சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை ஆளுநர் பதவியில் அமர்த்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அளவில் பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த பாஜகவினருக்கு தேசிய அளவில் கட்சி பதவிகளை வழங்கியும், அமைச்சரவை, ஆளுநர், துணை குடியரசு தலைவர் போன்ற பதவிகளையும் பாஜக வாரி வழங்கி, தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2026 தேர்தலையொட்டி, தமிழக பாஜகவினருக்கு முக்கியத்துவம் அளிக்க தேசிய தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன், கடந்த 15-ம் தேதி காலமானார். இதனால், அம்மாநில ஆளுநர் பதவி காலியாக உள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்,…
Author: admin
சிறந்த முடிவுகளுக்கு, இந்த முகமூடியை வாரத்திற்கு ஒரு முறை முயற்சிக்கவும். அதை மிகைப்படுத்துவது உங்களுக்கு ஒரே இரவில் ராபன்ஸல் முடியைக் கொடுக்காது, ஆனால் நிலையான பயன்பாட்டுடன், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் மென்மையான, பளபளப்பான, வலுவான இழைகளை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள்.நன்மைகளை அதிகரிக்க உதவிக்குறிப்புகள்தேங்காய் எண்ணெயை கலப்பதற்கு முன் சற்று சூடேற்றவும், இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாகக் காண உதவும்.எலும்பு உலர்ந்த அல்ல, ஈரமான கூந்தலில் எப்போதும் தடவவும், எனவே முகமூடி மிகவும் எளிதாக பரவுகிறது.உங்களிடம் எண்ணெய் உச்சந்தலையில் இருந்தால், உங்கள் தலைமுடியின் முனைகளில் அதிக கவனம் செலுத்துங்கள் மற்றும் வேர்களில் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.இந்த முகமூடியை ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன் இணைக்கவும், உங்கள் மிருதுவாக்கலில் சியா விதைகள் மற்றும் உங்கள் சமையலில் தேங்காய் எண்ணெயையும் பாதிக்காது!நீங்கள் என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம்?உண்மையாக இருக்கட்டும்: எந்த DIY மாஸ்க் உங்களுக்கு ஒரே இரவில் வளர்ச்சியைக் கொடுக்கப் போவதில்லை. ஆனால் இந்த சியா விதை…
ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடைபெற்ற தேர்த்திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத் ராமாந்தபூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணாஷ்டமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு கோயிலில் தேர்த்திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். அப்போது, தேரை இழுக்க பயன்படுத்தப்படும் மற்றொரு வாகனம் பழுதடைந்ததால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் சங்கடப்பட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேரை இழுத்துச் செல்ல முன்வந்தனர். இதனால் தேர்த்திருவிழா களை கட்டியது. சிறிது தூரம் தேர் சென்ற நிலையில், தேரின் மேற்பகுதி அங்குள்ள மின் கம்பியில் உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தேரின் கம்பியை பிடித்து இழுத்து கொண்டிருந்த 9 பக்தர்கள் தூக்கி எறியப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியே இருளில் மூழ்கியது. பின்னர் காயம் அடைந்தவர்கள் காந்தி…
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அன்மோல் (580), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்ரி (576) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கபில் 243 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜோனாதன் கவின் அந்தோனி 220.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோனி (582), கபில் (562), விஜய் தோமர் (562) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,723 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து…
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் 3 புறமும் ரயில்வே இருப்புப் பாதைகளால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடியும். மேலும், அவசர காலங்களில் அவர்கள் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, இங்கு வசிக்கும் பொது மக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான, போஜராஜன் நகரில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.30.13 கோடியில் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இச்சுரங்கப் பாதையின் நீளம் 207 மீட்டர், அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக்காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும்…
மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 2 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து வந்தன. இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலையில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 350 புள்ளிகள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. எனினும், பிற்பகலில் பங்குச் சந்தைகள் சற்று இறக்கத்தை சந்தித்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 676 புள்ளிகள் உயர்ந்து 81,274-ல் முடிந்தது. நிப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 24,877-ல் நிலை பெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை தவிர வாகனம், ரியல் எஸ்டேட், உலோகம் உட்பட் அனைத்து துறைகளின்…
மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜூலி ஸ்மித் பீதி தாக்குதல்களின் போது பொதுவான எதிர்விளைவுகளுக்கு எதிராக அறிவுறுத்துகிறார். உடனடியாக தப்பிக்க வேண்டும் என்ற வெறியைத் தவிர்க்க அவள் அறிவுறுத்துகிறாள், ஏனெனில் அது பயத்தை வலுப்படுத்துகிறது. பீதியால் தூண்டப்பட்ட பேரழிவு எண்ணங்களை நம்புவதும், அறிகுறிகளுக்கு உடலை ஸ்கேன் செய்வதை எதிர்ப்பதும் முக்கியம், இது பதட்டத்தை தீவிரப்படுத்துகிறது. பீதி தாக்குதல்கள் மிகவும் அதிகமாக இருக்கும். உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகளுடன் கூடிய தீவிரமான பயம் தொடங்கும்போது, தெளிவாக சிந்திக்க இயலாது. பீதி தாக்குதல்கள் ஒரு முறை அல்லது அவ்வப்போது அத்தியாயமாக இருக்கலாம். பீதி தாக்குதலின் போது ஒரு நபர் எவ்வாறு பதிலளிப்பார் என்பது முக்கியம். மருத்துவ உளவியலாளரும், விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் ஜூலி ஸ்மித், பீதி தாக்குதலின் போது ஒருவர் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கினார். “பீதி வரும்போது, உங்கள் உள்ளுணர்வு அதை நிறுத்தச் செய்வதாகும். வேகமாக. ஆனால் மிகவும் இயல்பானதாக உணரும் சில விஷயங்கள்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது 314 கி.மீ. தூரத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை கேப்டன் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய முப்படைகளும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. அதில் தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தியாவின் ராணுவ வலிமையை பார்த்து உலக நாடுகள் அதிசயித்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிய போர் விமானம் அந்நாட்டின் வான் பரப்பில் 314 கி.மீ. தூரத்தில் பறந்து வரும்போதே இந்திய விமானப் படை குரூப் கேப்டன் அனிமேஷ் பட்னி சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் உலகளவில் 314 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு போர் விமானத்தை…
கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்குகிறது. மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களுடைய இடத்தை நிரப்ப வேண்டிய கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. பேட்டிங்கில் டாப் ஆர்டரில்…
கலசப்பாக்கம்: ‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பேரணி மூலமாக மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் வில்வாரணி நட்சத்திர கோயில் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணி வலுவானது என்பதால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என முடிவுசெய்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் முடிவை வழங்குங்கள். வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார். நீட்…