ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. அவர்கள் இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். என்று பெசென்ட் விமர்சித்துள்ளார். பெசென்ட் இந்தியாவை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில், “அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், இந்தியா மீது அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கக்கூடும்” என்று பெசென்ட் எச்சரித்திருந்தார். கடந்த 10 நாட்களில், ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்திற்காக இந்தியாவை மீண்டும் மீண்டும் குறிவைத்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.…
Author: admin
சிவகங்கை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் மோடி தமிழகத்தின் மீது எப்போதும் மரியாதையும், அன்பும் வைத்திருப்பவர். இந்திய பிரதமர்களிலேயே அதிக முறை தமிழகத்துக்கு வந்து மக்களுக்கு அள்ளி கொடுத்தவர் மோடி. சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்தபோது ரூ.4,900 கோடிக்கான திட்டங்களை தொடக்கி வைத்தார். தற்போது குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சார்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை நிறுத்தியுள்ளார். அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் மாநிலங்களவை, மக்களவை என 57 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் நிறுத்தினாலும் எண்ணிக்கைப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும். கடந்த 1996-ம் ஆண்டு…
காய்ச்சல் பருவம் காய்ச்சல், இருமல் அல்லது சில நாட்கள் வேலையைக் காணவில்லை என்பது மட்டுமல்ல. பல, குறிப்பாக வயதான பெரியவர்கள் மற்றும் அடிப்படை நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு, இது உயிருக்கு ஆபத்தான நோயாக மாறும். காய்ச்சல் தடுப்பூசி எளிமையான சொற்களில் பேசப்படுகிறது, “இது காய்ச்சலைத் தடுக்கிறது.” ஆனால் உண்மையான கதை வேறு விஷயம். காய்ச்சல் தடுப்பூசிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே ..இதய நோயாளிகள் மற்றும் பக்கவாதத்தில் இருந்து தப்பியவர்களுக்கு இது ஏன் அதிகம் தேவைஅமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனைப் பொறுத்தவரை, சமீபத்திய பருவங்களில் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து பெரியவர்களில் பாதி பேர் இதய நோய் வைத்திருந்தனர். இன்ஃப்ளூயன்ஸா நுரையீரலை மட்டும் பாதிக்காது என்பதை இது காட்டுகிறது; இது இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பிலும் அழுத்தத்தை அளிக்கிறது. ஏற்கனவே இதய நோய் அல்லது பக்கவாத வரலாற்றுடன் வாழும் மக்களுக்கு, நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் பாதிக்கப்படக்கூடியது. ஒரு காய்ச்சல் நோயின்…
சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை தேர்வு செய்யாதது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ‘இதில் அவரது தவறு எதுவும் இல்லை. இப்போதைக்கு வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டி உள்ளது’ என ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்யாதது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். டி20 கிரிக்கெட் பார்மெட்டில் கடந்த இரண்டு சீசன்களாக அவரது ஆட்டம் அபாரமாக உள்ளது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய அவர், 600+ ரன்களை 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். மிடில் ஆர்டரில் இறங்கி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடும் திறன் படைத்தவர். கடந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன். உள்ளூர் கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி…
மதுரை: கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் 2024-ல் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, 27 கோயில்களில் ரூ.85 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பொத்தன்புளி கிராமத்தில் 2.94 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு ரூ.6 கோடியில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று விதி இருக்கிறது. எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும், பழனி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்ட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. பழனி கோயில் நிதியில் கள்ளிமந்தையம்,…
ஆரோக்கியமான வயதானதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தசை வெகுஜன, வலிமை மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. நாம் வயதாகும்போது, அனபோலிக் எதிர்ப்பு எனப்படும் புரதத்தைப் பயன்படுத்துவதில் உடல் குறைவான திறமையாகிறது, இது அதிக புரத உட்கொள்ளலை அவசியமாக்குகிறது. தசை ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம் மற்றும் உயிர்ச்சக்தி ஆகியவற்றை ஆதரிக்க, வழக்கமான வலிமை பயிற்சியுடன் ஜோடியாக ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் சுமார் 1.6 கிராம் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் வாராந்திர உணவில் பலவிதமான புரதங்கள் நிறைந்த உணவுகளை உள்ளடக்கியது தசையை பாதுகாப்பது மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியம், இதய செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது, இது உங்கள் வயதில் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது.ஒவ்வொரு வாரமும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிறந்த புரதம் நிறைந்த உணவுகள்மத்திஅமெரிக்க வேளாண் திணைக்களத்தின் கூற்றுப்படி, மத்தி சிறிய, எண்ணெய் மீன் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை,…
மும்பை: மும்பையில் கனமழை பொழிந்து வரும் நிலையில் மின் தடை காரணமாக நடுவழியில் மோனோரயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பாதிக்கப்பட்டது. இதனால் அதில் பயணித்த சுமார் 400 பயணிகள் செய்வதறியாது தவித்தனர். தற்போது அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மின் தடை காரணமாக மோனோரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக மும்பை பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் தங்களது பராமரிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. “மழை காரணமாக ஹார்பர் லைன் மூடப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மக்கள் மோனோரயிலில் பயணித்தனர். அதன் காரணமாக ரயில் அதன் தடத்தில் இருந்து சாய்ந்தது, மேலும் மின் தடை ஏற்பட்டதாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது” என மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். தீயணைப்பு படையினர் மீட்பு பணியை மேற்கொள்வதற்குள் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பயணிகள் வெளிவர முயன்றனர்.…
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். இது குறித்து கூறிய அவர், “தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். ‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. “இது ஆக்ஷன், ஃபேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.
வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நீர் புகுந்ததுடன், சாலைகளையும் அணை நீர் மூழ்கடித்தது. இதனால் கிராமப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் 21 கிலோ மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியாக நீர்மட்டம் உயரும்போது அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கீழக்காமக்காபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வரை நீர் கடல்போல் தேங்கி நிற்கும். தற்போது தொடர் நீர்வரத்தினால் கடந்த 5ம் தேதி நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நீர்மட்டம் இன்று 69.70 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளதால் வைகை அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வரை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் சர்க்கரைப்பட்டி-மேலக்காமக்காபட்டி இடையே நீர் சூழ்ந்துள்ளது.…
கிரீடம் இளவரசி மெட்டே-மாரிட்டின் 28 வயதான மகன் மரியஸ் போர்க் ஹைபி மீது 32 கிரிமினல் குற்றங்கள் மீது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், நான்கு பாலியல் பலாத்காரம், வீட்டு வன்முறை, தாக்குதல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் உட்பட 32 கிரிமினல் குற்றங்களுக்காக முறையாக நோர்வே தற்போது உலகளாவிய கவனத்தின் மையத்தில் உள்ளது.ஹைபி நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, ரகசியமாக சம்மதமின்றி தாக்குதல்களை படமாக்கினர். ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார்- அவர் முன்பு டேட்டிங் செய்திருந்தார்- மரண அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சி, கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறுதல் மற்றும் போக்குவரத்து குற்றங்கள். உள்நாட்டு வன்முறையுடன் கைது செய்யப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டில் அவரது சட்ட சிக்கல்கள் முதன்முதலில் வெளிவந்தன, இது ஒரு பரந்த விசாரணைக்கு வழிவகுத்தது, இது 2018 ஆம் ஆண்டிற்கு முந்தைய குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியது.மரியஸ்…