Author: admin

அம்லா, அல்லது இந்திய நெல்லிக்காய், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பரவலாக கொண்டாடப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், தோல் மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை ஆகியவற்றின் புகழ்பெற்ற நன்மைகளுக்காக இது பொதுவாக பழச்சாறுகள், கூடுதல், ஊறுகாய் மற்றும் பொடிகளில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், அம்லா அனைவருக்கும் பொருந்தாது. சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் ஒரு ஆய்வின்படி, AMLA இன் பயோஆக்டிவ் சேர்மங்களைக் கொண்டுள்ளது, அவை உணர்திறன் வாய்ந்த நபர்களில் ஒவ்வாமைகளாக செயல்படக்கூடும், அரிப்பு, வீக்கம் அல்லது தோல் எரிச்சலைத் தூண்டும். அதன் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நிலைமைகள் அல்லது உணர்திறன் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் AMLA அறிகுறிகளை மோசமாக்கும் அல்லது சிகிச்சையில் தலையிடக்கூடும்.அம்லா சாப்பிடக்கூடாது1. குறைந்த இரத்த சர்க்கரை (இரத்தச் சர்க்கரைக் குறைவு) உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க…

Read More

புதுடெல்லி: பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சசி தரூர் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செயலரும், எம்​.பி.​யு​மான பிரி​யங்கா காந்தி, கொடூர​மான மசோதா என்று விமர்​சித்​துள்​ளார். ஆனால் மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர்​ சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்​து, அவர் மேலும் கூறும்​போது, ‘‘நீங்​கள் 30 நாள்​கள் சிறை​யில் வைக்​கப்​பட்​டால், அமைச்​ச​ராக தொடர முடி​யு​மா? இது பொது அறிவு சார்ந்த ஒன்​று. இதில் தவறு இருப்​ப​தாக எது​வும் எனக்​குத் தெரிய​வில்​லை. இந்த மசோ​தாவை நாடாளு​மன்​றக் குழு ஆய்​வுக்கு அனுப்​புவது நல்ல விஷ​யம்​தான். குழு​வுக்​குள் விவாதம் நடத்​து​வது​தான் ஜனநாயகத்​துக்கு நல்​லது. ஆகை​யால், விவாதத்தை நடத்​து​வோம்’’ என்​றார். திரு​வனந்​த​புரம் மக்​கள​வைத் தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யான சசி தரூர், அவ்​வப்​போது காங்​கிரஸ் கட்சி மற்​றும் கட்​சி​யின்…

Read More

புதுடெல்லி: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் 29-ம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 31-ம் தேதி ஜப்பானுடனும், செப்டம்பர் 1-ம் தேதி கஜகஸ்தானுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிராக் பிளிக்கரான ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். நடுவரிசை வீரர் ரஜிந்தர் சிங், முன்கள வீரர்களான ஷில்லானந்த் லக்ரா,…

Read More

திருவாரூர்: கூத்​தாநல்​லூர் அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது. திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அபு​தாகிர். வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி சுல்​தான்​பீ​வி(26). இவர்​களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்​றரை வயது ஆண் குழந்தை உள்​ளது. சுல்​தான் பீவி, தனது தாய் மல்​லிகா பீவி(44) மற்​றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேல​கொண்​டாழி கிராமத்​தில் உள்ள வீட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று காலை சுல்​தான் பீவி, வீட்​டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்​கத்​தில் படுக்​க​வைத்​துக்​கொண்​டு, தூங்​கிக் கொண்​டிருந்​தார். மல்​லிகா பீவி வீட்​டின் பின்​புறம் பாத்​திரம் கழு​விக்​கொண்​டிருந்​தார். திடீரென வீட்​டுக்​குள் புகுந்த ஒரு தெரு நாய், தாயின் அரு​கில் தூங்​கிக் கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்விக்​கொண்டு ஓடியது. குழந்​தை​யின் அலறல் சப்​தம் கேட்டு ஓடிவந்த மல்​லிகா பீவி,…

Read More

புதுடெல்லி: இந்​துஸ்​தான் ஏரோ​னாட்​டிக்ஸ் நிறு​வனத்​திட​மிருந்து ரூ.62,000 கோடி மதிப்​பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்​திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது. விமானப்​படை​யில் உள்ள பழைய மிக் -21 ரக போர் விமானங்​களுக்கு மாற்​றாக உள்​நாட்டு தயாரிப்​பான தேஜஸ் இலகு ரக போர் விமானங்​கள் சேர்க்​கப்​படு​கின்​றன. விமானப்​படை​யில் ஏற்​கெனவே 40 தேஜஸ் போர் விமானங்​கள் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன்​பின்பு ரூ.48,000 கோடி மதிப்​பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்​களை வாங்க மத்​திய அரசு ஆர்​டர் கொடுத்​தது. இந்த விமானங்​களுக்​கான இன்​ஜினை வழங்​கு​வ​தில், அமெரிக்கா தாமதம் செய்​த​தால், இதன் விநி​யோகம் குறித்த நேரத்​தில் நடை​பெற​வில்​லை. இதுகுறித்து விமானப்​படை தளபதி ஏற்​கெனவே அதிருப்தி தெரி​வித்​திருந்​தார். அமெரிக்​கா​விடம் இருந்து விமான இன்​ஜின் வந்​ததும் தேஜஸ் போர் விமானங்​கள் விநி​யோகிக்​கப்​படும் என எச்​ஏஎல் நிறு​வனம் உறு​தி​யளித்​தது. தேஜஸ் போர் விமானங்​களின் விநி​யோகத்​தில் தாமதம் ஏற்​பட்​டாலும், ஏச்​ஏஎல் நிறு​வனத்​தின் உள்​நாட்டு…

Read More

ஆப்பிள் சாறு பெரும்பாலும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகக் கருதப்படுகிறது, ஆனால் அதிகப்படியான நுகர்வு மறைக்கப்பட்ட சுகாதார அபாயங்களைக் கொண்டிருக்கலாம். இது இயற்கை சர்க்கரைகளையும் நீரேற்றத்தையும் வழங்கும் அதே வேளையில், முழு ஆப்பிள்களுக்கும் பதிலாக அதை நம்பியிருப்பது செரிமானம், சிறுநீரகங்கள், இரத்த சர்க்கரை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். அதிகப்படியான ஆப்பிள் சாறு குடிப்பது இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும், பல் சிதைவை ஊக்குவிக்கும், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களில் குறையும். இந்த சாத்தியமான பக்க விளைவுகளைப் புரிந்துகொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் போது ஆப்பிள் சாற்றை மிதமாக அனுபவிக்க உதவும்.ஆப்பிள் சாற்றின் 6 பக்க விளைவுகள்இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதுNIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆப்பிள் சாறு பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, இது வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும்…

Read More

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா – சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை. இந்​நிலை​யில், சீனா, இந்​தி​யா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதி​கபட்ச வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களும் அமெரிக்கா​வுக்கு பதிலடி கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ளன. சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ நேற்​று​முன்​தினம்…

Read More

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் மஹீஷ் தீக்‌ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10-ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.…

Read More

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா படுகோன் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவர் தொடர்பான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் அவர் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார். ஆயுதம் தாங்கிய வீராங்கனை போல அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘அவதார்’ போன்ற வேறு ஒரு பிரபஞ்சம் உட்பட இரண்டு தனித்துவமான உலகில் இதன் கதை நடக்கிறது என்கிறார்கள்.

Read More

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 10-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் ஆன் லைன் விண்ணப்பத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 13 முதல் 16 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல விண்ணப்பதாரர்கள் தேர்வு மையம் மாற்றம், சான்றிதழ் விவரங்களில்…

Read More