Author: admin

புதுடெல்லி: புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. கடந்த ஜூன் 23 அன்று மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பின்படி, ‘புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இருசக்கர வாகன உற்பத்தியாளர் இந்திய தரநிலைகள் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்துடன் 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும். வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) நிர்ணயித்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களுக்கு இந்தத் தேவை பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1,…

Read More

அடுத்து ஒரு படம் இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக நடிக்க வைக்க கதைகள் கூற அணுகியிருக்கிறார்கள். ஆனால், பிரதீப் ரங்கநாதன் தரப்போ அடுத்து படம் ஒன்று இயக்கி நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு தான் நாயகனாக நடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள். சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை முடித்த பின்புதான் அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகள் கேட்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

Read More

சென்னை: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7,000 கோடி அனுமதிக்கப்பட்டு 72,081 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. தேவைப்படும் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சிகள் சுதந்திரமாகச் செயல்படவும், குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உதவும் விதமாக உள்ளாட்சிகளின் நிதி நிருவாக அனுமதி வரம்புகளை உயர்த்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிருவாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும், வட்டார ஊராட்சிக்கான அனுமதி…

Read More

பெற்றோருக்கு வரும்போது, ​​எந்த அளவும் பொருந்தாது. பெற்றோர்கள், முற்றிலும் நல்ல அர்த்தமுள்ளதாக இருக்கும்போது, ​​சில சமயங்களில் தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீவிர நீளத்திற்குச் செல்கிறார்கள், கூச்சலிடுதல், அலறல் மற்றும் அவ்வப்போது வன்முறை ஆகியவற்றைக் கூட நாடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த முறைகள் எப்போதுமே செயல்படாது, ஏனென்றால் குழந்தைகளுக்கு ஒழுங்குபடுத்த பொறுமை, சரியான நோக்கம், நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை மற்றும் இரு கூட்டாளர்களின் பங்களிப்பு தேவை. ஒழுக்கத்திற்கு வரும்போது, ​​பெற்றோர்கள் பயன்படுத்தும் பல நுட்பங்கள் உள்ளன, அவற்றில் “நல்ல காப், பேட் காப்” நுட்பம் மிகவும் பிரபலமானது. இந்த நுட்பம் ஒரு பெற்றோர் கண்டிப்பாக இருப்பதன் மூலம் “மோசமான காவல்துறை” பாத்திரத்தை வகிக்கிறது, மற்றொன்று “நல்ல போலீஸ்காரரை” விளையாடுகிறது, ஓரளவு மென்மையாக இருப்பதன் மூலமும், கடன் வழங்கும் ஆண்டை வழங்குவதன் மூலமும். ஆனால் நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளை வளர்க்கும் போது இந்த முறை உண்மையில் செயல்படுகிறதா? ஆழமாக ஆராய்வோம் …இந்த நுட்பம் என்னநல்ல…

Read More

ஓடிடியில் ஜூலை 4-ம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் பலரும், இப்படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை விட, ஓடிடி தளத்தில் மேலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

Read More

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அதில் ஒரு சிறிய குரங்கு இருந்தது. அதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் நேரில் வந்து சோதித்த போது, அது அமேசான் காடுகளில் வசிக்கும் அரிய வகை அணில் குரங்கு என்பது தெரிய வந்தது. ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உயரம் வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிர்த்த மற்ற…

Read More

எஃப் 1 பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 1: எஃப் 1. விளையாட்டு நடவடிக்கை நாடகமும் நேர்மறையான மதிப்புரைகளைப் பெற்றது. எஃப் 1 டாப் கன்: மேவரிக் புகழ் ஜோசப் கோசின்ஸ்கி இயக்கியுள்ளார். எஃப் 1 இந்தியாவில் நன்றாக திறக்கிறதுபிராட் பிட் தனது சமீபத்திய படத்தின் காரணமாக வெளிச்சத்தில் இருக்கிறார் எஃப் 1இது இப்போது திரையரங்குகளில் உள்ளது. இது இந்தியாவில் ஒரு நல்ல பதிலைத் திறந்தது, மேலும் திரைப்பட பார்வையாளர்களையும் கவர்ந்தது. வர்த்தக வலைத்தளமான சாக்னில்க் கருத்துப்படி, விளையாட்டு நடவடிக்கை நாடகம் முதல் நாளில் ரூ .5.25 கோடி (நெட்) சம்பாதித்தது. இது ஜாக்கி சானை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது கராத்தே குழந்தை புராணக்கதைகள்இது முதல் நாளில் ரூ .1.75 கோடி சம்பாதித்தது. இருப்பினும், அது வெல்லத் தவறிவிட்டது மி 8. டாம் குரூஸின் அதிரடி நாடகம் அதன் தொடக்க நாளில் ரூ .16.5 கோடியை ஈட்டியது. நிகழ்ச்சிகளையும் மரணதண்டனையையும் பாராட்டும்…

Read More

வாரணாசி: இந்தியாவுக்கு சோசலிசம் தேவையில்லை, மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்தியாவில் சோசலிசம் தேவையில்லை. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரத்தின் மையக்கரு அல்ல. எனவே, இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தனது அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். அப்போது எல்லைகளில் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, உள்நாட்டு பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. பிரதமர் பதவிக்கு மட்டுமே அச்சுறுத்தல் இருந்தது. எனவே, ஜூன் 25, 1975 அன்று இரவு, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமலேயே நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது எனக்கு 16 வயதுதான். அப்போதே நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இன்றும் கூட, அந்த இருண்ட நாட்களை நினைத்துப்…

Read More

‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் மகிழ் திருமேனி பேசும் போது, “’தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும் என்று ஒருவர் சொன்னார்” என்று பேசினார். உடனே பத்திரிகையாளர்கள் “13 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்கிறீர்கள். அதே போலவே ‘விடாமுயற்சி’ படமும் இன்னும் 13 ஆண்டுகள் கழித்து வந்தால் கொண்டாடப்படும் என்று சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மகிழ் திருமேனி, “ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானிப்பது ரசிகர்கள்…

Read More

திண்டுக்கல்: அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடியில் புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோபி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 28) தொடங்கி வைத்தார். இதே போல், ரூ.2.25 கோடியில் திண்டுக்கல்லில் 4 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 3,600 பேரும், உள் நோயாளிகளாக 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த மருத்துவமனையில் கூடுதலாக சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 1,500…

Read More