துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10-ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.…
Author: admin
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் தொடர்பான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார். ஆயுதம் தாங்கிய வீராங்கனை போல அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அவதார்’ போன்ற வேறு ஒரு பிரபஞ்சம் உட்பட இரண்டு தனித்துவமான உலகில் இதன் கதை நடக்கிறது என்கிறார்கள்.
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 10-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் ஆன் லைன் விண்ணப்பத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல விண்ணப்பதாரர்கள் தேர்வு மையம் மாற்றம், சான்றிதழ் விவரங்களில்…
ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வில், படி மற்றும் நேர அடிப்படையிலான உடற்பயிற்சி குறிக்கோள்கள் சுகாதார விளைவுகளை சமமாக மேம்படுத்துகின்றன மற்றும் ஆயுட்காலம் நீட்டிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் 14,000 க்கும் மேற்பட்ட பெண்களின் தரவை பகுப்பாய்வு செய்தனர், அதிக உடல் செயல்பாடு நிலைகள், படிகள் அல்லது நேரத்தால் அளவிடப்படுகின்றன, இறப்பு மற்றும் இருதய நோயின் அபாயத்தை கணிசமாகக் குறைத்தன. ஸ்மார்ட்வாட்ச் இல்லாமல் உடற்பயிற்சி என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம். உடற்பயிற்சியின் போது நாம் எவ்வளவு முன்னேற்றம் கண்டோம் என்பதை அறிய விரும்புவதில் நாம் அனைவரும் வெறித்தனமாக இருக்கிறோம். ஆனால் வழக்கமாக உங்கள் முன்னேற்றத்தை எவ்வாறு அளவிடுவது? நடக்கும்போது, படிகள் அல்லது நிமிடங்களை எண்ணுகிறீர்களா?ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு இதை ஆய்வு செய்தது. உடற்பயிற்சி இலக்குகளை நிமிடங்கள் அல்லது படிகளில் அளவிட வேண்டுமா என்று அவர்கள் ஆராய்ந்தனர். கண்டுபிடிப்புகள் ஜமா உள் மருத்துவத்தில் வெளியிடப்பட்டுள்ளன.படிகள்…
ஒரு குறிப்பிடத்தக்க புதைபடிவ கண்டுபிடிப்பு 120 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு தலை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது ஹைபலோசொரஸ்ஒரு சிறிய, நீண்ட கழுத்து நீர்வாழ் ஊர்வன ஆரம்பகால கிரெட்டேசியஸ் காலம். வடகிழக்கு சீனாவின் யிக்சிய உருவாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தனித்துவமான மாதிரி அச்சு பிளவுபடுத்தலின் தெளிவான அறிகுறிகளைக் காட்டுகிறது, இது ஒரு அரிய வளர்ச்சி ஒழுங்கின்மை, இதில் ஒரு கரு இரட்டையர்களாகப் பிரிக்கத் தொடங்குகிறது, ஆனால் செயல்முறையை முடிக்கத் தவறிவிட்டது, இதன் விளைவாக இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு உயிரினம் உருவாகிறது.பாம்புகள், பல்லிகள் மற்றும் ஆமைகள் போன்ற நவீன கால ஊர்வனவற்றில் இதேபோன்ற குறைபாடுகள் காணப்பட்டாலும், இந்த புதைபடிவம் முதுகெலும்பு புதைபடிவ பதிவில் அத்தகைய நிலைக்கு அறியப்பட்ட மிகப் பழமையான எடுத்துக்காட்டு. உயிரியல் கடிதங்களில் பஃபெட்டாட் மற்றும் சகாக்கள் நடத்திய 2007 ஆய்வில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, பிறவி குறைபாடுகள் ஏற்படுவது குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது பண்டைய இனங்கள். ஆரம்ப…
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில் இந்த முறை அறிமுகமாகிவிட்டது.எப்படி இருக்கும்? – மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளில் உண்மை என நம்பும்படி நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள சவால்களை தீர்க்கும் திறமையின் அடிப்படையில் நீங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். உதாரணமாக, விமான ஓட்டிக்கான உரிமம் வழங்கும் தேர்வின்போது பொய் விமானம் உருவாக்கப்பட்டு ‘simulation’ முறையில் தேர்வு நடத்தப்படும். அதன் மற்றொரு மேம்பட்ட வடிவத்தை மெய்நிகர் நேர்முகத் தேர்வு எனலாம். வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு தொடங்கும்போது உங்களுக்கு ஒரு ‘ஹெட்செட்’ அளிக்கப்படும். அதன் வழியே உங்களுக்கான கட்டளைகள் அளிக்கப்படும். அப்போது நீங்கள் ஓர் அலுவலகத்தில் இருப்பது போன்ற சூழலை உணர்வீர்கள். ‘ஹெட்செட்’ என்பது உண்மையில் மெய்நிகர் சாதனம். ‘Oculus’, ‘HTC Vive’ போன்றவை…
சென்னை: பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டமசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: இந்த, 130-வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை…
“உலகின் மிகச்சிறந்த நீதிபதி” என்று அன்பாக அழைத்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ, ஆகஸ்ட் 20, 2025 அன்று தனது 88 வயதில், கணைய புற்றுநோயுடன் நீண்ட மற்றும் தைரியமான போரைத் தொடர்ந்து நிம்மதியாக காலமானார்.அவரது அதிகாரப்பூர்வ பக்கமான ரோட் தீவான ரோட் தீவில் பகிரப்பட்ட அறிக்கையின்படி, நீதிபதி “கணைய புற்றுநோயுடன் நீண்ட மற்றும் தைரியமான போருக்குப் பிறகு தனது 88 வயதில் அமைதியாக காலமானார்.”ஃபிராங்க் கேப்ரியோ மற்றொரு நீதிபதி அல்ல. ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, அவர் ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தில் பணியாற்றினார், தனது நகைச்சுவை, பச்சாத்தாபம் மற்றும் உண்மையான இரக்கமுள்ள தீர்ப்புகளுடன் இதயங்களை வென்றார்.அவரது நீதிமன்ற அறை ஒரு பாதுகாப்பான மண்டலமாக உணர்ந்தது, அங்கு சிறிய குற்றங்கள்-மறந்துபோன திருப்ப சமிக்ஞை அல்லது சிவப்பு-ஒளி மீறல் போன்றவை-புரிதல், கருணை மற்றும் மனிதகுலத்தின் கூடுதல் அளவை சந்தித்தன.பிராங்கின் புகழ்பெற்ற நிலையை உண்மையில் உறுதிப்படுத்தியது பிராவிடன்ஸில் பிடிபட்டது, இந்த இதயப்பூர்வமான தருணங்களை…
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), பாப்பநாயக்கன் பாளையம் (திருப்பூர்), மேல்செட்டிப் பட்டு (திருவண்ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகர் (ஊட்டி), காணை (விழுப்புரம்), விருதுநகர், அணைக்கட்டுச்சேரி, சீனிவாசபுரம் (திருவள்ளூர்), கொடிக்குளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் தற்போது உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக நிலை உருவாக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா…
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 34 நாட்களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்து, 100 தொகுதிகளில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் வகையில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினார். விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினருடன் 150-க்கும் மேற்பட்டகலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், தீர்வுகளையும் வழங்கினார். இந்த சுற்றுப் பயணத்துக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரச்சார பேருந்தில் தொடர் பயணம் செய்துவரும் பழனிசாமி, 34 நாட்களில் 10,000 கி.மீ. தூரம் கடந்து, சராசரியாக நாள்தோறும் சுமார் 14 மணி நேரத்தை மக்களிடையே செலவழித்துள்ளார். இதுவரை அவரது பிரச்சாரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மீண்டும் ரூ.2,500…