Author: admin

இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டடு. இதை அடுத்து, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

Read More

தலைமுடிக்கு உலகளாவிய நன்மைகளைக் கொண்ட உள்ளூர் இந்திய புதையல், மண்டு கி இம்லி, அல்லது பாபாப் எண்ணெய் ஆகியவற்றின் அதிசயங்களைக் கண்டறியவும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இந்த ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய், உச்சந்தலையை வளர்ப்பது, முடியை வலுப்படுத்துகிறது, மீண்டும் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. வழக்கமான பயன்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து, தடிமனான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலுக்கு வழிவகுக்கும், இது பல்வேறு முடி கவலைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. நீங்கள் எப்போதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டுவுக்குச் சென்றிருந்தால், நீங்கள் ஒரு கதைப்புத்தகத்திலிருந்து வெளியே வந்ததைப் போல தோற்றமளிக்கும் உயரமான, ரஸ-டிரங்க் மரங்களைக் கண்டிருக்கலாம். அதுதான் பாபாப் மரம், அல்லது உள்ளூர்வாசிகள் அதை அழைப்பது போல, மண்டு கி இம்லி. பெயர் அதன் உறுதியான பழத்திலிருந்து வருகிறது, இது ஒரு பெரிய புளி நெற்று போல் தெரிகிறது. ஆனால் உள்ளே, இது நன்மையின் முழு புதையல் மார்பு.இந்த மரம் ஆப்பிரிக்காவில்…

Read More

சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இவரது தொழிற்கூடத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, பக்கத்து கடைக்காரர் அவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேவேந்திர சவுத்ரி விரைந்து வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த இரும்பு பெட்டகம், காஸ் கட்டர் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதில் இருந்த வைர கற்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இரும்பு பெட்டகத்தில் ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக தொழிற்கூடம் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் வைர கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் தொழிற்கூடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சாதனங்களையும் அவர்கள்…

Read More

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்​டம்​பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடை​பெறுகிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடி​யாக தகுதி பெறும். பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலைத் தொடர்ந்து இந்​தியா நடத்​திய சிந்​தூர் ஆபரேஷன் நடவடிக்​கை​யால் ஆசிய கோப்​பை​யில் பாகிஸ்​தான் பங்​கேற்​பது நிச்​சயமற்​ற​தாக இருந்​தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்​வதற்கு பாகிஸ்​தான் அணிக்கு விசா வழங்க மத்​திய அரசு சம்​மதம் தெரி​வித்​தது. ஆனால் பாகிஸ்​தான் ஹாக்கி அணி பாது​காப்பு காரணங்​களை கூறி வரமறுத்​தது. இந்​நிலை​யில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்​தான், ஓமன் அணி​களுக்கு பதிலாக வங்​கதேசம், கஜகஸ்​தான் அணி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக போட்டி அமைப்​பாளர்​கள் அறி​வித்​துள்​ளனர். இதன்​படி ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், கஜகஸ்​தான்…

Read More

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இதில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றி மாறன் தரப்பி்ல், ‘மனுஷி’ படத்தில் எந்தவொரு ஆட்சேபகரமான காட்சிகளும் இடம்பெறவில்லை. விதிகளுக்கு புறம்பாக, தணிக்கை வாரியம் 37 காட்சிகளை நீக்கக்கோரியுள்ளது. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும், என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அந்த படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளதா, இல்லையா என்பதை படத்தைப் பார்த்து அதன்பிறகே முடிவுக்கு வரமுடியும். எனவே ஆக.24 அன்று இப்படத்தை சென்னை இசைக்கல்லூரியில் உள்ள திரையரங்கில் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது தணிக்கை…

Read More

புதுடெல்லி: அமெரிக்கா​வுக்​கான இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது. முதல் ​கட்​ட​மாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்​தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறி​வித்​துள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்​கம் அளித்​துள்​ளார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் கூடு​தல் வரி விதிப்பு அமலுக்கு வரு​வதற்கு முன்​பாக அந்த நாட்​டுக்கு அனுப்​பப்​படும் இந்​திய பொருட்​களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதி​கரித்து வரு​கிறது. இதுகுறித்து பொருளா​தார நிபுணர்​கள் கூறிய​தாவது:…

Read More

மலச்சிக்கல் உண்மையில் அமெரிக்காவில் மிகவும் பொதுவானது. மக்கள்தொகையில் சுமார் 15% நாள்பட்ட மலச்சிக்கலுடன் கையாள்கிறது, மதிப்பீடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து சுமார் 9% முதல் 20% வரை கூட உள்ளன. அதாவது பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த பிரச்சினையுடன் போராடுகிறார்கள்! இது ஒரு “பழைய நபரின் பிரச்சினை” மட்டுமல்ல – இது 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் அடிக்கடி நிகழ்கிறது (மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படலாம்), இது எந்த வயதிலும் நிகழலாம். பெண்கள் மலச்சிக்கல் என்று சொல்வதை விட ஆண்களை விட மூன்று மடங்கு அதிகம், மேலும் இது அல்லாத மக்களிடையே அதிகம் புகாரளிக்கிறது.மக்கள் பெரும்பாலும் அதைப் பற்றி தங்கள் மருத்துவர்களிடம் பேசுவதில்லை – இது சங்கடமாக இருந்தாலும் கூட. பெரும்பாலான மக்கள் அதை மருந்துகளை விட மேலதிக தீர்வுகளுடன் கையாள முயற்சிக்கிறார்கள். நீங்கள் மலச்சிக்கலை உணர்ந்தால், நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை, மேலும் மக்கள் ஜி.ஐ. மருத்துவரைப் பார்ப்பதற்கு இது மிகவும்…

Read More

மும்பை: மும்​பை​யில் தொடரும் கனமழை காரண​மாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பை​யில் கடந்த 4 நாட்​களாக கனமழை கொட்​டித் தீர்த்து வரு​கிறது. நேற்று பெய்த கனமழை காரண​மாக சாலைகளில் வெள்​ளம் புரண்​டோடியது. மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகா​ராஷ்டி​ரா​வின் பல்​வேறு பகு​தி​களில் அடுத்த 2 நாட்​களுக்கு கனமழை நீடிக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை செய்​துள்​ளது. கனமழை காரண​மாக மும்​பை​யில் உள்ள அனைத்து பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​களுக்கு விடுமுறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கனமழை, வெள்​ளம் காரண​மாக மும்​பை​யில் உள்ள மாநில அரசு அலு​வல​கங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தனி​யார் நிறு​வனங்​களைச் சேர்ந்த…

Read More

கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 98 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது ஆஸ்​திரேலிய அணி. ஆஸ்​திரேலி​யா​வின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான எய்​டன் மார்க்​ரம் 81 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் தெம்பா பவுமா 74 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​களும், மேத்யூ ப்ரீட்​ஸ்கே 56 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​களும் சேர்த்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் டிரா​விஸ் ஹெட் 4 விக்​கெட்​களை​யும், பென் டூவார்​ஷு​யிஸ் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர். 297 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 40.5 ஓவர்​களில் 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 96 பந்​துகளில்,…

Read More

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல் போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது” எனக் கூறியுள்ளார். முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read More