங்கர் சார் இருவரின் ஒரு படத்தின் தோல்வியை வைத்து அவர்களை எடை போட்டுவிட முடியாது. ஷங்கர் சாரை ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநராக எடுத்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்ட படங்களில் வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு மெசேஜ் சொல்கிறார். ரோட்டில் செல்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், தனி ஆளாக இறங்கி ரோடு போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முள் குத்தும், கல் தடுக்கி விடும். மணி சாருக்கு மட்டும் எப்போதும் முள் குத்துகிறது என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோட்டில்…
சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு வந்த போது, வணிக சின்னமாக பதியப்பட்ட தங்கள் சபை கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயல் எனவும், கொடி ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால், சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் வாதிடப்பட்டது.…