Author: admin

இந்நிலையில்தான், இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. இவரது பெயரை அறிவித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்படுகிறார். பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட மற்றும் புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான நிலையான, துணிச்சலான ஆதரவாளராக அவர் இருந்து வருகிறார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை அவர் பாதுகாத்த விதத்தையும் அவரது தீர்ப்புகள் காட்டும். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்தப் போர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை…

Read More

ரஜினியின் ‘தர்பார்’ படம் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் என்ன தவறு நடந்தது என்பதை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்பேட்டியில் ‘தர்பார்’ தோல்விக்கான காரணம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் “‘தர்பார்’ படத்தினை இன்னும் பிரம்மாண்டமாக, நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அக்கதையில் நிறைய டிராவல் இருந்தது. அதெல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினி சாரை வைத்து நிஜமான இடத்தில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன். அப்பா – மகள் கதையாகத்தான் அக்கதை இருந்தது. நயன்தாரா உள்ளே வந்தவுடன், அக்கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் இயக்கிய படம் வேறு. அதன் கதையினை ரொம்ப சீக்கிரமே எழுதியது ஒரு…

Read More

சென்னை: பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார். அவரின் தேர்வை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம்…

Read More

க au ரி கான் மற்றும் புடவைகள் தங்களுக்குள் ஒரு காதல் கதை. பல ஆண்டுகளாக, இந்த ஆறு-கெஜம் அதிசயம் எவ்வளவு பல்துறை இருக்கும் என்பதை அவள் நமக்குக் காட்டியுள்ளாள், பளபளப்பான நிகழ்வுகளில் தொடர்ச்சியான எண்கள் முதல் மென்மையான, வெளிர் திரைச்சீலைகள் வரை மிகவும் நெருக்கமான சந்தர்ப்பங்களுக்கு. அவள் சேலையை கடந்த காலத்திலிருந்து ஒரு ஆடை போல நடத்தவில்லை, ஆனால் உங்கள் ஆளுமைக்கு வடிவமைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை, சுவாசமான ஃபேஷனாக.தீபாவளி விருந்துகளில் அவளது பளபளப்பான மனிஷ் மல்ஹோத்ரா புடவைகளை நினைவில் கொள்கிறீர்களா? அவர்கள் “அதிகப்படியான” பிரதேசத்திற்குள் செல்லாமல் கவர்ச்சியை வெளிப்படுத்தினர். அவளது வறட்சி பாணி வம்பு இல்லாதது, அவளது பிளவுசுகள் நவீனமானவை, ஆனால் நேர்த்தியானவை, மேலும் தோற்றத்தை அதிகமாக இல்லாமல் பிரகாசத்தை சேர்க்க போதுமானதாக அவள் அணுகுகிறாள்.ஸ்டைல் டேக்அவே: திருமணங்களுக்கு மட்டுமே உங்கள் புடவைகளை சேமிக்க வேண்டாம். ஒரு இலகுரக சிஃப்பான், ஒரு புதுப்பாணியான சாடின், அல்லது நேர்த்தியான ரவிக்கை கொண்ட…

Read More

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சித்தூர்க், நான்டெட், வாஷிம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையின் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க் மாவட்டங்களுக்கு அடுத்த 48…

Read More

‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். சீமானின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ஆகஸ்டு 21-ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாநாடு தனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய். இந்தச் சூழலில்தான் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து விஜய் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கும் வரை ‘அவர் என் தம்பி… எனக்கு எதிராகவே நின்றாலும் சரிதான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் சீமான். கட்சி தொடங்கும் முன்பு ‘சீமான் ரெஃபரன்ஸ்’ பலவற்றையும் உள்வாங்கினார் விஜய். ஏனென்றால், இப்போது இருக்கும் கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் உள்ள கட்சி நாதகதான். சீமானின் தம்பிகளில் 90 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதினர்தான். எனவே, இளைஞர்களை ஈர்க்க சீமான்…

Read More

சமீபத்திய மாதங்களில், வளர்ந்து வரும் ஆரோக்கிய போக்கு டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களை கையகப்படுத்தியுள்ளது, அங்கு செல்வாக்கு செலுத்துபவர்களும் சுகாதார ஆர்வலர்களும் கடல் உப்பு, குறிப்பாக செல்டிக் கடல் உப்பு, குடிநீரில் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். இந்த எளிய நடைமுறை நீரேற்றத்தை மேம்படுத்தலாம், செரிமானத்தை ஆதரிக்கலாம், தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க முடியும் என்று வக்கீல்கள் கூறுகின்றனர். பதப்படுத்தப்பட்ட அட்டவணை உப்பு போலல்லாமல், செல்டிக் கடல் உப்பு மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சுவடு தாதுக்கள் நிறைந்துள்ளது. சர்வதேச விளையாட்டு ஊட்டச்சத்து சங்கத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குடிநீரில் ஒரு சிறிய அளவு உப்பைச் சேர்ப்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் நீரேற்றத்தை மேம்படுத்தவும் உதவும், குறிப்பாக நீண்டகால உடற்பயிற்சி அல்லது வெப்ப வெளிப்பாட்டின் போது. இந்த தாதுக்கள் உடலை தண்ணீரை மிகவும் திறமையாக உறிஞ்ச உதவுகின்றன என்று நம்பப்படுகிறது. செல்டிக் கடல் உப்பு மற்றும்…

Read More

நமது சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய கிரகமான மெர்குரி, அதன் தீவிர வெப்பநிலை, அடர்த்தியான இரும்பு நிறைந்த கோர் மற்றும் தனித்துவமான புவியியல் அம்சங்கள் காரணமாக விஞ்ஞானிகளை கவர்ந்தது. காலப்போக்கில் பாதரசம் படிப்படியாக சுருங்கி வருவதை சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது, இது அதன் உட்புறத்தின் குளிரூட்டல் மற்றும் சுருக்கத்தால் இயக்கப்படுகிறது. கிரகத்தின் மையமானது வெப்பத்தை இழக்கும்போது, கடுமையான மேலோடு சரிசெய்கிறது, உந்துதல் தவறுகளை உருவாக்குகிறது மற்றும் மேற்பரப்பு முழுவதும் தெரியும் குன்றின் போன்ற ஸ்கார்ப்ஸ். புதிய அளவீட்டு நுட்பங்கள் பாதரசத்தின் ஆரம் 2.7 முதல் 5.6 கிலோமீட்டர் வரை குறைந்து வருவதைக் குறிக்கிறது, இது இன்றுவரை மிகத் துல்லியமான மதிப்பீட்டை வழங்குகிறது. இந்த கண்டுபிடிப்புகள் பாதரசத்தின் டெக்டோனிக் செயல்பாடு குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகின்றன, கிரக சுருக்கம்மற்றும் நீண்டகால புவியியல் பரிணாமம், பில்லியன் கணக்கான ஆண்டுகளில் சிறிய பாறை கிரகங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது.மெர்குரியின் சுருங்கிவரும் ஆரம்…

Read More

பாட்னா: 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு எதிர்க்கட்சிகள் பாடுபடும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சூளுரைத்தார். இண்டியா கூட்டணியின் முகமாக ராகுல் இருப்பார் என்பதற்கான குறியீடாக அவரின் பேச்சு அமைந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17 முதல் பிஹாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வருகின்றனர். இன்று பிஹாரின் நவாடாவில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “அடுத்த முறை, 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குகளைத் திருடவும், பிஹார் மக்களை முட்டாளாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பிஹாரிகளின் வாக்களிக்கும் உரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது. நாங்கள் பிஹாரிகள். ஒரு பிஹாரி அனைவரையும் விட உயர்ந்தவர். சிறப்பு தீவிர திருத்தம் மூலம், பிஹாரில் உயிருடன் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, அவர்கள்…

Read More

சென்னை: வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஹரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வில்லிவாக்கம் ஒத்தவாடி தெருவில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க கோரி காவல் துறையிடம் விண்ணப்பித்ததாகவும் இதுவரை தமது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் அனுமதி கோரும் இடம் மிகவும் குறுகலானது எனவும் சிலை வைக்க இடத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்துள்ளாரா ? என்பது குறித்து தெரியவில்லை எனவும் கூறினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே இடத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக கூறினார். இதனையடுத்து, இரு தரப்பு…

Read More