Author: admin

புதுடெல்லி: அசாம் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்​றும் ரசிகர்​களால் அன்​போடு அழைக்​கப்​பட்டு வந்​தார். இவர் அசாம், பெங்​கால், இந்​தி, ஆங்​கிலம் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் பாடல்​கள் பாடி புகழ்​பெற்றவர். இவர் அண்​மை​யில் சிங்​கப்​பூரில் நடை​பெறும் நார்த் ஈஸ்ட் சுற்​றுலா விழா​வில் பங்​கேற்க சென்​றிருந்​தார். இந்​நிலை​யில் நேற்று அவர், ஆழ்​கடலில் நடத்​தப்​படும் ஸ்கூபா டைவிங் சாகசத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது ஜூபின் கார்க்​குக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் நேற்று பிற்​பகல் 2.30 மணிக்கு உயி​ரிழந்தார்.​ இதையடுத்து அவரது உடலை இந்​தி​யா​வுக்​கு கொண்டு வரு​வதற்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஜூபின் கார்க் இறந்​ததைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்​கல் தெரி​வித்​துள்ளார்.

Read More

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார். அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது நிசா​முதீன், சக நண்​பரை கத்​தி​யால் குத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீ​ஸார், முகமது நிசா​முதீனை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் அவரது உடலில் 4 குண்​டு​கள் பாய்ந்​தன. உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் உயி​ரிழந்​தார். இதுகுறித்து நிசா​முதீனின் தந்தை ஹஸ்​னுதீன் கூறிய​தாவது: எனது மகன் நிசா​முதீனை எவ்​வித விசா​ரணை​யும் இன்றி…

Read More

நாமக்கல்: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்​றும், நாளை​யும் நாமக்​கல் மாவட்​டத்​தில் மேற்​கொள்​ள​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. நாமக்​கல் மாவட்​டத்​தில் 19, 20, 21-ம் தேதி​களில் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​வார் எனவும், நேற்று ராசிபுரம், சேந்​தமங்​கலம் சட்​டப்​பேரவை தொகு​தி​கள், இன்று நாமக்​கல், பரமத்தி வேலூர், நாளை திருச்​செங்​கோடு, குமார​பாளை​யம் தொகு​தி​களில் மக்​களிடையே பேசு​வார் என்​றும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், அவரது சுற்​றுப்​பயணம் நேற்று மாற்​றம் செய்​யப்​பட்​டது. அதன்படி, இன்​றும், நாளை​யும் நடை​பெற​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-க்கு மாற்​றம் செய்​யப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் கன மழை பெய்ய உள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ள​தால், சுற்​றுப்​பயணம் தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறி​விக்கப்பட்டுள்​ளது.

Read More

பிரதிநிதி படம் (பட கடன்: ANI) டெல் அவிவ்: வைர தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனை குவாண்டம் தகவல்தொடர்பு மற்றும் அதி-உணர்திறன் சென்சார்களை ஆய்வகத்திலிருந்து வெளியே மற்றும் நிஜ உலக பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடும்.இஸ்ரேலிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் வைரங்களில் உள்ள நுண்ணிய குறைபாடுகளால் வெளிப்படும் அனைத்து ஒளியையும் கைப்பற்றுவதற்கான ஒரு முறையின் வளர்ச்சியை அறிவித்தனர்-இது குவாண்டம் சாதனங்களை வேகமாகவும், நம்பகமானதாகவும், ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் ஒருங்கிணைக்க எளிதாகவும் மாற்றக்கூடிய ஒரு முன்கூட்டியே.ஜெருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நைட்ரஜன்-வேசன்சி (என்வி) மையங்களில் கவனம் செலுத்தினர், வைர படிகங்களில் சிறிய குறைபாடுகள், ஒளியின் ஒற்றை துகள்களை வெளியிடும், அல்லது ஃபோட்டான்களை குவாண்டம் தகவல்களை எடுத்துச் செல்கின்றன.அடுத்த தலைமுறை குவாண்டம் கணினிகள், பாதுகாப்பான தகவல்தொடர்புகள் மற்றும் துல்லியமான சென்சார்களை உருவாக்க இந்த ஃபோட்டான்கள் அவசியம். இப்போது வரை, இந்த ஒளியின் பெரும்பகுதி எல்லா திசைகளிலும் சிதறிக்கிடக்கிறது, இதனால் நடைமுறை…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேசுகிறார். (படம் கடன்: ஆபி) அமெரிக்க தொழிலாளர் துறை வெள்ளிக்கிழமை “ப்ராஜெக்ட் ஃபயர்வால்” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது எச் -1 பி விசாக்களை குறிவைக்கும் ஒரு முயற்சியாகும். இந்த நடவடிக்கை வேலை சந்தையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் “அமெரிக்கா முதல்” நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது, அதே நாளில் அவர் ஒவ்வொரு எச் -1 பி மனுவிலும், 000 100,000 செலுத்த வேண்டிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.அதிகாரிகளின் கூற்றுப்படி, “திட்ட ஃபயர்வால்” அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஊதியங்களையும் வேலை வாய்ப்புகளையும் பாதுகாக்கும், அதே நேரத்தில் எச் -1 பி திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மக்களை தண்டிக்கும்.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்:திட்ட ஃபயர்வால் என்றால் என்ன?ப்ராஜெக்ட் ஃபயர்வால் என்பது அமெரிக்க முதலாளிகள் எச் -1 பி விசா திட்டத்தை சுரண்டாமல் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் முயற்சியாகும். வெளிநாட்டு…

Read More

சென்னை: ரைஸ் அப் சாம்​பியன்​ஷிப் அறக்​கட்​டளை சார்​பில் சர்​வ​தேச பிக்​கிள்​பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்​டன் பீச் ரிசார்ட்​டில் நடை​பெறுகிறது. இந்த போட்​டி​யுடன் இசை திரு​விழா​வும் இணைந்து நடத்​தப்​படு​கிறது. 3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை இந்​தியா பிக்​கிள்​பால் கூட்​டமைப்​பு, தமிழ்​நாடு பிக்​கிள்​பால் சங்​கம், டைனமிக் யுனிவர்​செல் பிக்​கிள்​பால் ரேட்​டிங், பிக்​கிள்​பால் உலக ரேங்​கிங் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன. இந்த போட்டி 1,000 புள்​ளி​களை கொண்​ட​தாகும். இதில் உலகம் முழு​வ​தி​லும் உள்ள முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்ள உள்​ளனர். ஆடவர் ஒற்​றையர், மகளிர் ஒற்​றையர், ஆடவர் இரட்​டையர், மகளிர் இரட்​டையர் மற்​றும் கலப்பு இரட்​டையர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதில் சாம்​பியன் பட்​டம் வெல்பவருக்கு ரூ.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட உள்​ளது.

Read More

விருதுநகர்: கடந்த ஆட்​சி​யில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு இழைக்​கப்​பட்ட துரோகம், இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்ளன என்று சிஐடியு தலை​வர் சவுந்​தர​ராஜன் கூறி​னார். விருதுநகர் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணிபுரிந்த தொழிலா​ளர்​களுக்கு உரிய ஓய்​வூ​தி​யம், வாரிசு வேலை, ஓய்​வூ​தி​யப் பலன்​களை உடனடி​யாக வழங்​குதல் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆக. 19-ம் தேதி முதல் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் பங்​கேற்ற சிஐடியு மாநிலத் தலை​வர் சவுந்​தர​ராஜன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொழிலா​ளர்​களுக்கு கொடுக்​கவேண்​டிய பணத்தை 9 ஆண்​டு​களுக்​குப் பின்​னரும் கொடுக்க மனமில்​லாமல் இருப்​பது நியாயமற்​றது. ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 9 ஆண்​டு​களாக பஞ்​சப்​படி வழங்​கப்​பட​வில்​லை. ஓய்​வு​பெற்ற போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் வெறும் கையுடன் வீட்​டுக்கு அனுப்​பப்​படு​கின்​றனர். கடந்த ஆட்​சி​யில் தொடங்​கிய அவலம் இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. இதனால்​தான் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் ஒப்​பந்​தத்​தில் சிஐடியு கையெழுத்​திட​வில்​லை. தொழிலா​ளர்​களுக்கு தரவேண்​டிய ரூ.500 கோடியை தர முடி​யாது எனக் கூறி​விட்​டார்​கள். அதி​கப்​படி​யான…

Read More

புதுடெல்லி: ஆகம கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது. ஆகம விதி​களைப் பின்​பற்​றும் கோயில்​களில் அர்ச்​சகர்​களை நியமிக்​கும்​போது ஆகம விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் எனக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் உள்​ளிட்​டவை சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழகத்​தில் ஆகம விதி​களை கடைபிடிக்​கும் கோயில்​களை​யும், ஆகமம் அற்ற கோயில்​களை​யும் கண்​டறிய சென்னை உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு​வுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்​தது. அத்​துடன் ஆகமம் அல்​லாத கோயில்​களில் அனைத்து சாதி​யினரை​யும் அர்ச்​சகர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் ஆகம விதி​களைப் பின்​பற்​றும் மற்​றும் பின்​பற்​றாத கோயில்​களை கண்​டறிய அமைக்​கப்​பட்ட குழு​வில் இடம்​பெற்ற ஜெ.முரு​கவேலின் நியமனத்தை ரத்து செய்​யக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடை​யீட்டு…

Read More

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இலங்கை – வங்​கதேசம் அணி​கள் மோதுகின்​றன. ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன. லீக் சுற்​றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இருந்து இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​களும் ‘பி’ பிரி​வில் இருந்து இலங்​கை, வங்​கதேசம் அணி​களும் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறின. சூப்​பர் 4 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் ஆட்​டத்​தில் இலங்கை – வங்​கதேசம் அணி​கள் இரவு 8 மணிக்கு துபா​யில் மோதுகின்​றன. சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றது தனது பிரி​வில் முதலிடம் பிடித்து இருந்​தது. வங்​கதேச அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஹாங் காங் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஆப்​கானிஸ்​தான் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்து இருந்​தது.…

Read More

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், இந்த வழக்கு விசா​ரணை மாவட்ட மகளிர் நீதி​மன்ற நீதிபதி எம்​.செந்​தில்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. குற்​றம் சாட்​டப்​பட்​டோர் யாரும் ஆஜரா​காத நிலை​யில், அரசு வழக்​கறிஞர்​கள் ஷாஜ​கான், கனக​ராஜ் மற்​றும் சிபிசிஐடி போலீ​ஸார் மட்​டும் ஆஜராகினர். இதையடுத்​து, வழக்கு விசா​ரணையை அக். 10-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​து நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

Read More