புதுடெல்லி: புதிய பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதன் காரணமாக அறிமுகம் செய்யப்பட்ட 4 நாட்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கூறியுள்ளதாவது: தனியார் வாகனங்கள் ரூ.3,000 கட்டணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்டேக் பாஸ் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.15) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடியை ஓராண்டு அல்லது 200 முறை கடந்து செல்ல முடியும். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த பயண அட்டையை பெறுவதற்காக பதிவு செய்துகொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் வருடாந்திர பாஸ் வாங்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, ஹரியானா மாநிலங்கள் உள்ளன. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி 1.4 லட்சம்…
Author: admin
தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாப்பது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை விட மிக அதிகம்; இது உங்கள் தட்டில் தொடங்குகிறது. தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் ஊட்டச்சத்து வகிக்கும் முக்கிய பங்கை அறிவியல் ஆராய்ச்சி பெருகிய முறையில் எடுத்துக்காட்டுகிறது. தோல் புற்றுநோய்க்கான ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வு, முழு உணவுகளிலிருந்தும் உணவு ஆக்ஸிஜனேற்றிகள் எவ்வாறு புற ஊதா -தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்தையும், மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய்களின் தொடக்கத்தையும் தடுக்க உதவும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில உணவுகள், தக்காளி, கேரட், இலை கீரைகள், பெர்ரி, கொட்டைகள், விதைகள் மற்றும் கொழுப்பு மீன்கள் போன்றவை, இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க உதவுகின்றன, தோல் பழுதுபார்ப்பதை ஆதரிக்கின்றன மற்றும் இயற்கை பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துகின்றன. சரியான உணவைக் கொண்டு, உங்கள் தோல் சூரிய சேதம், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு மிகவும் நெகிழ்ச்சியுடன்…
கைரன் குவாசி. வெறும் 16 வயதில், அவர் ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுகிறார், அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் ஸ்டார்லிங்க் திட்டம்மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதற்கான எலோன் மஸ்கின் பணிக்கு பங்களிப்பு. குவாசியின் அசாதாரண பயணம் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது 14 மணிக்கு, அவரை ஆக்கியது இளைய பட்டதாரி பள்ளியின் 170 ஆண்டு வரலாற்றில். அவரது திறமை, உறுதிப்பாடு மற்றும் அறிவுசார் ஆர்வத்திற்காக அறியப்பட்ட அவர், வயது தொடர்பான தடைகளை தொடர்ந்து உடைத்துள்ளார். இப்போது, அவர் சேரும்போது சிட்டாடல் செக்யூரிட்டீஸ் ஒரு அளவு டெவலப்பர்குவாசி தனது பொறியியல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை அளவு நிதியத்தின் வேகமான உலகிற்கு பயன்படுத்த உள்ளார்.எலோன் மஸ்க்குடன் பணிபுரிய ஸ்பேஸ்எக்ஸை விட்டு வெளியேறுவதற்கு முன் கைரன் குவாசியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி பயணம்கைரன் குவாசி ஒரு குடும்பத்தில் பிறந்தார், இது தொழில்நுட்ப நிபுணத்துவத்தை நிதி…
வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலைவர் மார்க் ரூட் உள்ளிட்டோரும் உடன்…
விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆக.31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு, ராமதாஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் அன்புமணியால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராமதாஸால் நடத்தப்பட்ட மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனரான ராமதாஸே பாமகவின் தலைவராக செயல்படுவார் என்ற தீர்மானம் நிறைவேறியது. மேலும், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவற்றை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்புமாறு கட்சியின் கவுரவத் தலைவர் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம், தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் பேசியதாவது: பட்டானூரில் நடைபெற்ற மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், செயல் தலைவர்…
வேலூர்/சென்னை: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் வந்து நின்றதும் அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சைரன் ஒலித்தபடி கடந்து சென்றது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஒன்றானால் யார்…
சென்னை: முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின், தனது சுதந்திர தின உரையில் ‘‘தாய்நாட்டுக்காகத் தங்கள் இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்’’ என அறிவித்தார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின், நேற்று “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தை…
சென்னை: ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றால், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போல ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன் வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு,…
சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, அவர்கள் தாங்கும் அளவிலான தொகை நிர்ணயிக்கப்பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்களை வாரியம் பயன்படுத்த முடியவில்லை. அதேநேரம் அதன் உரிமையாளர்களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்தது. இது முதல்வர் முதல்வர் கவனத்துக்குச் சென்றதும், எல்லோருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதற்காக வீட்டுவசதி வாரியம், வீட்டுவசதித் துறை இணைந்து அந்த நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டன. இதுதவிர்த்த 10,575 ஏக்கர் நிலம் எதிர்காலத்தில் எடுக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்ட நிலமாகும். இந்த இடத்தை அந்த நில உரிமையாளர்கள் மற்றவர்களுக்கு சிறிது, சிறியதாக விற்றுவிட்டு போய்விட்டார்கள். இதில், வாங்கியவர்களும் பாதிக்கப்படக்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்வது என்பன உள்பட 10 அம்சகோரக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக.22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக்அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர்…