Author: admin

மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் ஷுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்படி என்பதை பார்ப்போம். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற்றது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், சஞ்சு…

Read More

வேலூர்: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபியால் அவர் ஓய்வுபெறும்வரை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம் என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்கிறார்கள். இதை தடுக்க இந்த அரசால் முடியவில்லை. இதில், ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையால் தடுக்க முடியவில்லை. காவல் துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்றதாக 2,348 இடங்கள் என முதல்வர் வெளியிட்ட கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டது 148 பேர்தான். மற்றவர்கள் யாரும் கைது செய்யவில்லை. அந்த மற்றவர்கள் எல்லாம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து அதிமுகவின் திட்டங்கள்…

Read More

உடலில் உள்ள யூரிக் அமிலம் எப்போதும் தீங்கு விளைவிக்காது என்றாலும், அதன் கட்டமைப்பும் உயர் மட்டங்களும் நிச்சயமாக ஆபத்தானவை, மேலும் சிகிச்சையளிக்கப்படக்கூடாது. யூரிக் அமிலத்திற்கும் இதய நோய்க்கும் இடையிலான தொடர்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

புதுடெல்லி: ‘ஜெகதீப் தன்கர் எங்கே?’ என்ற கேள்வி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்வி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஏற்படுத்தி வரும் அதிர்வலைகள் குறித்து பார்ப்போம். மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் அனல் பறப்பது இயல்பானது. ஆனால், முதன்முறையாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பரபரப்புகளுடன் நடக்கப்போவது இதுவே முதன்முறை என்று சொல்லும் அளவுக்கு, அதன் பின்னணியில் அத்தனை கேள்விகள், சூட்சமங்கள் சூழ்ந்து கொண்டுள்ளன. ஜெகதீப் தன்​கர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்​தது. இந்​நிலை​யில், தன்​கர் திடீரென தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். ‘‘உடல்​நலனுக்கு முன்​னுரிமை அளித்​தும் மருத்​துவ ஆலோ​சனைக்கு கட்​டுப்​பட்​டும் அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 67(ஏ) பிரி​வின் கீழ் குடியரசு துணைத் தலை​வர் பதவியை நான் உடனடி​யாக ராஜி​னாமா…

Read More

விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட 16 வகையான குற்றச்சாட்டுகளுக்கு வரும் 31-ம் தேதிக்குள் விளக்க அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பியது. பாமகவில் உட்கட்சி மோதல் தொடர்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியே ‘பொதுக்குழு’ கூட்டத்தை நடத்தி உள்ளனர். சென்னையில் அன்புமணியால் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி ராமதாஸால் நடத்தப்பட்ட மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக தலைவராக நிறுவனரான ராமதாஸ் செயல்படுவார் என தீர்மானம் நிறைவேறியது. பின்னர், அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்ப ராமதாஸிடம் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மூன்று பக்க அறிக்கையை வழங்கினார். அதில், “புத்தாண்டு…

Read More

நாக்கு புற்றுநோய் என்பது வாய்வழி புற்றுநோயின் ஒரு வடிவமாகும், இது நாவின் திசுக்களில் உருவாகிறது. இது ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும், அங்கு ஆரம்பகால கண்டறிதல் பயனுள்ள சிகிச்சை மற்றும் சிறந்த விளைவுகளுக்கு முக்கியமானது. புற்றுநோய் பொதுவாக நாக்கின் மூன்றில் இரண்டு பங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, ஆனால் அடிவாரத்திலும் ஏற்படலாம். ஸ்டேட்பெர்ல்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தொடர்ச்சியான புண்கள், அசாதாரண திட்டுகள், கட்டிகள், வலி அல்லது விழுங்குவதில் உள்ள சிரமம் போன்ற ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைத் தூண்டும். ஆரம்பகால நோயறிதல் வெற்றிகரமான சிகிச்சையின் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது மற்றும் சிக்கல்களின் அபாயத்தை குறைக்கிறது. தடுப்பு மற்றும் ஆரம்ப தலையீட்டிற்கு அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை அறிந்திருப்பது அவசியம்.நாக்கு புற்றுநோய் என்றால் என்ன: அதன் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்நாக்கு புற்றுநோய் பொதுவாக நாக்கின் மூன்றில் இரண்டு பங்கு (வாய்வழி நாக்கு) பாதிக்கும் ஸ்குவாமஸ் செல் புற்றுநோயைக் குறிக்கிறது. இது…

Read More

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்றும், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, “இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். எனவேதான், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளன. இந்துத்துவ பின்னணி, ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை அவர்கள் (பாஜக) குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் நாங்கள் அதை எதிர்க்கிறோம். நாட்டில் பிளவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. எனவேதான், அதற்கு பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பின் மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய,…

Read More

‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம் எழுச்சிப் பயணம்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 34 நாட்களில் 100 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய இபிஎஸ், 100-வது தொகுதியாக ஆற்காட்டை எட்டியுள்ளார். மேற்கு மண்டலத்தில் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் என 34 நாட்களில் 10,000 கிலோமீட்டர் பயணித்து 100 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளார். சுற்றுப் பயணத்துக்காக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் இருந்தபடி மக்களை சந்தித்து வரும் இபிஎஸ், ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும்போது, விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரிடம் 150-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளையும் நேரடியாகக் கேட்டுள்ளார். சுற்றுப் பயணம் தொடர்பாக அதிமுக தரப்பில் வெளியான புள்ளிவிவரங்களில், இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்ட…

Read More

ஹார்வர்ட் நிபுணர்களின் கூற்றுப்படி, எல்.டி.எல் குறைப்பதிலும், பிளேக் அபாயத்தைக் குறைப்பதிலும் ஸ்டேடின்கள் போன்ற மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. சில சான்றுகள் ஆதரவு அணுகுமுறைகள் பின்வருமாறு:மத்திய தரைக்கடல் உணவு: ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், காய்கறிகள், மீன் மற்றும் முழு தானியங்கள் நிறைந்தவை, இது இதய நோய் அபாயத்தை 30%வரை குறைக்கிறது.உடற்பயிற்சி: ஏரோபிக் உடற்பயிற்சிகளும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன, எச்.டி.எல் உயர்த்துகின்றன, எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வாரத்திற்கு சுமார் 150 நிமிடங்கள் தங்கத் தரமாகும்.புகைபிடிப்பதை விட்டு வெளியேறுதல்: சிகரெட் புகை தமனி சுவர்களை சேதப்படுத்துகிறது, மேலும் அவை பிளேக் கட்டமைப்பிற்கு மிகவும் பாதிக்கப்படுகின்றன. வெளியேறுவது தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் எச்.டி.எல்.இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகித்தல்: உயர் இரத்த அழுத்தம் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் பிளேக் உறுதியற்ற தன்மையை துரிதப்படுத்துகிறது.புதிய புரிதலைத் தவிர்ப்பது துல்லியமானது, கொழுப்பு எண்களைத் துரத்துவதை…

Read More

புதுடெல்லி: சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியவை தற்போது வெளியாகி உள்ளது. அமைச்சர் வாங் யி தனது உரையில், “இந்திய – சீன உறவுகள் ஒத்துழைப்புக்குத் திரும்புவதற்கான நேர்மறை போக்கைக் காட்டுகின்றன. இரு நாடுகளும் ஒன்றையொன்று போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும். இந்தியா – சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு தற்போது 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாம் கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இரு நாடுகளும் சரியான உத்தி ரீதியிலான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் தங்கள் மதிப்புமிக்க வளங்களை இரு நாடுகளும் முதலீடு செய்ய வேண்டும். முக்கிய அண்டை…

Read More