Author: admin

வேலூர்/சென்னை: அணைக்​கட்டு தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வந்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூட்டத்தில் நோயாளி இல்​லாத ஆம்​புலன்​ஸ் கடந்து செல்ல முயன்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. ‘அடுத்த கூட்​டத்​தில் வேண்டுமென்றே ஆளில்​லாத ஆம்​புலன்​ஸ் வந்​தால் அதன் ஓட்​டுநர் நோயாளி​யாக செல்​வார்’ என பழனி​சாமி எச்​சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்​பட்​டது. வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு தொகு​தி​யில் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற சுற்​றுப்​பயணத்​தில் நேற்று முன்​தினம் இரவு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பிரச்​சார வாகனம் வந்து நின்​றதும் அருகே இருந்த சிறிய தெரு​வில் இருந்து ஆம்​புலன்​ஸ் வாக​னம் ஒன்று சைரன் ஒலித்​த​படி கடந்து சென்​றது. அதில் நோயாளி இல்​லாமல் இருப்​பதை அதி​முக தொண்​டர்​கள் பார்த்து கூச்​சலிட்​டனர். இதனால், அதிருப்தி அடைந்த பழனி​சாமி, “என்​னோட ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் இதே​போல் ஆளே இல்​லாமல் ஆம்​புலன்ஸை தொடர்ச்​சியா அனுப்பி மக்​களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்​கிறது. இதனால் மக்​களுக்கு ஏதாவது ஒன்​றா​னால் யார்…

Read More

சென்னை: ​முன்​னாள் படைவீரர்​கள் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​கான ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, தொழில் தொடங்​கு​வதற்​கான ஒப்​புதல் ஆணை​களை​யும் வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாம் சுதந்​திரக் காற்றை சுவாசிக்க, கொட்​டும் மழை​யிலும், குளிரிலும் தமது இன்​னு​யிரை​யும் பொருட்​படுத்​தாது தாய் நாட்​டுக்​காக தங்​களது இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​களின் நலன் காக்க பல்​வேறு திட்​டங்​களை அரசு செயல்​படுத்தி வரு​கிறது. கடந்​தாண்டு முதல்​வர் ஸ்டா​லின், தனது சுதந்​திர தின உரை​யில் ‘‘தாய்​நாட்​டுக்​காகத் தங்​கள் இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​கள் பாது​காப்​பான வாழ்க்​கையை உறுதி செய்​ய​வும், வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும், ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​படும்’’ என அறிவித்தார். அதன்​படி, முதல்​வர் ஸ்டா​லின், நேற்று “முதல்​வரின் காக்​கும் கரங்​கள்” திட்​டத்தை…

Read More

சென்னை: ஓய்​வூ​தி​யர் பணப்​பலன் வழங்​கு​வதற்​காக ரூ.1,137 கோடியை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தற்​காலிக முன்​பண​மாக (கடன்) தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றால், பிற அரசுத்​துறை ஊழியர்​களைப் போல ஓய்​வு​பெறும் நாளில் பணப்​பலன் வழங்​கப்​படு​வ​தில்​லை. அதன்​படி, போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்கு தற்​போது வரை பணப்​பலன் வழங்​கப்​பட​வில்​லை. இதனால் சிஐடியு சார்​பில் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய அளவில் தொடர் காத்திருப்பு போ​ராட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக பணப்​பலன் வழங்​கு​வது தொடர்​பான அரசாணை வெளியானது. இதுதொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறைச் செயலர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்குவரத்துக் கழகங்​களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்​பாண்டு ஜனவரி வரை ஓய்​வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்​காலத்​தில் மரணமடைந்​தவர்​களுக்​கும் பணப்​பலன் வழங்​கும் வகை​யில் நிதி​யுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார். இதை பரிசீலித்த அரசு,…

Read More

சென்னை: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்ட நிலத்தை வாங்​கிய​வர்​களுக்​கு, அவர்​கள் தாங்​கும் அளவி​லான தொகை நிர்​ண​யிக்​கப்​பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் சு.​முத்​து​சாமி தெரி​வித்​தார். இதுகுறித்​து, தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வீட்​டு​வசதி வாரி​யத்​தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்​படுத்த முயற்சி எடுக்​கப்​பட்டு அது முழு​மை​யாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்​களை வாரி​யம் பயன்​படுத்த முடிய​வில்​லை. அதே​நேரம் அதன் உரிமை​யாளர்​களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்​தது. இது முதல்​வர் முதல்​வர் கவனத்​துக்​குச் சென்​றதும், எல்​லோருக்​கும் சட்​ட​திட்​டங்​களுக்கு உட்​பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தி​னார். அதற்​காக வீட்​டு​வசதி வாரி​யம், வீட்​டு​வச​தித் துறை இணைந்து அந்த நிலங்​கள் 5 வகை​யாக பிரிக்கப்பட்​டன. இதுத​விர்த்த 10,575 ஏக்​கர் நிலம் எதிர்​காலத்​தில் எடுக்​கலாம் என்று உத்​தேசிக்​கப்​பட்ட நில​மாகும். இந்த இடத்தை அந்த நில உரிமை​யாளர்​கள் மற்​றவர்​களுக்கு சிறிது, சிறிய​தாக விற்​று​விட்டு போய்​விட்​டார்​கள். இதில், வாங்​கிய​வர்​களும் பாதிக்​கப்​படக்…

Read More

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக பள்​ளிக்​கல்வி அமைச்​சருடன் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​திய நிலை​யில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்​றுகை போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டிருப்​ப​தாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்​ளது. அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம், இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்​களின் உரிமை​களை பறிக்​கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்​வது என்பன உள்பட 10 அம்சகோரக்​கைகளை வலியுறுத்தி தமிழ்​நாடு தொடக்​கக் கல்வி ஆசிரியர் இயக்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக் குழு (டிட்​டோ-ஜாக்) சார்​பில் தொடர்ந்து பல்​வேறு வடிவங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதன் தொடர்ச்​சி​யாக, 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஆக.22-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) கோட்டை நோக்கி முற்​றுகை​யிடும் போராட்​டம் நடத்​தப்​படும் என டிட்​டோ-ஜாக்அமைப்பு அறி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், அந்த அமைப்​பின் உயர்​நிலைக் குழு உறுப்​பினர்​களு​டன் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தலை​மைச் செயல​கத்​தில் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் டாக்​டர்…

Read More

சென்னை: தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ – ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக…

Read More

சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 24 மாதங்​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள பணப்​பலன்​களை வழங்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் (சிஐடி​யு) சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்​னை​யில் பல்​ல​வன் இல்​லம் முன்பு நேற்று நடை​பெற்​றது. பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலா​ளர்​களுக்கு 24 மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வுக்​கால பலன்​களை வழங்க வேண்​டும்; பணி​யில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்​பந்த நிலு​வையை கொடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாநிலம் முழு​வதும் 21 மையங்​களில் போக்​கு​வரத்து ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள் காத்​திருப்பு போராட்டத்தை தொடங்​கி​யுள்​ளனர். இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையக​மான பல்​ல​வன் இல்​லம் முன்பு அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் – சிஐடியு சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்த போராட்​டத்​துக்கு சங்​கத்​தின் தலை​வர் ஆர்​.துரை தலைமை வகித்​தார். சிஐடியு மாநிலத் தலை​வர்…

Read More

புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

Read More

சென்னை: எந்த நி​தி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ளதா என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறுவன இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் உள்​ளிட்ட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக தாக்​கல் செய்​திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால் சாட்​சிகளை கலைத்து வழக்கு விசா​ரணையை நீர்த்​துப்​போகச் செய்து விடு​வார் என்​று குறிப்​பிட்​டார். அந்த வாதத்தை ஏற்க…

Read More

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல்…

Read More