மும்பை: மும்பையில் தொடரும் கனமழை காரணமாக அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த…
Author: admin
கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 81 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். கேப்டன் தெம்பா பவுமா 74 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்கே 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்களையும், பென் டூவார்ஷுயிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 96 பந்துகளில்,…
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல் போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது” எனக் கூறியுள்ளார். முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…
நாகர்கோவில்: தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அவற்றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்களில் தேசியகீதத்துக்குப் பதிலாக, அதே மெட்டில் கிறிஸ்தவப் பாடலை பாடுவது, ஒலிபரப்புவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் தேசியக் கொடியேற்றிய பின்னர், தேசிய கீதம் மெட்டுடன் கிறிஸ்தவப் பிரச்சார பாடல்பாடப்படும் வீடியோ கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த நிகழ்வு நடந்த இடம் நாகர்கோவில் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மற்றும் உளவுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நாகர்கோவிலில் நடந்ததுபோல பரவி வரும் வீடியோவில்,…
ச una னா குளியல் பல நூற்றாண்டுகளாக, குறிப்பாக நோர்டிக் நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மனதையும் உடலையும் ஓய்வெடுக்கவும், நச்சுத்தன்மையாக்கவும், புத்துயிர் பெறவும் இது ஒரு வழியாகும். ஆனால், ச una னா குளிப்பின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நன்மைகளுக்கு அப்பால், நவீன அறிவியல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவை வழக்கமான ச una னா பயன்பாட்டின் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை வெளிப்படுத்துகின்றன. ச una னா குளியல் போன்ற ஒரு ஓய்வுநேர செயல்பாடு நம் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயல்பட முடியும் என்று யார் நினைத்திருப்பார்கள்? இது குறைக்கப்பட்ட மன அழுத்தம், மேம்பட்ட சுழற்சி மற்றும் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.உலகம் தொடர்ந்து முன்னேறி வருவதால், மருத்துவ அறிவியலும், ச una னா சிகிச்சையானது உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை முறை பழக்கமாக உருவாகி வருகிறது.ச una னா குளியல் என்றால் என்னசூடாகவும்…
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். எனவே, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இதனிடையே, ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என தோவல் தெரிவித்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ்…
செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த டி.குகேஷுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 36-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நேரலை உலக தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் லேவோன் அரோனியன், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை 41-வது நகர்த்தலின் போது தோற்கடித்தார். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி அறிவிப்பு: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங் தாக்குர்…
கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் 24 நாட்களில் ரூ.104 கோடியை வசூல் செய்துள்ளது. கூலி, வார் 2 படங்களின் பிரம்மாண்டத்துக்கு இடையிலும் இந்தப் படம் வசூல் அள்ளி வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல விநியோகஸ்தர் என்எஸ் ராஜ்குமார் என்பவர் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை: மதுரை பாரப்பத்தியில் நாளை நடக்கும் விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறை, குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலைச் சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை, தங்கப்பாண்டி உள்ளிட்டோர் மாநாட்டுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுத் திடலை பார்வையிட்ட மதுரை எஸ்.பி. அரவிந்த், மாநாட்டுக்கான பாதுகாப்பு, நெரிசலை தவிர்க்கும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு…
புதுடெல்லி: அரிய வகை கனிமங்களை இந்தியாவுக்கு வழங்கத் தயார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அறிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார். இதைத் தொடர்ந்து அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர். அதில் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கப்பாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் சீன அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். இதுதொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் வாங் யி தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்…