Author: admin

காரக்பூர்: காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது: உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது. இந்​நிலை​யில், எதிர்​காலத்தை நிர்​ண​யிப்​பது நமது தயாரிப்​புத் திறன்​தான். இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன. துப்​பாக்​கி​கள் அல்ல, ‘அல்​காரிதங்​கள்’ தான் ஆயுதங்​கள். நிலத்​தில் அல்ல, ‘டேட்டா சென்​டர்​களில்’ தான் பேரரசுகள் உரு​வாகின்​றன. வீரர்​கள் அல்ல, ‘பாட்​நெட்​கள்’ தான் படைகள். நம் நாடு தொழில்​நுட்​பத்தை சார்ந்​துள்ள நிலை​யில், 90% குறைக்​கடத்​தி​களை இறக்​குமதி செய்​கிறோம். இதில் ஏதேனும் தடங்​கல் ஏற்​பட்​டால் நாட்​டின் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் முடங்​கிப் போகும் அபா​யம் உள்​ளது. நமக்​குத் தேவை​யான கச்சா எண்​ணெ​யில் 85 சதவீதத்தை இறக்​குமதி செய்​கிறோம். இதனால் உலகில் எங்கோ நடக்​கும் புவி அரசி​யல் நிகழ்​வு​கூட நமது வளர்ச்​சியை தடுக்​கக்​கூடும். எனவே, புதிய வகை போர்​களுக்​குத் தயா​ராகும்…

Read More

சிவப்பு கண்களால் எழுந்திருப்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது பல்வேறு காரணங்களிலிருந்து பாதிப்பில்லாதது முதல் தீவிரமானது வரை உருவாகிறது. ஒரே இரவில் வறட்சி, ஒவ்வாமை அல்லது காண்டாக்ட் லென்ஸ் பயன்பாடு பெரும்பாலும் எரிச்சல் மற்றும் சிவப்புக்கு வழிவகுக்கும். தூசி அல்லது தூக்கமின்மை போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஒரு பாத்திரத்தை வகிக்கலாம். தி ஜர்னல் ஆஃப் ஆப்தால்மிக் & விஷன் ரிசர்ச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண் மேற்பரப்பு கோளாறுகள் மற்றும் மோசமான தூக்க தரம் போன்ற காரணிகள் காலை கண் சிவப்புக்கு கணிசமாக பங்களிக்கும். சில சந்தர்ப்பங்களில், சிவப்பு கண்கள் கான்ஜுன்டிவிடிஸ் அல்லது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கண் நிலைமைகள் போன்ற நோய்த்தொற்றுகளை சமிக்ஞை செய்யலாம். சிவத்தல் தொடர்ந்தால், வேதனையானது, அல்லது பார்வை மாற்றங்களுடன் இருந்தால், ஒரு மருத்துவரை அணுகவும். கண் சொட்டுகளைப் பயன்படுத்துதல், நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது மற்றும் தூக்க பழக்கத்தை மேம்படுத்துவது போன்ற எளிய வைத்தியம் பெரும்பாலும்…

Read More

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகர் கோயி​லில் சதுர்த்தி விழா கொடியேற்​றுடன் நேற்று தொடங்​கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்​கள் விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்​றத்துடன் நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, சண்​டிகேசுவரர் சந்​நி​தி​யில் இருந்து கொடி புறப்​பாடாகி, கோயிலை வலம் வந்​தது.தொடர்ந்​து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்​டிகேசுவரர், அங்​குசத்​தேவர் எழுந்​தருளினர். பின்​னர், கொடிமரத்​துக்​கும், மூஞ்​சூறு வாக​னம் வரையப்​பட்ட கொடிப்​படத்​துக்​கும் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. சிவாச்​சா​ரி​யார்​கள் வேத மந்​திரங்​கள் முழங்க கொடியேற்​றம் நடை​பெற்​றது. விழா நாட்​களில் காலையில் வெள்​ளிக் கேடகத்​தி​லும், மாலை​யில் சிம்​மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்​ளிட்ட வாக​னங்​களி​லும் விநாயகர் எழுந்தருளி திரு​வீதி உலா நடை​பெறும். ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்​யும் கஜமுக சூரசம்​ஹாரம், 26-ம் தேதி…

Read More

சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று சேலம் குகை பகுதி அருகே உள்ள பெரியார் வளைவில் இருந்து செம்படை பேரணி தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நிறை வடைந்தது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடும் கட்சியாக…

Read More

சுவாமி சிவானந்தாவின் போதனைகளின் படி, உணவு ஆரோக்கியத்தின் அடிப்படை கூறுகளை உருவாக்குகிறது. சிவானந்தா ஒரு சாத்விக் உணவை பரிந்துரைத்தார், அதில் காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட தூய மற்றும் ஒளி ஊட்டமளிக்கும் உணவுகள் மட்டுமே இடம்பெற்றன. அவர் பழம் மற்றும் பால் ‘ஆடம்பரமான உணவு’ என்று அழைத்தார், அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்தார், அதற்கு பதிலாக பயறு மற்றும் அரிசி சிவானந்தாவை விரும்பினார், அவ்வப்போது உண்ணாவிரதத்துடன் மிதமான உணவு மற்றும் கவனமுள்ள உணவு ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார், இது செரிமான அமைப்பு ஓய்வெடுக்க உதவுகிறது. சிவானந்தா தனது உணவு அணுகுமுறையின் மூலம், உணவு எவ்வாறு மருந்தாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் இது உடல் ஆரோக்கியம் மற்றும் மன நல்வாழ்வு இரண்டிற்கும், நிலையான ஆரோக்கியத்திற்காக பயனளிக்கிறது.

Read More

ஒரு ஆடம்பரமான காலை உணவுக்குப் பிறகு அந்த வலி மற்றும் வாயு உணர்வு நாள் முழுவதும் கெடுக்கக்கூடும். குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய பங்கு உண்டு, மனநிலையை அமைப்பதில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திலும். நல்ல ஆரோக்கியத்திற்கான திறவுகோல் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான குடல். ஆனால் உங்கள் குடலை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்கள்? ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, குடலை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் விதைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். “இந்த அறிவியல் ஆதரவு விதைகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை உங்கள் குடல் நுண்ணுயிர், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன” என்று மருத்துவர் கூறினார். உங்கள் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக மேம்படுத்தக்கூடிய 5 சக்திவாய்ந்த விதைகள் இங்கே. சியா விதைகள்மாறிவிடும், சியா விதைகளைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தல் உண்மையில் உண்மை. சியா விதைகள்…

Read More

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து செயல்படுவதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘‘வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியிருப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை ராகுல் காந்தி அவமதிக்கிறார்’’ என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் மீதான புகார் குறித்து ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு…

Read More

மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர்தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வெளியூர் செல்லும் பேருந்து, ரயில், விமான…

Read More

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாகஉள்ளது.…

Read More

பாட்னா: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை தேர்​தல் ஆணை​யம் வெளியிட்டுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​த பணி மேற்​கொள்​ளப்​பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்​ளன. அவர்​களில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்தவர்கள், 36 லட்​சம் பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்துவிட்​டனர். இதனால் அவர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்டுள்ளன என்று தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​தது. இதற்கிடையே, பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. சில நாட்​களுக்கு முன்புஇந்த வழக்கை விசா​ரித்த 3 நீதிபதி​கள் அமர்வு, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்​களை வெளி​யிட வேண்​டும் என்று உத்​தர​விட்​டது. இதை தொடர்ந்து, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர், விவரங்​களை…

Read More