கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக தலைநகர் கொல்கத்தாவில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தலைமையில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அரசியல் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மேற்குவங்க தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டோம். தற்போது மாநிலம் முழுவதும் 80,681 வாக்குச் சாவடிகள் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக 14,000 வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளோம். பிஹாரில்…
Author: admin
திருச்சி: தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சிக்கு வருகை புரிந்தார். பின்னர், அவர், நாகை பிரச்சாரத்திற்கு கருப்பு காரில் சென்றார். நாகை, திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு இந்த விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். கடந்த செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் துவங்குவதற்காக தவெக தலைவர் விஜய் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தவெக தொண்டர்கள் உள்ளே புகுந்தனர். இவர்களை போலீஸாரும், மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரும் பெருமுயற்சிக்கு பிறகு தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்களோ விஜய்யின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்துக் கொண்டனர். இதனால் விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்நிலையில் இன்று (20-ம் தேதி) விஜய் நாகையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நேற்றிரவு வரை அவர் எப்படி நாகை வருகிறார் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 2…
ரோட்டி மற்றும் அரிசி ஆகியவை இந்திய வீடுகளில் பிரதான உணவுகள், அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகள், ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இரண்டும் சத்தானவை என்றாலும், அவை செரிமானம், முழுமை மற்றும் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதில் வேறுபடுகின்றன. ரோட்டி, முழு கோதுமை அல்லது மல்டிகிரெய்ன் மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது, நார்ச்சத்து அதிகமாக உள்ளது, மெதுவாக ஜீரணிக்கிறது மற்றும் வயிற்றை முழுதாக வைத்திருக்கிறது. அரிசி, குறிப்பாக வெள்ளை அரிசி, குறைந்த நார்ச்சத்து மற்றும் செரிமானத்தை விரைவாகக் கொண்டுள்ளது, இது வயிற்றில் இலகுவாகவும், படுக்கைக்கு முன் பொறுத்துக்கொள்ள எளிதாகவும் இருக்கும். சரியான இரவு உணவு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனெனில் செரிமான அமைப்பு இரவில் குறைகிறது. கனமான அல்லது கடின-ஜீரணிக்கும் உணவு வளர்சிதை மாற்றத்தையும் தூக்கத்தையும் சீர்குலைக்கும், அதே நேரத்தில் அரிசி போன்ற இலகுவான விருப்பங்கள் ஆறுதலையும் சிறந்த ஓய்வையும் ஊக்குவிக்கும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.இரவு உணவு தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதுஇரவு உணவு என்பது அன்றைய…
புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றபோது, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சோனாமா மரக்கன்றை பரிசாக அளித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார். அந்த மரக்கன்றை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நட்டார். இந்த போட்டோவை வெளியிட்ட டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் விடுத்துள்ள செய்தியில் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு கடம்ப மரக் கன்றை இங்கிலாந்து மன்னர் பரிசாக அனுப்பியுள்ளார். தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற பிரதமர் மோடியின் திட்டம், இங்கிலாந்து மன்னரை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இருவரும் உறுதியுடன் உள்ளனர். பருவநிலை மற்றும் சுத்தமான எரிசக்தி உற்பத்தி ஆகியவை காமன்வெல்த் நாடுகளின் முக்கிய விஷயமாக உள்ளது. இவ்வாறு இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முன்னதாக எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 2020 முதல் 2023 ஆம்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.12 கோடியில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா மேம்பாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நாகேஸ் வரராவ் பூங்கா பாரமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.12.22 கோடியில் மேம்பாட்டு பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். 4 ஏக்கர் பரப்பளவு: இப்பூங்கா 1949-ம் ஆண்டு அக்.20-ம் தேதி அப்போதைய மதராஸ் மாகாணத்தின் முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவால் திறக்கப்பட்டது. அப்பகுதியில் வசித்த சுதந்திரப் போராட்ட வீரரான நாகேஸ்வர ராவ் பெயரால் இப்பூங்கா அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை வளம் நிறைந்த இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு சுமார் 4 ஏக்கர் ஆகும். பசுமை நிறைந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட, அழகிய வடிவமைப்புடன் பாரம்பரிய அழகை…
தைராய்டு நோய் எடை அதிகரிப்பு அல்லது சோர்வு விட அதிகமாக உள்ளது – இது பெரும்பாலும் உங்கள் தோல், முடி மற்றும் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் வெளிப்படுகிறது. தைராய்டு சுரப்பி உங்கள் கழுத்தில் ஆழமாக வசிக்கும் அதே வேளையில், தோல் மருத்துவர்கள் மற்றும் தனிநபர்கள் கூட உடலின் மேற்பரப்பில் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கலாம். சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு கோளாறுகள் அசாதாரண இதய தாளங்கள், தொடர்ச்சியான வலி அல்லது மெதுவாக குணப்படுத்தும் காயங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், ஆரம்பகால கண்டறிதல் மிக முக்கியமானது. அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி அசோசியேஷன் அறிவித்தபடி, தைராய்டு நோயின் சாத்தியமான அறிகுறிகளை அடையாளம் காணவும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவும் உதவும் விரிவான சரிபார்ப்பு பட்டியலை வழங்குகிறது.தைராய்டு சுரப்பியைப் புரிந்துகொள்வது: ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தோல், முடி மற்றும் நகங்களை எவ்வாறு பாதிக்கின்றனதைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி.…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக புகார் கூறினார். வாக்கு மோசடி செய்பவர்களையும் இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜை சேர்ந்த அஞ்சனி மிஸ்ரா என்பவர் கூறுகையில், “ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பில் எனது செல்போன் எண் காட்டப்பட்டதால் வியப்பு அடைந்தேன். இந்த எண்ணை நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துள்ளேன். வாக்காளர் பெயரை நீக்க நான் விண்ணப்பம் ஏதும் அளிக்கவில்லை. அப்படியிருக்கையில் எனது செல்போன் எண் காட்டப்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு எனக்கு இடைவிடாமல் அழைப்புகள் வருகின்றன. இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இது தொடர்பாக காவல் துறையை அணுக திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இரண்டாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஓமன் அணி உடனான லீக் ஆட்டத்தில், பீல்டிங் செய்த போது அவர் தலை பகுதியில் காயமடைந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்து அக்சர் படேல் பெவிலியன் திரும்பினார். இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய அக்சர், 4 ரன்களை கொடுத்திருந்தார். அதேபோல 13 பந்துகளில் 26 ரன்களை அவர் விளாசினார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கையாகவும், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் அக்சர் படேல் விளையாடுகிறார். பீல்டிங்கிலும் துல்லியமாக செயல்படுவார். இந்நிலையில், ஓமன் உடனான ஆட்டத்தில் காயமடைந்த…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்தும் தொடர்நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22-ம் தேதி முதல் அக்.1-ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, செப்.22-ம் தேதி விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையடுத்து, நாள்தோறும் ஒரு வழிபாட்டுடன், எச்.சூரியநாராயணன், அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, மாலதி,…