புதுடெல்லி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். இவர் அசாம், பெங்கால், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்றவர். இவர் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெறும் நார்த் ஈஸ்ட் சுற்றுலா விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவர், ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூபின் கார்க் இறந்ததைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Author: admin
வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டா கிளாரா பகுதியில் இந்திய இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரை சேர்ந்தவர் முகமது நிசாமுதீன் (32). கடந்த 2016-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு புளோரிடாவில் உயர் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியா மாகாணம், சாண்டா கிளாரா பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக அவர் பணியாற்றி வந்தார். அங்குள்ள வாடகை வீட்டில் முகமது நிசாமுதீனும் மற்றொரு நபரும் தங்கியிருந்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ்பபோது நிசாமுதீன், சக நண்பரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீஸார், முகமது நிசாமுதீனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நிசாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் கூறியதாவது: எனது மகன் நிசாமுதீனை எவ்வித விசாரணையும் இன்றி…
நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்றும், நாளையும் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 19, 20, 21-ம் தேதிகளில் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிகள், இன்று நாமக்கல், பரமத்தி வேலூர், நாளை திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் மக்களிடையே பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது சுற்றுப்பயணம் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சுற்றுப்பயணம் அக். 4, 5-க்கு மாற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதி படம் (பட கடன்: ANI) டெல் அவிவ்: வைர தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனை குவாண்டம் தகவல்தொடர்பு மற்றும் அதி-உணர்திறன் சென்சார்களை ஆய்வகத்திலிருந்து வெளியே மற்றும் நிஜ உலக பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடும்.இஸ்ரேலிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் வைரங்களில் உள்ள நுண்ணிய குறைபாடுகளால் வெளிப்படும் அனைத்து ஒளியையும் கைப்பற்றுவதற்கான ஒரு முறையின் வளர்ச்சியை அறிவித்தனர்-இது குவாண்டம் சாதனங்களை வேகமாகவும், நம்பகமானதாகவும், ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் ஒருங்கிணைக்க எளிதாகவும் மாற்றக்கூடிய ஒரு முன்கூட்டியே.ஜெருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நைட்ரஜன்-வேசன்சி (என்வி) மையங்களில் கவனம் செலுத்தினர், வைர படிகங்களில் சிறிய குறைபாடுகள், ஒளியின் ஒற்றை துகள்களை வெளியிடும், அல்லது ஃபோட்டான்களை குவாண்டம் தகவல்களை எடுத்துச் செல்கின்றன.அடுத்த தலைமுறை குவாண்டம் கணினிகள், பாதுகாப்பான தகவல்தொடர்புகள் மற்றும் துல்லியமான சென்சார்களை உருவாக்க இந்த ஃபோட்டான்கள் அவசியம். இப்போது வரை, இந்த ஒளியின் பெரும்பகுதி எல்லா திசைகளிலும் சிதறிக்கிடக்கிறது, இதனால் நடைமுறை…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேசுகிறார். (படம் கடன்: ஆபி) அமெரிக்க தொழிலாளர் துறை வெள்ளிக்கிழமை “ப்ராஜெக்ட் ஃபயர்வால்” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது எச் -1 பி விசாக்களை குறிவைக்கும் ஒரு முயற்சியாகும். இந்த நடவடிக்கை வேலை சந்தையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் “அமெரிக்கா முதல்” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது, அதே நாளில் அவர் ஒவ்வொரு எச் -1 பி மனுவிலும், 000 100,000 செலுத்த வேண்டிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.அதிகாரிகளின் கூற்றுப்படி, “திட்ட ஃபயர்வால்” அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஊதியங்களையும் வேலை வாய்ப்புகளையும் பாதுகாக்கும், அதே நேரத்தில் எச் -1 பி திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மக்களை தண்டிக்கும்.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்:திட்ட ஃபயர்வால் என்றால் என்ன?ப்ராஜெக்ட் ஃபயர்வால் என்பது அமெரிக்க முதலாளிகள் எச் -1 பி விசா திட்டத்தை சுரண்டாமல் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் முயற்சியாகும். வெளிநாட்டு…
சென்னை: ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் சர்வதேச பிக்கிள்பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியுடன் இசை திருவிழாவும் இணைந்து நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை இந்தியா பிக்கிள்பால் கூட்டமைப்பு, தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கம், டைனமிக் யுனிவர்செல் பிக்கிள்பால் ரேட்டிங், பிக்கிள்பால் உலக ரேங்கிங் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி 1,000 புள்ளிகளை கொண்டதாகும். இதில் உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
விருதுநகர்: கடந்த ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம், இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. கருணாநிதியின் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார். விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதியம், வாரிசு வேலை, ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் கொடுக்க மனமில்லாமல் இருப்பது நியாயமற்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 9 ஆண்டுகளாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த ஆட்சியில் தொடங்கிய அவலம் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. இதனால்தான் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் சிஐடியு கையெழுத்திடவில்லை. தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ரூ.500 கோடியை தர முடியாது எனக் கூறிவிட்டார்கள். அதிகப்படியான…
புதுடெல்லி: ஆகம கோயில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலயத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக்கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோயில்களையும், ஆகமம் அற்ற கோயில்களையும் கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்தது. அத்துடன் ஆகமம் அல்லாத கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் ஆகம விதிகளைப் பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்களை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற ஜெ.முருகவேலின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு…
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் அணிகள் இரவு 8 மணிக்கு துபாயில் மோதுகின்றன. சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது தனது பிரிவில் முதலிடம் பிடித்து இருந்தது. வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஹாங் காங் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.…
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டோர் யாரும் ஆஜராகாத நிலையில், அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி போலீஸார் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக். 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.