Author: admin

‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் தமிழ் பதிப்புக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டு தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஆமிர்கான். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இந்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை பேட்டியொன்றில் விவரித்துள்ளார் ஆமிர்கான். அப்பேட்டியில் ஆமிர்கான், “’லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். ஆகையால் நடிப்பிலிருந்து பிரேக் எடுக்க விரும்பினேன். இது தொடர்பாக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் கூறினேன். முதலில் என் முடிவில் மிகவும் ஏமாற்றமடைந்தார். பின் புரிந்துக் கொண்டார். ஒரு நடிகராக எனது சூழலை புரிந்துக் கொண்டு, தயாரிப்பாளராகத் தொடரச் சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்டேன். பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் என இருவரிடம் இப்படத்தில் நடிக்க பேசினோம். இந்தி மற்றும் தமிழில் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு…

Read More

சென்னை: “எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் வாய்கிழிய வீர வசனம் பேசிய முதல்வர், அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களுக்கு இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன்?.” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர். காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாகக் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நிகிதாவிற்கு உதவி புரிந்த கோவில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரைக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர். மீண்டும் நேற்று காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணையில் இருந்த…

Read More

நேர்மையான உரையாடல்கள் எந்தவொரு நீடித்த திருமணத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. உங்கள் கூட்டாளரிடம் உங்கள் மனதைப் பேசுங்கள், ஆனால் மெதுவாகச் செய்யுங்கள். மேலும், தொடர்பு இரு வழி தெருவாக இருக்க வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறந்த மற்றும் நேர்மையான பேசுவதை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், தீர்ப்பு இல்லாமல் செயலில் கேட்பதையும் உள்ளடக்கியது. உங்கள் கூட்டாளருடன் சரிபார்க்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குங்கள்- உங்கள் வெற்றிகள், விரக்திகள் அல்லது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கோபமாக இருக்கும்போது உரையாடல்களைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, உங்கள் உணர்ச்சிகளைக் குறை கூறாமல் வெளிப்படுத்த “நான்” அறிக்கைகளை (“நான் எப்போதும்…” என்று விட “நான் உணர்கிறேன்…”) பயன்படுத்தவும். இதற்கிடையில், உங்கள் கூட்டாளியின் கருத்துக்களை நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. காலப்போக்கில், இந்த பழக்கம் தவறான புரிதல்களைக் குறைக்கிறது மற்றும் உங்கள் இருவருக்கும் இடையில் நம்பிக்கையை உருவாக்குகிறது.

Read More

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் வாரங்களில் வாஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் பயணம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று, “காசாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள். பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்!!!” என்று தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்துவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினார். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு ட்ரம்ப் பலமுறை…

Read More

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது ஜூலை 25-ம் தேதி ‘தலைவன் தலைவி’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இப்படத்தில் யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ‘தலைவன் தலைவி’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை விரைவில் பிரம்மாண்டமாக நடத்தி, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. >>வீடியோ லிங்க்

Read More

மதுரை: தமிழகத்தில் 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனவரி.9-ல் தேமுதிக நிலைப்பாட்டை தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து அவர் தெரிவிப்பார். செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது போல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தேமுதிகவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 2011-ல் விஜயகாந்த் தலைமையில் 29 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றனர். அதேபோல பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலும் கூடுதல் எம்எல்ஏக்கள் கோட்டைக்கு செல்வதே எங்கள் ஆசை. அதற்காக நான் பாடுபடுகிறேன். விஜய் தேர்தலுக்கு வருவது அவரது பலம். அது அவரது கட்சி. கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய்…

Read More

நகரங்கள் சில நேரங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும், பெங்களூரு அத்தகைய விதிவிலக்கல்ல. போக்குவரத்துக்கு இடையில், ஹான்கிங், விரைவாக தப்பிக்க விரும்புவது இயல்பு. ஆனால் திட்டமிடல்? முன்பதிவு செய்கிறதா? பயணத்திட்டங்கள்? இல்லை, எப்போதும் இல்லை. சில நேரங்களில், நீங்கள் விரும்புவது படுக்கையில் இருந்து உருண்டு, ஒரு பையில் சில சிற்றுண்டிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஓட்ட வேண்டும்.நல்ல செய்தி என்னவென்றால், பெங்களூருவில் இருந்து ஒரு நாள் பயணங்கள் இங்கே பூஜ்ஜிய முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் 100% தன்னிச்சையான ஆற்றல் தேவைப்படுகின்றன.அவலாபெட்டாபரந்த காட்சிகள் மற்றும் நந்தி ஹில்ஸை விட மிகக் குறைவான மக்கள் கொண்ட ஒரு பாறை மலை. இங்கே ஒரு கிளிஃப் எட்ஜ் உள்ளது, அது ஒரு கற்பனை திரைப்படத்திலிருந்து நேராக வெளிவருகிறது, டிராகன்கள் அல்ல, உங்கள் சில்லுகளைத் திருட முயற்சிக்கும் குரங்குகள்.மேலும் வாசிக்க: உலகின் 7 அதிசயங்கள், அவை எங்கே அமைந்துள்ளனசுஞ்சி நீர்வீழ்ச்சிகனகபுராவுக்கு அருகிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி முற்றிலும் ஒன்றும் செய்யாததற்கு ஏற்றது,…

Read More

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயனர்களின் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் தரவுகளை கொண்டு தங்களது ஏஐ மாடலுக்கு பயிற்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக்கில் பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களை கூட மெட்டா ஏஐ ஸ்கேன் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொழில்நுட்பம் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ‘டெக் கிரன்ச்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஃபேஸ்புக் பயனர்கள் சிலர் ஸ்டோரி அப்லோட் செய்ய முயன்றபோது ஒரு ‘பாப் அப்’ நோட்டிபிகேஷன் வந்ததாகவும். அதில்…

Read More

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஹரிப்ரியா, பிந்து மாதவி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. இப்படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கிறது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மு.மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்தது குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா ரிவீவ் எழுதிய திமுக அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?. விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே…

Read More