காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கன் உள்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் மடீன் கானி இதனைத் தெரிவித்துள்ளார். சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லாததாலும், ஓட்டுநர்களின் கவனக்குறைவினாலும் ஆப்கனிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களில் ஈரானில் இருந்து 18 லட்சம் ஆப்கனியர்கள் வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தானில் இருந்து 1,84,459 பேரும், துருக்கியில் இருந்து 5,000 பேரும் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.…
Author: admin
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை நடைபெறவுள்ள பாஜக மண்டல பூத் கமிட்டி மாநாடு, அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர். அவருடைய தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது. சி .பி.ராதாகிருஷ்ணன் நேர்மையானவர். அவர் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவரை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசியிருக்கிறேன், கடிதமும் எழுதி இருக்கிறேன். தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம், தமிழர் மரபு, தமிழ்,…
புடவைகளுக்கு வரும்போது, ரேகா இருக்கிறார், பின்னர் எல்லோரும் இருக்கிறார்கள்.
ராஞ்சி: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூமில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத 50,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் அதிரடியாக நீக்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கிழக்கு சிங்பூமில் மொத்தமுள்ள 1,64,237 செயல்படாத ரேஷன் கார்டுகளில், 50,323 பேரின் பெயர்கள் சரிபார்ப்பு இயக்கத்தின்போது நீக்கப்பட்டுள்ளன. 576 அட்டைதாரர்கள் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டாலும், 1,13,338 பேரின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. துணை ஆணையர் கர்ண் சத்யார்த்தியின் உத்தரவின் பேரில், சரிபார்ப்பைத் தொடர்ந்து பட்டியலில் இருந்து தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களின் பெயர்களை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 20,067 பெயர்கள் ஆதார் அட்டை எண்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் நீக்கப்பட்டது. இதுபோன்ற 2,500-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. 18 வயதுக்குட்பட்ட அல்லது 100 வயதுக்கு மேற்பட்ட 2,274 ஒற்றை உறுப்பினர் அட்டைதாரர்களின் பெயர்களை அதிகாரிகள் நீக்கியுள்ளதாகவும்,…
‘திடீரென எங்கிருந்து வந்தார் ஷுப்மன் கில்?’ என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார். ஆம்! ஆசியக் கோப்பைக்கான டி20 தொடர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை சூசகமாக முடிக்க, கம்பீரும் அகார்கரும் முடிவெடுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஏன் சஞ்சு சாம்சன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? அதுவும் கில் தேர்வுக்கும் இதற்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகள் எழலாம். ஆனால், லாஜிக் அதுதான். நிச்சயம் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை. முதல் தெரிவு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா என்று அகார்க்கர் கூறிவிட்டார். கில், அபிஷேக் சர்மா தொடங்க, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் என்ற வரிசையில் நிச்சயம் சஞ்சுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க, யாரைத் திருப்தி செய்ய…
மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர், ரசிகர்கள் வருகையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்பு மேடையில் இருந்தபடி ‘ரிமோட்’ மூலம் 100 அடி உயரக் கம்பத்தில் கட்சியை கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,000 கிலோ எடை கொண்ட 100 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் தயாரிக்கப்பட்டது. நேற்று முதலே…
பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த விஷயங்களில் ஃபாஸ்டாக் ஒன்றாகும். இது ஒரு விஷயம், இது டோல் பூத் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பயணிகளுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது உள்ளிட்ட பல சிக்கல்களைத் தீர்த்தது. நெடுஞ்சாலைகளை மிகவும் மலிவு மற்றும் வசதியானதாக மாற்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ஆகஸ்ட் 15, 2025 அன்று வருடாந்திர பாஸை தொடங்கியது.ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் என்பது தனியார் வாகன உரிமையாளர்களை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் 3,000 டாலர் கட்டணத்திற்கு 200 கட்டணமில்லா பயணங்களை எடுக்க அனுமதிக்கும் ஒரு ப்ரீபெய்ட் வசதி ஆகும். பாஸ் ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும், எது முதலில் வந்தாலும்.ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸின் சில பிரதான காரணிகளைப் பார்ப்போம்:தகுதிவருடாந்திர பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனியார், வணிகரீதியான வாகனங்களுக்கு மட்டுமே. டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் போன்ற வணிக வாகனங்கள் இதைப் பயன்படுத்த முடியாது. பாஸ் நேரடியாக ஃபாஸ்டாக்…
மும்பை: மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும், மழைப்பொழிவு குறைந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கினர். மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், மும்பை, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், மும்பையில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தானே மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தானே மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். செவ்வாய்கிழமை காலை முதலான 24 மணி நேரத்தில் மும்பையின் சில பகுதிகளில் 250 மிமீ மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளான விக்ரோலியில் 262 மிமீ மழை பதிவாகி உள்ளது. கங்கன், காட்…
புதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர். எதிரிகளை முறியடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ”இந்திய நாட்டை சிறந்த வல்லரசாக ஆக்க வேண்டும் என்று பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நம் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள் என்றால் அது ராஜீவ் காந்தியின் சாதனை. இதையெல்லாம் மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இது தேர்தலின் முதல்கட்ட பணி. எந்தொரு கருத்து வேறுபாடும் இல்லாமல்…
தனிப்பட்ட எல்லைகளை அமைக்க வேண்டிய அவசியம்அன்பும் நெருக்கமும் எப்போதுமே எல்லாவற்றிற்கும் ‘ஆம்’ என்று சொல்வது என்று அர்த்தமல்ல. அதற்கு பதிலாக, ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது ஒருவரின் அமைதியைப் பாதுகாக்கவும், உறவுகளை வலுப்படுத்தவும், மரியாதை பெறவும் உதவுகிறது. வாழ்க்கையில் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டிய 10 முக்கியமான எல்லைகளை இங்கே பட்டியலிடுகிறோம்: