சென்னை: 16 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி 65.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பிரதோஷ் ரஞ்ஜன் பால் 125 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 11, விமல் குமார் 8, ஆந்த்ரே சித்தார்த் 24, பாபா இந்திரஜித் 22, விஜய் சங்கர் 9, வித்யுத் 0, ஹேமச்சந்திரன் 0, திரிலோக்நாக் 2 ரன்களில் நடையை கட்டினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அஜிதேஷ் 89 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களும்,…
Author: admin
திருவாரூர்: ‘ராமரை இழிவாகப் பேசிய கவிஞர் வைரமுத்துவை நடமாட விடக்கூடாது’ என மன்னார்குடியில் ராஜமன்னார் செண்டலங்கார ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக இந்துக்களுக்கு விரோதமான போக்கு அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடுபிடிகளை விதிக்கிறது. சென்னையில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து, ராமபிரானை மனநிலை சரியில்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும் பேசியுள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக இவர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வைரமுத்துவை, சாலையில்நடமாட விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மெல்லும் கம் ஒரு பழக்கம் என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள்! ஒரு கவர்ச்சிகரமான புதிய ஆய்வில், கம் விட சற்று கடினமான ஒன்றை மென்று சாப்பிடுவது, உண்மையில் மூளையின் பாதுகாப்பு அமைப்பை சூப்பர்சார்ஜ் செய்யலாம் மற்றும் நினைவகத்தை கூர்மைப்படுத்தலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.ஆரோக்கியமான இளைஞர்களால் சில மிதமான கடினமான பொருளை மென்று சாப்பிடுவது, மூளையின் மிக சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது, மூளையின் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவதற்கும் நமது முடிவெடுக்கும் அனைத்து திறன்களும்.மூளை சக்தியை அதிகரிக்க 5 படைப்பு நடவடிக்கைகள், நினைவகத்தை கூர்மைப்படுத்துங்கள்குளுதாதயோன் என்றால் என்ன, மூளைக்கு ஏன் தேவை(குளூ-டா-டைப்-டன்) என உச்சரிக்கப்படுகிறது, இது உடலில் உள்ள மிக முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். குளுதாதயோன் (ஜி.எஸ்.எச்) என்பது இயற்கையாக நிகழும் ஆக்ஸிஜனேற்றியாகும், இது உயிரணுக்களுக்குள் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்வினை ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளிலிருந்து மூளை மற்றும் உடலைப் பாதுகாப்பதில்…
புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசினார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யி சந்திக்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சீன அமைச்சர் வாங் யி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின்…
புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்திய கிரிக்கெட் தற்போது டி20 திறமையாளர்களின் தொழிற்சாலையாக உள்ளது. குறைந்தது 30 வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்த வகையில் ஒரு இடத்துக்கு மூன்று முதல் நான்கு வீரர்கள் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளனர். முதல் மூன்று இடங்களுக்கு, ஒரே மாதிரியான திறன்களை கொண்ட 6 வீரர்கள் கைவசம் உள்ளனர். கடந்த சீசனில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் அற்புதமாக விளையாடினர். இவர்களுக்கு இணையாக ஷுப்மன் கில்,…
சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முதல்முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர் திறப்பு காரணமாக, அணையின் நீர் மட்டம் குறைவதும், காவிரியில் வெள்ளம் ஏற்படும்போது, அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,223 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 7,382 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்துக்காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் கபினியில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதமும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு…
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி கார், மொபைல்போன், கணினி உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்குகள் உள்ளன. பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோ மொபைல் துறை வளரும் வரி குறைப்பு குறித்து மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் 90 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி வரம்பின் கீழ் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் 18…
டாக்டர் ச ura ரப் சேத்தி, இரைப்பை குடல் நிபுணர், குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அன்றாட பொருட்களில் பதுங்கியிருக்கும் மறைக்கப்பட்ட நச்சுகளை வெளிப்படுத்துகிறார். கீறப்பட்ட அல்லாத குச்சி பானைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை வெளியிடுகின்றன, அதே நேரத்தில் செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியாவை சீர்குலைக்கின்றன. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கெமிக்கல்ஸ், மற்றும் அதி பதப்படுத்தப்பட்ட உணவுகளில் குடல்-சீர்குலைக்கும் சேர்க்கைகள் உள்ளன. டெலி இறைச்சிகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்புகளால் நிரம்பியுள்ளன. இந்த நச்சுக்களின் வெளிப்பாட்டைக் குறைப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் கொடிய நச்சுகளை உட்கொள்கிறீர்களா? சரி, வேண்டுமென்றே அல்ல, ஆனால் அதை உணராமல், ஒவ்வொரு நாளும் உங்கள் கணினியில் நுழைய தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அனுமதிக்கலாம்! ஆம், அது சரி. இந்த ரசாயனங்கள் உங்கள் குடலை சீர்குலைக்கும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீங்கள் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களிலிருந்து உங்கள்…
புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்வாஸ் மசோதா நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். இந்த மசோதா தற்போதுள்ள சட்டங்களில் மிகச் சிறிய குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் 288 விதிகளை நீக்குவதற்கு வழிவகை செய்கிறது. நேற்று மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த கோஷத்துக்கு இடையே மசோதாவை, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார். மசோதா அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்சில் சட்டம் 1994,…
மதுரை: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வீராகதிரவன் ஆஜராகி, மதுவிலக்குத் துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜியின் பதில் மனுவை தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதிகள், பதிவுத்துறை சார்பில், ‘மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்வதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘இதை எப்படி ஏற்க முடியும்? மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படு கின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களை பாதுகாப்பதாக இருக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் அவர்கள்…