Author: admin

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் பிரிவு 54ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடுமையான குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு…

Read More

சென்னை: வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும். பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது…

Read More

இயற்கை எடை இழப்பு தீர்வுகளைத் தேடுவதில், எலுமிச்சை நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் (ஏ.சி.வி) ஆகியவை அவற்றின் சுகாதார நலன்களுக்காக அறியப்பட்ட இரண்டு பிரபலமான தேர்வுகள். எலுமிச்சை நீர் மற்றும் ஏ.சி.வி இரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், பசியை அடக்குவதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும் என்று நம்பப்படுகிறது. எலுமிச்சை நீர் நீரேற்றத்தை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் ஆப்பிள் சைடர் வினிகர் கொழுப்பு எரியலை ஊக்குவிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. எலுமிச்சை நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகருக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள எடை இழப்புக்கான சிறந்த விருப்பத்தைத் தேர்வுசெய்ய உதவும். மேம்பட்ட எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக இந்த இயற்கை பானங்களை உங்கள் உணவில் பாதுகாப்பாக இணைக்கவும்.ஒப்பிடுதல் எலுமிச்சை நீரின் நன்மைகள் மற்றும் எடை இழப்புக்கு ஆப்பிள் சைடர் வினிகர்எலுமிச்சை நீர்…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரை பகு​தி​களில் ரூ.75,000 கோடி​யில் 3 கப்​பல் கட்​டும் தளங்​களை உருவாக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதுகுறித்து மத்​திய துறை​முக அமைச்​சக வட்டாரங்கள் கூறுகை​யில், “இந்​தி​யா​வின் கிழக்கு மற்​றும் மேற்கு கடற்​கரைப் பகுதிகளில் 3 கப்​பல் கட்​டும் தொகுப்​பு​களை அமைக்க அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. ஒவ்​வொரு பசுமைக்கள (கிரீன்​பீல்​டு) கப்பல் கட்​டும் தொகுப்​பும் ரூ.25,000 கோடியில் உரு​வாக்​கப்​படு​ம்” என்று தெரி​வித்​துள்​ளன. இதுகுறித்து அரசு வட்​டாரங்​கள் கூறுகை​யில், “கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்க உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச கப்​பல் கட்​டும் நிறு​வனங்​களு​டன் ஐந்து மாநிலங்​கள் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளன. கப்​பல் கட்​டும் தளங்​களின் ஒன்​றில் ஒரு கப்​பல் உடைக்​கும் ஆலை​யும் உள்​ளடங்​கி​யிருக்​கலாம். இது, கப்​பல் கட்​டு ​மானங்​களுக்​கான பொருட்​களை வழங்க ஏது​வாக அமை​யும். இந்த கப்​பல் கட்​டும் தளங்​களை உரு​வாக்​கு​வதற்​கான திட்​டங்​களை இறுதி செய்​யும் பணி​யில் துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழிபோக்​கு​வரத்து அமைச்​சகம் ஈடு​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தன.…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் வழங்கக் கோரிய வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என வாதிடப்பட்டது. மாநகராட்சியின் நடவடிக்கையால் 2,000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளை போல தூக்கி எறியக்கூடாது என வாதிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில், பணியாளர்களை வீசி எறியப் போவதில்லை. வேலையை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.…

Read More

திருச்சி: திருச்சியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்வதற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன. நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுமார் 25 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அத்துடன் நுகர்வோரிடம், சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் காஸ் விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று…

Read More

அன்றாட பயன்பாட்டிற்கு அவர்கள் முற்றிலும் பாதுகாப்பானது என்று கருதி, இரண்டாவது சிந்தனை இல்லாமல் அட்வில், மோட்ரின், அல்லது அலீவ் போன்ற வலி நிவாரணி மருந்துகளை பலர் அடைகிறார்கள். எவ்வாறாயினும், இந்த பொதுவான மருந்துகளைப் பயன்படுத்தும் போது மாரடைப்பால் தப்பியவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கலாம் என்று 2012 ஆய்வு தெரிவிக்கிறது. புழக்கத்தில் உள்ள ஜர்னலில் வெளியிடப்பட்ட, ஆராய்ச்சி அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் (என்எஸ்ஏஐடிகளின்) விளைவுகளை ஆய்வு செய்தது, மேலும் அவை மீண்டும் மீண்டும் மாரடைப்பு மற்றும் இருதய நோயின் வரலாற்றைக் கொண்ட நபர்களிடையே இறப்பின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தது. குறைந்த முதல் மிதமான அளவுகளில் அவ்வப்போது பயன்படுத்துவதற்கு NSAID கள் பொதுவாக பாதுகாப்பாக கருதப்பட்டாலும், மாரடைப்பை அனுபவித்தவர்கள் இந்த மருந்துகளை உட்கொள்வதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. அபாயங்களைப் புரிந்துகொள்வது மற்றும் பாதுகாப்பான மாற்றுகளை ஆராய்வது நீண்டகால இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுவலி…

Read More

புதுடெல்லி: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தின்போது தெரிவித்தார். குடியரசு தலைவர் மற்றம் ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தக்கு 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிப்பது தொடர்பான வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான 5 நீதிப​தி​கள் கொண்ட அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடங்​கி, இன்றும் நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆளுநர் பதவி என்பது ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கான ஒரு புனித இடம் அல்ல. மாறாக அது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒரு பாலம். அந்த வகையில், ஆளுநர்கள், மத்திய – மாநில அரசுகளுக்கு…

Read More

சென்னை: ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016- 21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில், தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு…

Read More

கோவை: ஜவுளி தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனைத்து வகையான பஞ்சுக்கும் 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தொழில் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பருத்தியை மையமாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித்துறை சுமார் 35 மில்லி யன் மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. முக்கிய மூலப்பொருளான பஞ்சு பற்றாக்குறையை சமாளிக்க உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தது. தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31-ம் தேதி வரை சலுகை நீட்டிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் நீண்ட இழை பருத்திக்கு மட்டும் வரியில்…

Read More