வளர்சிதை மாற்ற தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸ் (MASH) க்கு சிகிச்சையளிப்பதற்காக, எடை இழப்பு மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு பரவலாக அறியப்பட்ட ஒரு மருந்தான செம்ப்ளூட்டைடை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த ஒப்புதல் கல்லீரல் நோய் சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் மாஷ் என்பது கல்லீரலில் கொழுப்பு கட்டமைத்தல் மற்றும் வீக்கத்தால் ஏற்படும் ஒரு முற்போக்கான நிலை. அதன் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் அறிகுறியற்றது, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நோய் சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய்க்கு அமைதியாக முன்னேறும். எடை குறைப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் இரண்டையும் குறிவைப்பதன் மூலம், அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு செமக்ளூட்டைட் இரட்டை நன்மையை வழங்குகிறது. வல்லுநர்கள் இதை ஒரு முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள், கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு முதல் பயனுள்ள மருந்தியல் விருப்பத்தை வழங்குகிறார்கள், இது உலகளாவிய சுகாதார அக்கறையாக விரைவாக…
Author: admin
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பாஜக. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து முகாம்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை முகாமுக்கு வந்த நபர் ஒருவர் தாக்கினார். நடந்தது என்ன? – முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீஸார் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின்படி அந்த நபர் 41 வயதான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது.…
சென்னை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மோசமான வானிலை நிலவுவதால், மும்பையில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மும்பை – சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பை – சென்னை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை ஏர் இந்தியா விமானம், சென்னை – மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதமானது. விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுத்து, அவர்கள் மாற்று விமானங்களில், பயணிக்க ஏற்பாடுகளை செய்தது.
சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியாவில் ‘சாட்ஜிபிடி கோ’ என்ற புதிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த சந்தா திட்டத்தின் மூலம் பயனர்கள் சாட்பாட் உடன் இலவசமாக பயன்படுத்துவதை காட்டிலும் 10 மடங்கு கூடுதலாக சாட்ஜிபிடி-யை பயன்படுத்த முடியும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அந்த வகையில் மெசேஜ் மற்றும் இமேஜ் ஜெனரேஷன் என சாட்பாட்டை தடையின்றி பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தாமல் சாட்ஜிபிடி-யை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட வரம்பு உள்ளது. அதை பயனர்கள் கடக்கும் போது தொடர்ந்து சாட்ஜிபிடி உடன் ‘சேட்’ செய்ய முடியாது. தற்போது கட்டண சந்தா மூலம் அதை ஓபன் ஏஐ மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக ‘சாட்ஜிபிடி கோ’ என்ற மாதாந்திர கட்டண சந்தா அறிமுகமாகி உள்ளது. இதன் கட்டணம் மாதத்துக்கு ரூ.399 என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யுபிஐ மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்தலாம்…
அந்த காலை கப் சாய், ஸ்னீக்கி மாலை பிஸ்கட் அல்லது இரவு நேர கோலா, நமது உணவுத் தேர்வுகள் நம் பற்களை மட்டுமல்ல, நம் இதயத்தையும் எவ்வளவு பாதிக்கின்றன என்பதை நாம் அடிக்கடி உணரவில்லை. வாய்வழி ஆரோக்கியம் ஒரு பிரகாசமான புன்னகையை விட அதிகம் என்று பல் மருத்துவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தியுள்ளனர்; இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதய ஆரோக்கியத்துடன். NIH இன் ஆய்வின்படி, ஈறு நோய் மற்றும் குழிகள் போன்ற நிலைமைகள் உடலில் வீக்கத்தைத் தூண்டும், காலப்போக்கில் இருதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.வெள்ளி புறணி? உங்கள் உணவு ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியாக இருக்கலாம். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பற்களை வலுப்படுத்தாது மற்றும் குழிகளை வளைகுடாவில் வைத்திருக்காது, இது ஆரோக்கியமான இதயத்தையும் ஆதரிக்கும். நாம் சாப்பிடுவதைப் பற்றி நினைவில் இருப்பதன் மூலம், நம்முடைய புன்னகையையும் இருதய அமைப்பு இரண்டையும் பாதுகாக்க முடியும். எனவே, வாய்வழி ஆரோக்கியத்திற்கான…
புதுடெல்லி: மாநில அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாட உள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக தீபாவளிக்குள் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குறைந்த பட்சம் 5 சதவீதம், அதிகபட்சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தற்போது 12 சதவீத வரி விதிப்பில் உள்ள பொருட்கள் 5 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்படும். 28 சதவீத…
சென்னை: திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி(80). இவர்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உட்பட 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் ரேணுகா தேவி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலமானார். இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள டி.ஆர்.பாலுவின் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ரேணுகா தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், இரா.முத்தரசன், உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: உள்நாட்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க, வெளிநாடுகளில் இருந்து மலிவான விலையில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்திஉள்ளது. இது தொடர்பாக, இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஜிதேந்திர சோப்ரா சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாம் தினமும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அலுமினிய பொருளைப் பயன்படுத்துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்வொன்றிலும் அலுமினியப் பொருட்கள் உள்ளன. ஸ்கூட்டர், கார், மெட்ரோ ரயில், பேருந்து, ராக்கெட் வரை எல்லாவற்றிலும் அலுமினியப் பொருள் உள்ளது. இந்தியாவின் அலுமினிய உருக்கு சந்தை சீராக விரிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் 8.39 பில்லியன் டாலரில் இருந்த இந்திய சந்தை 2035-ல் 22.5 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனா, வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியாவில் இருந்து…
உங்கள் உறைவிப்பான் வால்மார்ட்டிலிருந்து உறைந்த இறால்களை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் லேபிளை இருமுறை சரிபார்க்க விரும்பலாம். கதிரியக்கத்தின் தடயங்கள் கண்டறியப்பட்ட பின்னர் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால்களை நினைவுகூருவதை அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று அறிவித்தனர்.இறால் பி.டி என்ற நிறுவனத்திலிருந்து வந்தது. பஹாரி மக்மூர் செஜதி மற்றும் வால்மார்ட் 13 மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டார் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது. சோதனைகள் சில இறால்களில் கதிரியக்க ஐசோடோப்பு சீசியம் -137 ஐக் கண்டறிந்தன. இப்போது. இன்னும், ஒரு பிடிப்பு இருக்கிறது.தற்போது வால்மார்ட் அலமாரிகளில் உள்ள இறால்கள் எதுவும் கதிர்வீச்சுக்கு சாதகமாக சோதிக்கப்படவில்லை என்றாலும், அதே சப்ளையரின் தயாரிப்புகள் செயலாக்கப்பட்டிருக்கலாம் அல்லது இலட்சியத்தை விட குறைவான நிலைமைகளில் நிரம்பியிருக்கலாம் என்று எஃப்.டி.ஏ விளக்கியது. இது மாசுபடும் அபாயத்தை உயர்த்துகிறது. இங்கே பெரிய கவலை: காலப்போக்கில் சீசியத்திற்கு குறைந்த அளவிலான வெளிப்பாடு கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.என்ன கதிரியக்க இறால்?அடிப்படையில், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறால் சீசியம்…
புதுடெல்லி: நாடு முழுவதிலும் ரயில்களில் செல்லும் பலர் பெருமளவு சுமைகளை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதில் அவர்கள் உடைமைகள் தவிர வேறு பல பொருட்களையும் சுமையாக எடுத்துச் செல்கின்றனர். தற்போது வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து வியாபாரப் பொருட்ளுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த சூழலில், இனி ரயில் பயணிகள் அனைவருக்கும் சுமை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. தற்போது விமானப் பயணிகளுக்கு குறிப்பிட்ட எடைக்கு மேற்பட்ட சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் ரயில் பயணிகளிடமும் வசூலிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக நாட்டின் அனைத்து ரயில் நிலைய நுழைவாயில்களிலும் மின்னணு எடை இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இவற்றில் எடை போடப்பட்ட பிறகே சுமைகள் பிளாட்பாரம் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளன. ரயில்களில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு தலா 35 கிலோ சுமை அனுமதிக்கப்பட உள்ளது. இது, முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிக்கு 40 கிலோ, ஏசி 3டயர் பெட்டிக்கு…