Author: admin

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக பள்​ளிக்​கல்வி அமைச்​சருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​திய நிலை​யில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்​றுகை போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டிருப்​ப​தாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்​ளது. அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம், இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்​களின் உரிமை​களை பறிக்​கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்​வது என்பன உள்பட 10 அம்சகோரக்​கைகளை வலியுறுத்தி தமிழ்​நாடு தொடக்​கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு (டிட்​டோ-ஜாக்) சார்​பில் தொடர்ந்து பல்​வேறு வடிவங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஆக.22-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) கோட்டை நோக்கி முற்​றுகை​யிடும் போராட்​டம் நடத்​தப்​படும் என டிட்​டோ-ஜாக்அமைப்பு அறி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், அந்த அமைப்​பின் உயர்​நிலைக் குழு உறுப்​பினர்​களு​டன் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தலை​மைச் செயல​கத்​தில் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் டாக்​டர்…

Read More

சென்னை: தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ – ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக…

Read More

சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 24 மாதங்​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள பணப்​பலன்​களை வழங்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் (சிஐடி​யு) சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்​னை​யில் பல்​ல​வன் இல்​லம் முன்பு நேற்று நடை​பெற்​றது. பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலா​ளர்​களுக்கு 24 மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வுக்​கால பலன்​களை வழங்க வேண்​டும்; பணி​யில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்​பந்த நிலு​வையை கொடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாநிலம் முழு​வதும் 21 மையங்​களில் போக்​கு​வரத்து ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள் காத்​திருப்பு போராட்டத்தை தொடங்​கி​யுள்​ளனர். இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையக​மான பல்​ல​வன் இல்​லம் முன்பு அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் – சிஐடியு சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்த போராட்​டத்​துக்கு சங்​கத்​தின் தலை​வர் ஆர்​.துரை தலைமை வகித்​தார். சிஐடியு மாநிலத் தலை​வர்…

Read More

புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

Read More

சென்னை: எந்த நி​தி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ளதா என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறுவன இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் உள்​ளிட்ட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக தாக்​கல் செய்​திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால் சாட்​சிகளை கலைத்து வழக்கு விசா​ரணையை நீர்த்​துப்​போகச் செய்து விடு​வார் என்​று குறிப்​பிட்​டார். அந்த வாதத்தை ஏற்க…

Read More

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல்…

Read More

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நாளை தொடங்​கு​கிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர். நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26), பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வின் இறுதி சுற்று தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் கலந்​து கொண்டு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்​களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்பட உள்​ளது. இதற்​கிடையே, பிளஸ் 2 துணை தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான துணை கலந்​தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணை​ய​வழி​யில் நடை​பெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்​கள் விண்​ணப்​பி்த்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. துணை கலந்​தாய்வு முடிவடைந்த பிறகு, பொறி​யியல் படிப்​பில் எஸ்சி அருந்​த​தி​யர் ஒதுக்​கீட்​டில் உள்ள காலி​யிடங்​களில், எஸ்சி மாணவர்​கள் சேரு​வதற்​கான சிறப்பு கலந்​தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடை​பெறும். 26-ம் தேதி​யுடன் ஒட்டு மொத்த கலந்​தாய்வு…

Read More

சென்னை: ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். தெலங்​கானா மாநிலம் ஹைதரா​பாத்​தில் உள்ள உஸ்​மானியா பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணனுக்​கு, தெலங்​கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்கி சிறப்​பித்​தார். தொடர்ந்து நாராயணன் பேசி​ய​தாவது: நடப்​பாண்​டில் இந்​திய ராக்​கெட்​டு​களைப் பயன்​படுத்தி அமெரிக்​கா​வின் 6,500 கிலோ எடை​யுள்ள தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளை விண்​வெளி​யில் நிலைநிறுத்​தும் பணி​கள்மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இதுத​விர, தொழில்​நுட்ப செயல் விளக்​கச் செயற்​கைக்​கோள் (TDS) மற்​றும் தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளான ஜிசாட்​-7ஆர் ஆகிய​வற்​றை​யும் விண்​ணில் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தற்​போதுள்ள ஜிசாட்-7 (ருக்​மிணி) செயற்​கைக்​கோளுக்கு மாற்​றாக இந்​திய கடற்​படைக்​காக ஜிசாட்​-7ஆர் பிரத்​யேக​மாகவடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மறைந்த விஞ்​ஞானி அப்​துல் கலாம் உரு​வாக்​கிய முதல் ராக்​கெட் 17 டன் எடை கொண்​டது. இது35 கிலோ எடையை…

Read More

சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்னும் 8 இணையதளங்களில் தொடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் சைபர் கண்காணிப்பு நடைமுறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுடைய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை…

Read More

மிதமான உணர்ச்சி விழிப்புணர்வுடன் ஜோடியாக இருக்கும்போது, இசை நினைவகத்தை மேம்படுத்த முடியும் என்பதை சமீபத்திய யு.சி.எல்.ஏ ஆய்வு வெளிப்படுத்துகிறது. அல்சைமர் அல்லது பி.டி.எஸ்.டி உள்ள நபர்களில் நினைவகத்தை மேம்படுத்த ஹிப்போகாம்பஸ் மீதான இசையின் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சரியான உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்டுவதற்கு இசையை வடிவமைத்தல் ஒரு ஆக்கிரமிப்பு அல்லாத சிகிச்சை அணுகுமுறையை வழங்கக்கூடும். இசை சிகிச்சை என்று அறியப்படுகிறது, ஆனால் இது உங்கள் நினைவகத்தை அதிகரிக்க முடியுமா? சரி, அது முடியும். ஒரு புதிய ஆய்வில், இசையைக் கேட்பது மூளையை கூர்மைப்படுத்தும் என்றும், நரம்பியக்கடத்தல் கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. யு.சி.எல்.ஏ நரம்பியல் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் அல்சைமர் நோய், பதட்டம் மற்றும் பி.டி.எஸ்.டி ஆகியவற்றிற்கான இசையின் சிகிச்சை திறனைக் கண்டறிந்தது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்படுகின்றன.மூளையில் இசையின் தாக்கம் சில வேலைகளைச் செய்யும்போது இசையைக் கேட்பது செயல்பாட்டை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது…

Read More